.

Pages

Showing posts with label அதிரை செய்தி. Show all posts
Showing posts with label அதிரை செய்தி. Show all posts

Saturday, April 23, 2016

வாய்க்கால் தெரு சாலையில் வெளியேறும் குடியிருப்பு கழிவு நீரால் பொதுமக்கள் அவதி !

அதிராம்பட்டினம் ஏப்-29
தஞ்சை மாவட்டம், அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு வாய்கால் தெரு குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள பிராதன சாலையில் தேங்கி காணப்படுகிறது. இதனால் இந்த பாதை வழியே நடந்து செல்லும் தொழுகையாளிகள் - வர்த்தகர்கள் - பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Friday, April 1, 2016

மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக வாய்க்கால் தெரு பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி !

வாய்க்கால் தெருவில் அமைந்துள்ள நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 77 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று மாலை பள்ளி வளாகத்தில் நடந்தது.

விழாவிற்கு பட்டுக்கோட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோ. ரவிச்சந்திரன் தலைமை வகித்து ஆண்டு விழா உரை நிகழ்த்தினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் முஹம்மது ஹனீபா, பள்ளி கல்வி குழு தலைவர் கவுன்சிலர் முஹம்மது செரீப், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருள் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி கல்வி குழு உறுப்பினர்கள் முஹம்மது மாலிக், வழக்கறிஞர் அப்துல் முனாப், முஹம்மது இப்ராஹீம், வட்டார வளமைய பயிற்றுனர் டேவிட் ஆரோக்கியராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்  ஜமால் முகமது, ஜாகிர் ஹுசைன், நிருபர் சாகுல்ஹமீத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ஹமீத்கான் சிறப்புரை வழங்கி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக பள்ளி பட்டதாரி ஆசிரியர் கவிக்குமார் வரவேற்புரை ஆற்ற, பள்ளி தலைமை ஆசிரியை ஆர். மாலதி ஆண்டறிக்கை வாசித்தார். விழா முடிவில் பள்ளி உதவி ஆசிரியை கே. கலாதேவி நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், ஊர் பிரமுகர்கள், பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டுவிழாற்கு இணையாக வாய்க்கால் தெருவில் அமைந்துள்ள நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி அமைந்து இருந்ததாக பலர் கருத்து தெரிவித்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )

 


Friday, March 4, 2016

அதிரை பேரூராட்சி 16 வது வார்டு பகுதியில் டேங்கர் லாரியில் தண்ணீர் விநியோகம் !

மிலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள பம்ப்பில் பழுது ஏற்பட்டதால் இந்த பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் சீராக வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டது.

இது தொடர்பாக கடந்த 27-02-2016 அன்று அதிரை நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அதன் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் மற்றும் துணை செயலாளர் சேக் அப்துல்லா மற்றும் முஸ்லீம் லீக் அதிரை நகர நிர்வாகிகள் அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அதுவரையில் டேங்கர் லாரியில் குடிநீர் விநியோகிக்க கேட்டுக்கொண்டனர். குடிநீர் விநியோகத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால் அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் எச்சரித்தபடி தமிழக முதல்வரின் தனிப்பிரிவு ( cm special cell ) ஆன்லைன் புகார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகரம் சார்பில் அனுப்பினர்கள்.

இந்த நிலையில் இன்று [ 04-03-2016 ] காலை 16 வது வார்டு பகுதியில் வீட்டு உபயோகத்திற்கு 2 டேங்கர் லாரியில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டன.  இதன் பணிகளை இந்த பகுதியின் வார்டு உறுப்பினர் முஹம்மது யூசுப் உடனிருந்து கவனித்தார்.

சிஎம்பி லேன் பகுதி ஆபத்தான மின்கம்பம் மாற்றி அமைப்பு !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு சிஎம்பி லேன் பகுதியில் உள்ள ஆபத்தான மின்கம்பம் மாற்றப்பட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது.

இந்த பகுதியில் மின்கம்பம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இவற்றை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க இந்த பகுதி பொதுமக்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து அதிரை மின்சார வாரியம் சார்பில் புதிய மின்கம்பம் இந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. எனினும் மின்கம்பத்தை நடுவதற்கு தொடர்ந்து காலமாதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அதிரை பேரூராட்சியின் 21 வது வார்டு உறுப்பினர் முஹம்மது இப்ராஹீம் தீவிர முயற்சியின் கீழ், அதிரை மின்சார வாரியத்தின் சார்பில் புதிய மின்கம்பம் இன்று நடப்பட்டது. இதன் பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். பணிகளை கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் உடனிருந்து கவனித்தார். 

Thursday, March 3, 2016

அதிரை பேரூராட்சி 11 வது வார்டில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க டேங்கர் லாரி மூலம் குடிநீர் இன்று விநியோகிக்கப்பட்டது. இந்த பகுதி பொதுமக்கள் காலிகுடங்களை எடுத்து வந்து டேங்கர் லாரியில் குடிநீரை பெற்றுச்சென்றனர்.

இதன் பணிகளை இந்த பகுதியின் வார்டு உறுப்பினர் அன்சர்கான் கவனித்தார்.

 

Thursday, February 25, 2016

மார்ச் 3 ந் தேதி அதிரை பேருந்து நிலைய வர்த்தக கடைகள் ஏலம் !

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில், பேரூராட்சி சார்பில் கட்டப்பட்ட 24 வர்த்தக கடைகள் பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பொதுஏலம் எதிர்வரும் 03-03-2016  வியாழக்கிழமை அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நாளை காலை அதிரை பகுதிகளில் ஆட்டோ ஒலிப்பெருக்கி அறிவிப்பு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன் வைப்பு தொகையாக, ரூ 1 லட்சம் என நிர்ணயம் செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Saturday, February 13, 2016

உள்ளிருப்பு போராட்டத்தில் கவுன்சிலர் உம்மல் மர்ஜான் அன்சர்கான் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 19 வது வார்டுகளின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நேற்று [ 12-02-2016 ] பேரூராட்சி அலுவலக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அதிரை பேரூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ரபீக்கா முஹம்மது சலீம், ( 17 வது வார்டு ) செளதா அஹமது ஹாஜா ( 19 வது வார்டு  ), உம்மல் மர்ஜான் அன்சர்கான் ( 11 வது வார்டு ) ஜபுரன் ஜெமீலா ( 10 வது வார்டு  ) ஆகியோர் மன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

உள்ளிருப்பு போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர்களுடன் இணைந்து போராடிய திமுகவை சேர்ந்த 11 வது வார்டு உறுப்பினர் உம்மல் மர்ஜான் அன்சர்கான் தனது கோரிக்கை குறித்து நம்மிடம் கூறுகையில்....
எனது 11 வது வார்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை கழிவு நீர் வடிகால் சீர் செய்வது, பேரூந்து நிலைய முடிக்க வேண்டிய இதர பணிகளை முடித்துவிட்டு ஏலம் விடுதல், பேரூந்து நிலைய மேற்கூரை அமைப்பதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் தொகுதி மேம்பாடு நிதி ரூ 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தகவல் குறித்து பெயர் பலகையை சம்பந்தப்பட்ட பகுதியில் வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டேன்' என்றார். 

Wednesday, February 10, 2016

அதிரையில் திடீர் மூடுபனி ! [ படங்கள் இணைப்பு ]

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த மாதத்தில் பனிப்பொழிவு இருந்தது. இந்நிலையில் சிறிது இடைவெளிக்கு பிறகு அதிரை பகுதிகளில் இன்று அதிகாலை முதல் திடீர் மூடுபனி காணப்பட்டது. இந்த பனிப்பொழிவால் அதிராம்பட்டினம் பகுதியின் நெடுஞ்சாலைகளில் பயணம் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி
சாலைகளில் சென்றன. பனிப்பொழிவு காலை 8 மணி வரை நீடித்தது.

இன்று காலை 7.15 மணியளவில் அதிரை பகுதிகளில் சூழ்ந்திருந்த மூடுபனியின் படங்கள்:

Wednesday, February 3, 2016

கோட்டை அமீர் விருது பெற்ற ஹாஜி M.B. அபூபக்கர் அவர்களுக்கு ஜம்-ஜம் அஸ்ரப் நேரில் சந்தித்து வாழ்த்து !

67 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாக செயலாளர் ஹாஜி M.B. அபூபக்கர் அவர்களுக்கு தமிழக அரசின் உயரிய விருதாக கருதப்படுகிற 'கோட்டை அமீர்' விருது வழங்கி கெளரவித்தார்.

இந்நிலையில் கோட்டை அமீர் விருது பெற்ற M.B அபூபக்கர் அவர்களை செக்கடிமேடு ஜம் ஜம் கோழிக்கடையின் உரிமையாளரும், சமூக ஆர்வலருமாகிய ஜம் ஜம் அஸ்ரப் அவர்கள் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தக்வா பள்ளி நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஹாஜா பகுருதீன், சமூக ஆர்வலர் மு.க.செ முஹம்மது புஹாரி ஆகியோர் உடனிருந்தனர்.