![]() |
| ஏ. சாகுல் ஹமீது |
வறட்சி காலங்களில் ஆடு, மாடுகளை பாதுகாக்க ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தினமும் ஒரு வாளி தண்ணீர் வழங்க வேண்டும் என அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர் ஏ.சாகுல் ஹமீது கோரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் போன்ற பகுதிகளில் அதிகமான வெயில் அடிப்பதாலும், குளங்களில் தண்ணீர் இல்லாததாலும் அதிகமான ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி தத்தளித்து வருகின்றது. வாயில்லா ஜீவன்களை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தினந்தோறும் ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்தால் நன்மை பெறுவதோடு மட்டும் அல்லாமல் கால்நடைகளின் பிரார்த்தனையும் நமக்கு கிடைக்கும். ஆகவே இந்த கோடை காலங்களில் மனிதர்களுக்கு தண்ணீர் பந்தல் அமைப்பது போன்று கால்நடைகளுக்கு தண்ணிர் வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
