.

Pages

Showing posts with label அதிரையில் விருந்து.. Show all posts
Showing posts with label அதிரையில் விருந்து.. Show all posts

Wednesday, December 30, 2015

மச்சான், விருந்துக்கு போகலாம் வர்றீயா?.


மச்சான், விருந்துக்கு போகலாம் வர்றீயா?.

நா வரலேப்பா,

யாம்ப்பா? உடம்புக்கு ஏதும் பண்ணுதா?

இல்லே!

பின்னே!

எனக்கு அழைப்பு வரலே, அதனாலே நா வரலே. நீ வேணும்னா போயிக்கோ.

எனக்கும்தான் அழைப்பு வரலே, அதுக்காக இந்த விருந்தை விடமுடியுமா?

மச்சான், அழைப்பு வராமே போவது சரி இல்லை? நீ போகாதே.

மச்சான், நான் சொல்லுவதை நிதானமாகக் கேள்.
கல்யாண வீட்டு காரர்களுக்கு நாம போனாலும் போகாட்டியும் ஒன்னும் தெரிந்து வராது. நூறோடு நூற்றிஒன்று, இரண்டாவதாக இந்த விருந்து மண்டபத்திலே நடக்குது அவ்வளவுதான்.

நேற்று வரைக்கும் இவைவிடாமல் இறைச்சி பிரியாணி, காலை, இரவு ரொட்டியும் கறியும் கணக்கில்லாமல் சாப்பிட்டதினால், ஒரே புளிச்ச ஏப்பமா வருது, ராத்திரி நேரத்திலே வட்டுலப்பம் சாப்பிட்டது ஒரே மாதிரியாக இருக்குது.

வயிறு சரியில்லை என்று சொல்றா, அப்போ எதுக்கு விருந்துக்கு போறேன்னு துடிக்கிறா?

மச்சான், நீனும் தானே சொன்னாய் வயிறு சரி இல்லை என்று!?., இன்னைக்கு அவங்க வீட்டு விருந்தாம், அதுவும் ஐந்து கறி “சோராம் விருந்தாம், அதிலே அழகான தேங்கா பால் புளியானமும் இருக்கும்.

நெய்ச்சோறுக்கும்–இறைச்சி கறியானத்துகும்–புளியானத்துக்கும் சூப்பர் கெமிஸ்ட்ரி மச்சான், இந்த புளிச்ச ஏப்பம் எல்லாம் பறந்து போய் விடும், வாவேன், போய் ஒரு புடி புடிச்சுட்டு வரலாம்.

ஆமா! இந்த புளியானத்துக்காக போகனுமா? நா வரலே மச்சான்.

என்ன மச்சான் இப்படி கேட்டுட்டா? அதிரை புளியானம் இண்டர்நஷனல் பேமஸ், அது தெரியுமா உனக்கு.

அமெரிக்காவில் இருக்கின்ற எல்லா ரெஸ்டாரண்டுலேயும் நம்ம ஊரு புளியானதாம் மிகவும் தூக்கலாக இருக்குதான். அவங்களே நம்ம ஊரு புளியானத்தை குடிக்கும்போது, நாம அதை ஒதுக்கலாமா...! அதனாலே நீ வர்றா, அவ்வளவுதான்.

மச்சான், இன்னொரு விஷயம் உன்னிடம் சொல்லணும்.

என்ன அது.

நேத்து ராத்திரி தோழன் சாப்பாடுக்கு போனோம்ல.

ஆமாம், அதுக்கு என்ன.

அந்த பெண்வீட்டு காரர்களுக்கு ரவா வை காய்ச்ச தெரியலே`!

ஏன்? என்னாச்சு?

நார்மலாக, ரவாவை லேசாக வறுத்து, தேங்காய்ப்பால் விட்டுதான் காய்ச்சுவார்கள். அப்போதுதான் அது சுவையாக இருக்கும்.

சரி இப்போ அதுக்கு என்ன சொல்ல வர்றே?

அவங்க, ரவாவை வறுக்காமே, பசும்பாலில் காய்ச்சதினாலே, ஒரே பால் வாடையாக இருந்தது. அதுவே என் வயிற்றை கலக்குது.

மச்சான், ஒரு விஷயத்தை கவனி, இப்போ நாம போற விருந்தில் சூப்பர் புளியாணம் இருக்குது, அதோடு வயிற்றுப் பிரச்சனை எல்லாம் போய்விடும்.

சரி மச்சான், நானும் வர்றேன்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
CONSUMER RIGHTS.