இஸ்லாத்தை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தவே கூடாதென்றும் இளைய சமுதாயத்தை ஐரோப்பியர்களின் தவறான போக்கு பயங்கரவாதத்தின் பக்கம் தள்ளிவிடும் என்ற எச்சரிக்கையையும் கடந்த ஞாயிரன்று போலந்திலிருந்து வாடிகன் திரும்பும் வழியில் தனது சிறப்பு விமானத்தில் போப் பிரான்ஸிஸ் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது இவ்வாறு கூறினார்.
கடந்த வாரம் ஃபிரான்ஸ் நாட்டின் சர்ச் ஒன்றில் பாதிரியார் ஒருவர் பயங்கரவாதி ஒருவனால் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டதை மிகவும் வன்மையாக கண்டித்த போப் இந்த பயங்கரவாதியின் செயலை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தக் கூடாதென திட்டவட்டமாக கூறினார். பாதிரியாரின் படுகொலைக்கு எதிராக முஸ்லீம்கள் கிளர்ந்தெழுந்து கிருஸ்தவர்களுக்கு ஆதரவளித்ததையும் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக ஐ.எஸ் என்ற இயக்கத்தினரால் நிகழ்த்தப்பட்டு வரும் தொடர் வன்முறை சம்பவங்கள் குறித்து கேள்வியெழுப்பிய போது அவர்கள் மிகச்சிறிய குழுவினரென்றும் அவர்களை போன்ற குழுவினர்கள் நம் (கத்தோலிக்கர்கள்) மத்தியிலும் உள்ளனர் என்றும் விளக்கமளித்ததார். சமீபத்திய செய்திகளில் இத்தாலியில் நெருங்கிய உறவினர்களை கொன்ற வன்முறையாளர்கள் ஞானஸ்னானம் செய்யப்பட்ட கத்தோலிக்க கிருஸ்தவர்கள் இல்லையா? என வினா எழுப்பினார்.
கத்தியை போன்றே நாவும் ஒரு கொலை ஆயுதம் தான் என்றும், மக்களின் மத்தியில் இனவாதங்களை எண்ணெய் ஊற்றி வளர்ப்பதிலும் (அகதிகள் போன்ற) வெளிநாட்டவர்கள் குறித்த துவேஷங்களை பரப்புவதிலும் சில அரசியல் கட்சிகள் முன்னிற்பதாகவும் சாடினார்.
எந்தவொரு தீவிரவாதத்தின் பின்னும் பொருளாதார சுரண்டலே ஒளிந்திருப்பதாகவும், நாம் இளைய சமுதாயத்திற்கு சரியான வழிகாட்டததன் விளைவாக பல ஐரோப்பிய இளைஞர்கள் வேலை இன்றியும் பின்பு போதை அடிமைகளாகவும் மாறியும் இறுதியாக பயங்கரவாத இயக்கங்களின் சதிவலைகளில் சிக்கியும் உள்ளனர் என்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அடையாளம் வன்முறையே அன்றி இஸ்லாமிய மார்க்கம் அல்ல எனவும் தெளிவுபட கூறினார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
கடந்த வாரம் ஃபிரான்ஸ் நாட்டின் சர்ச் ஒன்றில் பாதிரியார் ஒருவர் பயங்கரவாதி ஒருவனால் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டதை மிகவும் வன்மையாக கண்டித்த போப் இந்த பயங்கரவாதியின் செயலை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தக் கூடாதென திட்டவட்டமாக கூறினார். பாதிரியாரின் படுகொலைக்கு எதிராக முஸ்லீம்கள் கிளர்ந்தெழுந்து கிருஸ்தவர்களுக்கு ஆதரவளித்ததையும் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக ஐ.எஸ் என்ற இயக்கத்தினரால் நிகழ்த்தப்பட்டு வரும் தொடர் வன்முறை சம்பவங்கள் குறித்து கேள்வியெழுப்பிய போது அவர்கள் மிகச்சிறிய குழுவினரென்றும் அவர்களை போன்ற குழுவினர்கள் நம் (கத்தோலிக்கர்கள்) மத்தியிலும் உள்ளனர் என்றும் விளக்கமளித்ததார். சமீபத்திய செய்திகளில் இத்தாலியில் நெருங்கிய உறவினர்களை கொன்ற வன்முறையாளர்கள் ஞானஸ்னானம் செய்யப்பட்ட கத்தோலிக்க கிருஸ்தவர்கள் இல்லையா? என வினா எழுப்பினார்.
கத்தியை போன்றே நாவும் ஒரு கொலை ஆயுதம் தான் என்றும், மக்களின் மத்தியில் இனவாதங்களை எண்ணெய் ஊற்றி வளர்ப்பதிலும் (அகதிகள் போன்ற) வெளிநாட்டவர்கள் குறித்த துவேஷங்களை பரப்புவதிலும் சில அரசியல் கட்சிகள் முன்னிற்பதாகவும் சாடினார்.
எந்தவொரு தீவிரவாதத்தின் பின்னும் பொருளாதார சுரண்டலே ஒளிந்திருப்பதாகவும், நாம் இளைய சமுதாயத்திற்கு சரியான வழிகாட்டததன் விளைவாக பல ஐரோப்பிய இளைஞர்கள் வேலை இன்றியும் பின்பு போதை அடிமைகளாகவும் மாறியும் இறுதியாக பயங்கரவாத இயக்கங்களின் சதிவலைகளில் சிக்கியும் உள்ளனர் என்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அடையாளம் வன்முறையே அன்றி இஸ்லாமிய மார்க்கம் அல்ல எனவும் தெளிவுபட கூறினார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

















































