அதிராம்பட்டினம், ஜூலை 24
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு, CMP லைன் மெடிக்கல் அருகில், சித்தீக் பள்ளி அருகில், செக்கடி மேடு ஜம்ஜம் ஹோட்டல் அருகில், ரஹ்மானியா பள்ளி அருகில், புதுப்பள்ளி அருகில், A J பள்ளி அருகில், முகைதீன் ஜும்ஆ பள்ளி அருகில், கலீபா உமர் பள்ளி அருகில் என மொத்தம் 8 இடங்களில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் நேரில் சென்று வழங்கினர்.
இதில், சில பயனாளிகள் கப சூரக் குடிநீரை அருந்திவிட்டு, தங்களது குடும்பத்தினருக்கு ப்ளாஸ்கில் வீட்டிற்கு வாங்கிச் சென்றனர். இதில், மொத்தம் 3000 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு, CMP லைன் மெடிக்கல் அருகில், சித்தீக் பள்ளி அருகில், செக்கடி மேடு ஜம்ஜம் ஹோட்டல் அருகில், ரஹ்மானியா பள்ளி அருகில், புதுப்பள்ளி அருகில், A J பள்ளி அருகில், முகைதீன் ஜும்ஆ பள்ளி அருகில், கலீபா உமர் பள்ளி அருகில் என மொத்தம் 8 இடங்களில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் நேரில் சென்று வழங்கினர்.
இதில், சில பயனாளிகள் கப சூரக் குடிநீரை அருந்திவிட்டு, தங்களது குடும்பத்தினருக்கு ப்ளாஸ்கில் வீட்டிற்கு வாங்கிச் சென்றனர். இதில், மொத்தம் 3000 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.






















































