அதிராம்பட்டினம், டிச.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பசுமையை வலியுறுத்தி, அதிராம்பட்டினம் சுகாதார முன்னேற்றக் கழகம் (சுமுக) அமைப்பின் தன்னார்வலர்கள் கடந்த சில வருடங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவ்வமைப்பின் கலந்தாலோசனைக்கூட்டம் செக்கடிப் பள்ளிவாசல் வளாகத்தில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்தார். சுமுக தலைவர் தமீம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் செக்கடிப் பள்ளிவாசல், முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் உபரிநீரை சாலையோர மரக்கன்றுகள் வளர்வதற்கு பயன்படுத்தும் வகையில், இப்பணியை செயல்படுத்த தேவையான நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், ரசூல், மிஃப்த்தா, ஆஷிக், கமாலுதீன், அமீன், சேக் அலி, அபூபக்கர், சாகுல் ஹமீது, முகமது சலீம், சேக் மதினா, அப்துல் காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பசுமையை வலியுறுத்தி, அதிராம்பட்டினம் சுகாதார முன்னேற்றக் கழகம் (சுமுக) அமைப்பின் தன்னார்வலர்கள் கடந்த சில வருடங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவ்வமைப்பின் கலந்தாலோசனைக்கூட்டம் செக்கடிப் பள்ளிவாசல் வளாகத்தில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்தார். சுமுக தலைவர் தமீம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் செக்கடிப் பள்ளிவாசல், முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் உபரிநீரை சாலையோர மரக்கன்றுகள் வளர்வதற்கு பயன்படுத்தும் வகையில், இப்பணியை செயல்படுத்த தேவையான நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், ரசூல், மிஃப்த்தா, ஆஷிக், கமாலுதீன், அமீன், சேக் அலி, அபூபக்கர், சாகுல் ஹமீது, முகமது சலீம், சேக் மதினா, அப்துல் காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.














