.

Pages

Showing posts with label மஜக. Show all posts
Showing posts with label மஜக. Show all posts

Monday, November 16, 2020

அதிராம்பட்டினத்தில் மஜக மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.15
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பின் பேரில், அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், விவசாயிகள் அணி மாநிலச் செயலாளர் அப்துல் சலாம் ஆகியோர் கலந்துகொண்டு மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினர்.

இதில், அக்கட்சியின் தஞ்சை தெற்கு  மாவட்டச்செயலாளராக அதிரை சேக், பொருளாளராக ஒரத்தநாடு பஷீர் அகமது ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்களை அடுத்து 75 நாட்களுக்கு தொடர்ந்து நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்), நகர நிர்வாகிகள் அதிரை அப்துல் சமது, அஷ்ரப், மதுக்கூர் சாகுல் ஹமீது, மதுக்கூர் ரிபாயூதீன், ஒரத்தநாடு நூருல் அமின், சேக்தாவூது, புதுப்பட்டினம் ஜெகபர் சாதிக், மல்லிப்பட்டினம் ஹுமாயூன் கபிர், சேதுபாவாசத்திரம் சலீம் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.


Saturday, August 15, 2020

அதிரையில் மஜக சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டாடட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மனிதநேய ஜனநாயக கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் பழைய அஞ்சலக சாலை, கிழக்கு கடற்கரைச்சாலை ஆகிய இரு இடங்களில் இந்திய தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டன. இதில்,  அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருப்புக் குழு உறுப்பினர் அதிரை சேக், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் கொடி ஏற்றி வைத்தனர்.

இந்நிகழ்வில், அதிரை பேரூர் பொருளாளர் அஸ்ரப், நகர துணைச் செயலாளர்கள் ஹாஜா மர்ஜுக், அகமது அஸ்கர், அதிரை பேரூர் தொழிற்ச் சங்க செயலாளர் முகமது ஆரிப், நபில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.
 
 
 
 
 
 
 

Wednesday, July 8, 2020

அதிராம்பட்டினத்தில் புதிய ஆட்டோ நிறுத்தும் நிலையம் தொடக்கம்!

அதிராம்பட்டினம், ஜூலை 08
மனிதநேய ஜனநாயக கட்சி தொழிற்சங்க பிரிவு சார்பில், புதிய ஆட்டோ நிறுத்தும் நிலையத்தின் தொடக்க விழா அதிராம்பட்டினம் கிங் ஷாப்பிங் மால் அருகில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தொழிற் சங்க செயலாளர் முகமது ஆரிப் தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் அதிரை சேக் கலந்துகொண்டு ஆட்டோ வாகன சேவையை தொடங்கி வைத்தார். பின்னர், கட்சி கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் கப சுரக் குடிநீர் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்),  அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் அஸ்ரப், துணைச்செயலாளர்கள் ஹாஜா மர்ஜூக், அகமது அஸ்கர், மாணவர் இந்தியா பேரூர் செயலாளர் மஸ்தான், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

Monday, June 29, 2020

அதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் விநியோகம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 29
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், மனிதநேய ஜனநாயகக்  கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று திங்கட்கிழமை காலை வழங்கப்பட்டது.

இதில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் துணைச் செயலாளர் மர்ஜூக் தலைமையில், நிர்வாகிகள் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்), அதிரை சேக், அப்துல் சமது, அஷ்ரப், ஜபருல் ஹக், அகமது அஸ்கர், நபில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, பயணிகள், வாகன ஓட்டுனர்கள், வர்த்தகர்கள் உள்பட பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீரை நேரில் சென்று வழங்கினர்.

ஒரே வாரத்தில் பொதுமக்களுக்கு 2-வது முறையாக கப சூரக் குடிநீர் வழங்குவது குறிப்பிடத்தக்கது. 
 

Saturday, June 27, 2020

அதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் விநியோகம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 27
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், மனிதநேய ஜனநாயகக்  கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று சனிக்கிழமை காலை வழங்கப்பட்டது.

இதில், அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் மற்றும் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் சேக், ஸ்மார்ட் சாகுல், அப்துல் சமது, அஸ்ரப், மர்ஜூக், ஹக், நபீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, பயணிகள், வாகன ஓட்டுனர்கள், வர்த்தகர்கள் உள்பட பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீரை நேரில் சென்று வழங்கினர்.
 
 
 
 
 
 
 
 
 
 

Sunday, June 7, 2020

வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக்கோரி கையில் பதாகை ஏந்தி போராட்டம்!

அதிராம்பட்டினம், ஜூன் 07
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், தாயகம் திரும்ப தவிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக்கோரி ஜூன் 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று தினங்களில் சமூக இடைவெளியுடன் பதாகை ஏந்தி, வலைதளங்களில் பதிவிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மஜக அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், பழைய அஞ்சலக சாலையில் கையில், பதாகை ஏந்தி போராட்டம் இன்று (ஜூன் 07) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் அதிரை சேக் தலைமை வகித்தார். துணைச்செயலாளர் ஸ்மார்ட் சாகுல் முன்னிலை வகித்தார்.

இதில், மஜக, தமுமுக, எஸ்.டி.பி,ஐ, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்று, வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வர வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முகக்கவசம் அணிந்து, கையில் பதாகை ஏந்தி முழக்கமிட்டனர். நிறைவில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் அப்துல் சமது நன்றி கூறினார்.