.

Pages

Showing posts with label மாவட்ட ஆட்சியர். Show all posts
Showing posts with label மாவட்ட ஆட்சியர். Show all posts

Sunday, March 21, 2021

பட்டுக்கோட்டை பகுதியில் காய்ச்சல் தடுப்பு முகாம்: ஆட்சியர் நேரில் ஆய்வு!


பட்டுக்கோட்டை; நகராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நகராட்சி மற்றும் சுகாதார துறையின் சார்பில் நடைபெற்று வரும்  மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்தராவ்  (20.03.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. 

தஞ்சாவூர் மாவட்டததில் தற்போது பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள்ää ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிருந்தாவனம் பள்ளியில் உள்ள 14 நபர்களுக்கு கொரோனா தொற்று இதில் 1 ஆசிரியருக்கும்ää 2 வாகன ஓட்டுநருக்கும் மற்றும் 11 மாணவருக்கும்ää கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போதுவரை 11 பள்ளிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுää சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருக்கும் அனைத்து மாணவர்கள்ää ஆசிரியர்கள்ää ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்தது உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது வரை கொரோனா தொற்று ஏற்பட்ட பள்ளி மீது வழக்கு பதிவு மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட பள்ளிகள் மீது தலா ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டு அப்பள்ளிகளை 14 நாட்களுக்கு மூடுவதற்கு உத்தரவிட்டபட்டுள்ளது.

11 பள்ளிகளை சேர்ந்த 140 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர் இதில் நேற்று அம்மாபேட்டையை சேர்ந்த 60 மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது சிகிச்சை பெற்று வரும் அனைத்து மாணவர்களும் நல்ல உடல்நிலையில் உள்ளனர். யாருக்கு பெரிய பாதிப்பு இல்லை. தஞ்சை மேக்ஸ்வெல் மெட்ரிக் பள்ளியில் நேற்று 11 ஆசிரியர்கள்ää 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் 1ää123 பேருக்கு முழுமையாக பரிசோதனை செய்து மற்றும் பெற்றோர்கள்ää அவர்களுடன் தொடர்பு இருப்பவர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் பரிசோதனை செய்ததில் மேலும் 15 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதின் காரணமாக அப்பள்ளியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பள்ளிகளை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மற்ற பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வழிநெறிமுறைகளை கடைபிடிக்காமல் பள்ளிகளில் அலட்சியமாக இருந்து கொரோனா பரவும் சு10ழ்நிலை இருந்தால் அந்த பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரம் என்பதால் அனைத்து பறக்கும்படையினர்ää நிலையான கண்காணிப்புக்குழுவினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தேர்தல் பணியுடன் சேர்ந்து பொதுமக்கள் முககவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்பிறகும் முககவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதித்து வருகின்றனர். முன்கள பணியாளர்கள்ää தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும்ää 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலை தேசிய அளவில் நிறைய மாவட்டங்களில் பரவுகிறது. தமிழகத்தில் கூட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மாணவர்களும் பள்ளிக்கு செல்லும்போது முக கவசம் அணிய பெற்றோர்கள் வலியுறுத்த வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் நுழைவு வாயிலேயே மாணவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்ய வேண்டும். முக கவசம் கண்டிப்பாக அணிய வைக்க வேண்டும். 

சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா முதல் அலை வந்தபோது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கியதால் பெரியஅளவில் பாதிப்பு இல்லாமல் தடுக்க முடிந்தது. தற்போது 2வது அலை வந்து கொண்டிருக்கிறது. இப்போது கூட பொதுமக்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு கொடுத்தால் மக்களை காக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெறுவதையொட்டி 9 பறக்கும் படையினர்ää 9 நிலையான கண்காணிப்பு குழு மூலம் வாகன தணிக்கையில்ää 24 மணி நேரமும் சுழற்ச்சி முறையில்  ஈடுபட்டு வருகின்றனர். இதில் இதுவரை ரூ. 58 லட்சம் வானக தணிக்கையின் போது பிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் லாரியில் கொண்டு வரபட்ட 600 குக்கர் பரிமுதல் செய்யப்பட்டு சம்மந்தபட்டவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ம. கோவிந்தராவ் இ.ஆ.ப.ää அவர்கள் தெரிவித்தார். 

தொடர்ந்து பட்டுக்கோட்டைää அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை எப்படி மேற்கொள்ளப்படுகிறது என ஆய்வு செய்தார். மாணவர்களை சந்தித்து பேசி கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார். மாணவர்கள் அவர் அவர்ää வீட்டில் உள்ளவர்களையும் முக கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என அறிவுறித்தினார்.

பின்னர் பட்டுக்கோட்டைää அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சரியான அடிப்படை வசதிகளää; பள்ளியில் உள்ள சுற்று சுவர்கள்ää வகுப்பறைகள்ää குடிநீர் வசதிகள்ää கழிப்பறைகள் போதுமான அளவில் உள்ளதா என மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்தராவ் ஆய்வு மேற்க்கொண்டார்.

ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் திருமதி. உமா மகேஸ்வரிää பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் திரு. சென்னு கிருஷ்ணன்,   சுகாதார துறை துணை இயக்குநர் மரு. ரவிந்திரன்ää நகராட்சி செயற்பொறயாளர் திரு. ஜெயசீலன்ää வட்டாட்சியர் திருமதி. தரணிகா மரு. ஆடலரசி மற்றும் மருத்துவர்கள்ää அலுவலர்கள் உடன் இருந்தனர்






Sunday, March 14, 2021

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!


வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்

தஞ்சாவூர் மாநகராட்சி அருளானந்த நகரில்  மாநகராட்சி சார்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்த ராவ்  இன்று (14.03.2021) தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

நடைபெற்று வரும் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் 100 சதவீதம் வாக்களித்திட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் கடந்த நாடளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் குறைவான வாக்கு பதிவு பதிவான பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது, இன்று அருளானந்த நகரில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து வீடு வீடாக சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக அருளானந்த நகரில் 50 மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியிணை தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து பி.வி. செல்வராஜ் மகளிர் மேல்நிலைபள்ளியில் நடைபெற்று வரும் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதிதாக சேர்ந்த வாக்காளர்களுக்கு இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து வாக்காளர் சீட்டு வழங்கும் முகாமினை பார்வையிட்டு புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிந்திரன, தஞ்சாவூர் தேர்தல் நடத்தும் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.





மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு!


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 8 சட்டமன்ற தொகுதிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 8 சட்டமன்ற தொகுதிக்கு தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட  தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர். ம.கோவிந்த ராவ் அன்று (13.03.2021) அனுப்பி வைக்கப்படுவதை பார்வையிட்டார்.

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வைப்பறையிலிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து 8 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2886 வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 170-திருவூடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 355 வாக்குச்சாவடி மையங்களுக்கு 423 வாக்குப்பதிவு இயந்திரம் 423 கட்டுப்பாட்டு கருவியும், 462 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 171- கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 378 வாக்குச்சாவடி மையங்களுக்கு 450 வாக்குப்பதிவு இயந்திரம், 450 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 492 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 172- பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 362 வாக்குச்சாவடி மையங்களுக்கு 431 வாக்குப்பதிவு இயந்திரம், 431 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 471 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 173-திருவையாறு சட்டமன்ற தொகுதியில் உள்ள 385 வாக்குச்சாவடி மையங்களுக்கு 459 வாக்குப்பதிவு இயந்திரம், 459 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 501 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 

174-தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 406 வாக்குச்சாவடி மையங்களுக்கு 484 வாக்குப்பதிவு இயந்திரம்,  484 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 528 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும்,  175-ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் உள்ள 340 வாக்குச்சாவடி மையங்களுக்கு 405 வாக்குப்பதிவு இயந்திரம், 405 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 442 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 176-பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடி மையங்களுக்கு 411 வாக்குப்பதிவு இயந்திரம்,  411 கட்டுப்பாட்டு கருவியும், என்றும் 449 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 177-பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள 315 வாக்குச்சாவடி மையங்களுக்கு 375 வாக்குப்பதிவு இயந்திரம், 375 கட்டுப்பாட்டு கருவியும்ää என்றும் 410 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், ஆக மொத்தம் 2886 வாக்குச்சாவடி மையங்களுக்கு 3438 வாக்குப்பதிவு இயந்திரமும், 3438 கட்டுப்பாட்டு கருவியும்ää 3755 வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவியும், வாக்குப்பதிவு எந்திரங்கள் கருவிகளுக்கு பயன்படுத்த உள்ள 3900 பேட்டரியும், வாக்காளர் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளுக்கு பயன்படுத்த உள்ள 4000 பேட்டரியும், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதை என மாவட்ட  தேர்தல் அலுவலர் ஃமாவட்ட ஆட்சித் தலைவர். ம.கோவிந்த ராவ் பார்வையிட்டார். அந்த அந்த சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளது.

நிகழ்வில் தஞ்சாவூர் கோட்டாட்சியர் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுமணி திருவிடைமருதூர் தேர்தல் நடத்தும் அலுவலர் கமலகண்ணன், ஒரத்தநாடு தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிவேல், திருவையாறு தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி மஞ்சுளா, வாக்குப்பதிவு இயந்திரம் மேலாண்மை அலுவலர் சுப்பையா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Tuesday, March 2, 2021

பட்டுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தினை ஆட்சியர் ஆய்வு செய்தார்!


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாக்கு எண்ணும் மையமான அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கரம்பயம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பதற்றமான வாக்குச்சாவடி, புதிய துணை வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்த ராவ் இன்று (02.03.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்ததாவது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதியில், 3 பறக்கும் படை, மூன்று நிலையான கண்காணிப்புக்குழு ஏற்பாடு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறதுää 24 பறக்கும் படை, 24 நிலையான கண்காணிப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறதுää அதேபோல் இந்திய தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி முழுமையான அனைத்து கண்காணிப்பு குழுக்கள் மூலம் வாகனங்களை சோதனை செய்து வருகிறார்கள். எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு 2291 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது, இப்பொழுது தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகிணங்க 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குää துணை வாக்குச்சாவடி மையங்களாக 595 கூடுதல் துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ஆகமொத்தம்  8 சட்டமன்ற தொகுதிக்கு 2886 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைவரும் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும், வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், கழிவறை, மின்சாரம், மற்றும் மாற்றுத் திறனாளிக்கு முதியோர் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளம்  உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளனவா எனவும்; ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், விரைவாக சரிசெய்ய வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 8 சட்டமன்றங்களுக்கு தேர்தல் 3 வாக்கு எண்ணும் மையமான தஞ்சாவூர் பகுதியில் குந்தவை நாச்சியார் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை பகுதிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கும்பகோணம் பகுதிக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்து அனைத்து அலுவலர்கள்ää காவல் துறை ஒருங்கிணைந்து பணிகளை செய்து வருகிறார்கள் வாக்காளர்களுக்கு பணம் பொருள் கொடுப்பதாக தகவல் தெரியவந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக  கட்டுபாட்டு எண் 1950 இலவச எண்ணிற்கு உடனுக்குடன் தகவல் அளிக்கலாம். புகாரின் மீது ஏந்த ஓரு பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்த ராவ் தெரிவித்தார்.



ஆய்வின்போது சார் ஆட்சியர் பாலச்சந்தர், பேராவூரணி தேர்தல் நடத்தும் அலுவலர்  ஐவண்ணன், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், மாவட்ட பள்ளி கல்விதுறை அலுவலர் ராதாகிருஷ்ணன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் திருமதி.தரணிகா, பேராவூரணி வட்டாட்சியர் திருமதி. விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Wednesday, February 3, 2021

கோவிட் -19 தடுப்பூசி முகாம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!


கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தடுப்பூசியினை போட்டுக் கொண்டார்கள்

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் கோவிட் -19 தடுப்பூசி முகாமினை இன்று (03.02.2021) ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் கோவிட் தடுப்பூசியினை போட்டுக் கொண்டார். பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவதுää

  தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இன்றைய தேதி (03.02.2021) 24 மையங்களில் ஒவ்வொரு வட்டாரங்களிலும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலும் 150க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனையிலும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நமது மாவட்டத்தில் 4700 பேருக்கு கொரோனா தடுப்பூசி; போடப்பட்டுள்ளது அதே போன்று ஒவ்வொரு முகாம்களிலும் கொரோனா தடுப்பூசி மருத்துவத்துறை மூலமாக போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது முதலில் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு முன் உரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் அதே போன்று அடுத்த  கட்டமாக நேற்றிலிருந்து  முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைக்கு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி நானே போட்டுக் கொண்டேன்ää அந்தவகையில் வந்து இந்த தடுப்பூசியின் மூலம் எந்த ஒரு பக்க விளைவுää  பாதிப்பும் இல்லை யாரும் பயப்பட வேண்டாம.; அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்ளலாம். தற்போது வரை நமது நாட்டில் 35 லட்சத்திற்கும்  மேற்பட்டோருக்கு கெரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோன்று நமது மாவட்டத்தில் சுமார் 4700 பேருக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூர் முதல்வர் அவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டார் மற்றும் நானும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளேன் அரசு அறிவுரையின்படி தடுப்பூசி போடும் பணி நடைபெற்றிருக்கிறது இப்போது வரைக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவே யாரும் பயப்பட வேண்டாம் என்று அனைவருக்கும் கேட்டுக்கொள்கிறேன் 

இந்நிகழ்வில் மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) மரு.மருதுதுரை சுகாதாரத்துறை இணை இயக்குனர் மரு.ராமுää துணை இயக்குனர் மரு.ரவீந்திரன். மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடனிருந்தனர்



Sunday, January 31, 2021

போலியோ சொட்டு மருந்து முகாம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!


 தஞ்சாவூர் இராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ம.கோவிந்த ராவ் இ.அ பää அவர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தியாவில் கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றுதுää.தமிழக அரசின் தீவிர முயற்சிகளின் காரணமாக 2004ஆம் வருடம் முதல் தமிழகத்தில் போலியோவினால் எந்தக் குழந்தைகளுக்கும் பாதிப்பு இல்லை. இந்த ஆண்டு (31.01.2021) ஞாயிற்றுக்கிழமை  இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ம.கோவிந்த ராவ் இ.அ.பää அவர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார்.

இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துää ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்தில் இருந்து அகற்றப்பட்டு அளிக்கப்படுகின்றது. இதன் மூலம் போலியோ நோயைப் பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச்சு10ழலில் இருந்து அறவே ஒழிக்கலாம். இந்த முகாம் மூலம் சுமார் 2ää29ää141ää தஞ்சாவூர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

மேலும் நகரப்பகுதியில் 128 மையங்களும் ஊரகப் பகுதிகளில் 1382 மையங்களும் ஆக மொத்தம் 1510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.இப்பணியில் 6040 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும் 178 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்கள்ää துணை சுகாதார நிலையங்கள்ää பள்ளிக்கூடங்களää; அரசு மருத்துவமனைகள்ää தனியார் மருத்துவமனைகள்ää பேருந்து நிலையங்கள்ää புகைவண்டி நிலையங்கள்ää கோயில்கள்ää சுங்கச் சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. தொலைதூர பகுதிவாழ் குழந்தைகளுக்கும் இடம் பெயர்ந்து வாழ்வோர் குழந்தைகளுக்கு 51 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பொது சுகாதாரத்துறைää ஊட்டச்சத்து துறைää சமூகநலத்துறைää வருவாய்துறைää கல்வித் துறைää ஊரக வளர்ச்சித்துறைää நகராட்சிகள்ää உள்ளாட்சித்துறை மற்றும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்ää மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் பங்கேற்று இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. உபயோகப்படுத்தப்படும் போலியோ தடுப்பு மருந்துää தயாரிக்கப்படும் இடத்தில் இருந்து குழந்தையை சென்று அடையும் வரை தடுப்பு மருந்தின் வீரியம் குறையாமல் குளிர்பதன தொடர் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

தொடர்ந்து 31.01.2021 இன்று பிறந்த குழந்தைகளுக்கும் மேலும் இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்து இருந்தாலும் இந்த முகாமில் கூடுதல் தவணையாக கட்டாயம் சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தடுப்பு மருந்து அரசின் மூலமாக முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. வேலை நிமித்தமாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தற்காலிகமாக இம்மாவட்டத்தில் தங்கியிருப்பவர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

எனவே போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 2 சொட்டு போலியோ சொட்டு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல்  போட்டுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்வில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மருததுரைää துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) மரு. ரவீந்திரன்ää மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்


Tuesday, December 29, 2020

தஞ்சை மாவட்டத்தில் ஜன.03 ந் தேதி TNPSC GROUP-1 போட்டித்தேர்வு!


அதிரை நியூஸ், டிச.29 

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித்தேர்வு  தொகுதி-1க்கு 21 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வு தொகுதி-1 ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 03.01.2021 அன்று முற்பகல் 10 மணி முதல் 1.00 மணி வரை நடைப்பெறும் போட்டித்தேர்வு தொகுதி-1க்கு, 21தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு  எழுத வரும் அனைவரையும் அனைத்து மையங்களிலும் தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு பரிசோதனை செய்த பிறகே தேர்வர்களை தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினி தெளித்திடவும், சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்திடவும், தொடர்புடைய அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்கள் அருகிலேயே மருத்துவ குழுக்கள் மற்றும் அவசரகால வாகனங்கள் தயார் நிலையில் இருந்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு நாளன்று தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு சென்றிட கூடுதல் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் கைப்பேசி மற்றும் மின்னணு தொடர்பான பொருட்கள் கொண்டு செல்ல கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள், இயங்கு குழுவினர்கள், ஆய்வு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோரை ஒருங்கிணைத்து தேர்வு மையங்களை கண்காணிக்கவும், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே தேர்வர்கள் அரசு அறிவுறுத்தியுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றியும், எவ்வித பயமின்றியும், பாதுகாப்பாகவும் தேர்வு எழுதிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) திருமதி.முத்து மீனாட்சி, தஞ்சாவூர் கோட்டாட்சியர் திருமதி.வேலுமணி மற்றும் வட்டாட்சியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Monday, December 28, 2020

பட்டுக்கோட்டை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு!


அதிரை நியூஸ், டிச.28

தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் (27.12.2020) நேரில் பார்வையிட்டு முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு சட்டமன்ற தொகுதிகளுக்கும், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிகளுக்கும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வாக்கு எண்ணப்படும் அறை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகு, வாக்குப்பதிவு அலகுää விவிபேட் அலகு ஆகியவை வைக்கப்படும் பாதுகாப்பு அறை, தேர்தல் பார்வையாளரின் அறைää ஊடக அறை, கழிவறை ஆகியவற்றை  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணப்படும் மையங்களில் முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் லண்டனிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 72 பயணிகள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 53 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3 பயணிகளுக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்று நபர்களின் மாதிரிகள் மேல்பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  நோய்த்தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் கண்டறியப்பட்டு, வல்லம் கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துகொண்டு, தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கைசுத்திகரிப்பான் பயன்படுத்துதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் விஜயன்,தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன, கும்பகோணம் வட்டாட்சியர் கண்ணன,பட்டுக்கோட்டை வட்டாட்சியர் திருமதி.தரணிகா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.






Friday, December 11, 2020

வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

அதிரை நியூஸ்: டிச.11
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ்  இன்று (11.12.2020) துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்த்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை முதல் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்  துவக்கி வைத்தார். தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பேருந்துகளில் இருந்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். மேலும், 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் புதிய வாக்காளர் சேர்க்கை படிவத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் நடைபெறுகிறது. வருகின்ற 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய நாட்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் - 6, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் - 7, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு படிவம் - 8, ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள் புதிய குடியிருப்பில் முகவரி மாற்றம் செய்ய படிவம் - 8ஏ ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். வாக்களர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் பிறப்பு சான்று, பள்ளி மாற்றுச் சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வயது சான்றாகவும், ரேஷன் ஸ்மார்ட் கார்ட், ஓட்டுனர் உரிமம், கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முகவரி சான்றாகவும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அரியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், தஞ்சாவூர் நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகளை புனரமைக்க தன்னார்வலர்கள் ~ நன்கொடையாளர்கள் முன்வர வேண்டுகோள்!


அதிரை நியூஸ்: டிச.11
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை புனரமைக்க தன்னார்வலர்கள் ~ நன்கொடையாளர்கள் முன்வர மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கூட்டத்தில் வேண்டுகோள்!

Saturday, December 5, 2020

பட்டுக்கோட்டை வட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து ஆட்சியர் ஆய்வு (படங்கள்)


அதிரை நியூஸ்: டிச.05பட்டுக்கோட்டை வட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் (04.12.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயத்தில் மழை நீர் சூழ்ந்த பயிர்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தேங்கியிருந்த மழைநீர் வடிகால் மூலம் வெளியேற்றப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார். பின்னர், பட்டுக்கோட்டை வட்டம், கார்காவயலில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் அருகிலுள்ள சாலையில் தேங்கியிருந்த மழைநீர் வெளியேற்றப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார். 

அதன் பின்னர், ஆண்டிகாடு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வெளியேற்றப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். தொடர்ந்து, கொள்ளுக்காடு பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கு அளிக்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

இவ்வாய்வுகளின் போது பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜஸ்டின், கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Thursday, December 3, 2020

புயல், மழைக்காலங்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் வலியுறுத்தல்!

அதிரை நியூஸ்: டிச.03
புயல் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய சராசரி அளவான 637.02 மிமீ-ல் இதுவரை 296.41 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது 46.53 சதவீதமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வெண்ணாறு கோட்ட பிரிவில் 13 ஏரி, குளங்களில் 6 ஏரி, குளங்கள் 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரையிலும், 3 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதம் வரையிலும்ää 4 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திற்கு கீழும் நிரம்பியுள்ளது.

கல்லணை கால்வாய் கோட்ட பிரிவில் 524 ஏரி, குளங்களில் 225 ஏரி, குளங்கள் 100 சதவீதமும், 165 ஏரி, குளங்கள் 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரையிலும், 53 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதம் வரையிலும், 81 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திற்கு கீழும் நிரம்பியுள்ளது. அக்னியாறு கோட்ட பிரிவில் 24 ஏரி, குளங்களில் 2 ஏரி, குளங்கள் 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரையிலும், 22 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திற்கு கீழும் நிரம்பியுள்ளது. ஆற்று பாதுகாப்பு கோட்டத்தில் 81 ஏரி, குளங்களில் 65 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதம் வரையிலும், 16 ஏரி, குளங்கள் 50 சதவீதத்திற்கு கீழும் நிரம்பியுள்ளது.

பொதுமக்கள் மழைக்காலங்களில் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மழை, இடி, மின்னல் நேரங்களில் வெட்டவெளி பகுதிகள் மற்றும் நீர் நிலைகளில் இருப்பதை தவிர்க்க வேண்டும். ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி வருவதால், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கால்நடைகள் நீர்நிலைகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழை குறித்த புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்) மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

Thursday, November 26, 2020

தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடரும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்!

அதிரை நியூஸ்: நவ.26
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயல் மழையினால் எந்த பாதிப்பும் இல்லை இருப்பினும் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இருக்குமென்பதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குனருமான என்.சுப்பையன் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் நிவர் புயல் மழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குனருமான என்.சுப்பையன், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆகியோர் இன்று (26.11.2020) செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது:        
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயல் மழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 122 நிவாரண முகாம்களில் 1606 குடும்பங்கள், 1761 ஆண்கள், 2261 பெண்கள், 1344 குழந்தைகள் மொத்ததம் 5321 மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவழக்கைக்காக மாவட்டத்தில் 42 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் மனித உயிரி உயிரிழப்பு ஏதுமில்லை. மாவட்ட சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் பாதிக்கப்படவில்லை. போக்குவரத்து ஏதும் தடைபெறவில்லை. மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக 20 மின்கம்பங்கள் சேைந்துள்ளன. மின்கம்ப சேதங்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்பபு மீள வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில எழு இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. அவை அனைத்தும் அப்புறப்படுத்தபட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 34 கூரை வீடுகள் பகுதியாகவும், 1 கூரை வீடு முழுமையாகவும், ஓட்டு வீடுகளில் 1 பகுதியாக சேதமடைந்துள்ளது. கால்நடைகளில் 1 மாடு, 2 ஆடுகள் மழையினால் இறந்ததாக தகவல் வரப்பெற்றுள்ளது. உறுதி செய்யப்பட வேண்டும். வருவாய்த்துறை. ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, தீயணைப்புத்துறை, மின்வாரியத்துறை, மருத்துவத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, மீன்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை மற்றும் இதர துறைகள் அலுவலர்கள் நிவர் புயல் அவசரப் பணிக்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீட்பு பணிக்காக தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டியிருந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 26-11-2020 அன்று மழை அளவு 38.04 மி.மீ (தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆண்டு சராசாரி மழை அளவு 1098.24 மிமீ), மேலும், மாவட்ட கட்டுப்பாட்டு அறை, கோட்ட அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்ட அலுவலகங்களிலும் 24*7 கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.

மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் கோட்ட அளவில் 3 கண்காணிப்பு அலுவலர்களும், சார் ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் வட்ட அளவில் 9 மண்டல அலுவலர்களும் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைக்காகவும் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ள தடுப்பு பணிக்களுக்காக 41 இடங்களில் 1,06,600 மணல் மூட்டைகளும். 8269 சவுக்கு கட்டைகளும், 2,10,350 காலிசாக்கு பைகளும் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் 3000 மின்கம்பங்கள் மின்வாரியத்தால் இருப்பு வைக்கப்பட்டன. 552 மரம் அறுக்கும் கருவிகள், 205 ஜேசிபி, 173 Genset கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 251 நிவாரண முகாம்களில் மண்டல அலுவலர்கள் மூலமாக அழப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு உறுதி டிசய்யப்பட்டது. 16 மருத்துவ முகாம்கள் மூலமாக நிவாரண முகாம்கள் ஆய்வு செய்யப்பட்டு COVID மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.108 ஆம்புலன்ஸ்கள், 29 அவசர சிகிச்சை மற்றும் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்ழயிருந்தன. நிவர் புயல் தொடர்பாக 49 புகார் மனுக்கள் பெறப்பட்டதில் 48 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. 1 மனு நடவடிக்கையில் உள்ளது.

மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட மின் துண்டிப்பு துரிதமாக சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நிவர் புயல் காரணமாக விழுந்த மரங்களை அகற்றும் பணி தொடர்புடைய துறைகள் மூலமாக நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள நீர் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களால் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் விவசாய பெருங்குடி மக்கள் பயிர் காப்பீடு தொகையை டிசம்பர் 15 வரை செலுத்தலாம்.மழைääபுயல் சேதம் இல்லை என்று பொறுமை காத்திராமல் உடனடியாக அனைத்து பயிர்களுக்கும் பயிர்க்காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.மேலும் மாவட்டத்தில் உள்ள மொத்த ஏரி குளங்கள் 618 இதில் 174 ஏரி குளங்கள் முழுவதும் நிரம்பி உள்ளன 199 குளங்கள் 75% முதல் 100மூ வரை நிரம்பியுள்ளன, 135 ஏரி குளங்கள் 50% முதல் 75%  வரை நிரம்பியுள்ளனää83 குளங்கள் 25%  முதல் 50% வரை நிரம்பியுள்ளன, 27 குளங்கள் 25% மேல் நிறைந்துள்ளன மேலும் தமிழக அரசின் உத்தரவின்படி இன்று மதியம் முதல் தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும்

டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இருக்குமென்பதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் மழை புயல் சேதம் தொடர்பாக புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி 1077 என்ற எண்ணின் மூலம் தெரிவிக்கலாம்.  

மேலும், புயல் மழை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பத்திரிக்கைத்துறையினருக்கும், தொலைக்காட்சித்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் இயக்குனருமான என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.

Wednesday, November 25, 2020

நிவர் புயல் மழையினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அருகிலுள்ள பாதுகாப்பு மையங்களில் தங்கிக்கொள்ள வேண்டுகோள்!

அதிரை நியூஸ்: நவ.25 
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயல் மழையினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அருகிலுள்ள பாதுகாப்பு மையங்களில் தாங்களாகவே வந்து தங்கிக் கொள்ள மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குனருமான் என்.சுப்பையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்  மாவட்டத்தில் நிவர் புயல்  மழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குனருமான என்.சுப்பையன், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் அவர்களுடன் பாபநாசம் வட்டம் களஞ்சேரியில் வெண்ணாற்றங்கரையில் இன்று (25.11.2020) நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்கள்.

இவ் ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது:    தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயல் மழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன குறிப்பாக மழை சேதம் மற்றும் பேரிடர் சேதங்கள் ஏற்படக்கூடிய இடங்களை முன்னரே கண்டறிந்து அப்பகுதியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயல் மழை சேதங்களை மேற்கொள்வதற்கு பேரிடர் மீட்பு குழுவினரும், தன்னார்வ  உறுப்பினர்களும், அரசு அலுவலர்களும்  தொடர்ந்து கண்காணித்து பணியாற்றி வருகின்றனர்.
 
பாபநாசம் ஒன்றியத்திற்கு உட்பட்ட களஞ்சேரியில் வெண்ணாற்றங்கரையில்  பொதுப்பணித்துறை அலுவலகத்தில்  வெள்ளத்தடுப்பு பணிக்காக மணல் முட்டைகள் மற்றும் மரம் அறுவை இயந்திரம் போன்றவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் ஒலையக்குன்னம் ஊராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையத்தினை பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் புயல் பாதுகாப்பு மையத்திலுள்ள மருத்துவ முகாம், சமையலறை, கழிவறை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு, சமையலறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தேவையான உணவு தயாரிப்புப் பொருட்கள் மற்றும் மருத்துவ முகாமில் உள்ள மருந்துகளின் கையிருப்பு குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் கேட்டறிந்தார். தொடர்ந்துää பட்டுக்கோட்டை நசுவினியாறு மற்றும் செல்லிக்குறிச்சி ஏரியில் ஆய்வு மேற்கொண்டு தற்போதுள்ள நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் வெளியேற்றப்படும் அளவு ஆகியவை குறித்து பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் புயல் மழை நேரங்களில் வெளியே வராமல் பாதுகாப்பாக வீட்டிலேயே இருந்திட தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில்  பாதிப்பு  ஏற்படக்கூடிய  பகுதியிலுள்ள பொதுமக்களும் மற்றும் தாழ்வான  பகுதிகளில்  வசிக்கும்  மக்களையும் கண்டறிந்து 78 வெள்ள நிவாரண தடுப்பு முகாம்களில் 972 ஆண்களும் 1477 பெண்களும் 754 குழந்தைகளும் என 3203 பேர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மல்லிப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் படகுகளை போதிய இடைவெளியுடன் நிறுத்துமாறு அறிவுறுத்தினார். மல்லிப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்திற்கு காரைக்காலில் இருந்து வந்துள்ள 15 மீனவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து அதன் பின்னர், பிள்ளையார் திடல் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேராவூரணி ஒன்றியம் அடைக்கதேவன் ஊராட்சியில் அம்புலியாறு நெடுகை பகுதிகளில் மீனவர்களின் படகுகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்து பாதுகாப்பான பகுதியில் படகுகளை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தினார்கள். 

நிவர் புயல் இன்று இரவு முதல் நாளை காலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகமான மழைப்பொழிவு எதிர்பார்க்கலாம். பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அருகிலுள்ள பாதுகாப்பு மையங்களில் தாங்களாகவே வந்து தங்கிக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி 1077 என்ற எண்ணின் மூலம் தெரிவிக்கலாம். பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். களப்பணியாளர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு தயார் நிலையில் உள்ளனர். கடற்கரை பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேவையான உபகரணங்களுடன் தயாராக இருக்கின்றனர். சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். காற்று வீசும் பகுதிகளில் மின்சார இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு, நிலைமை சரியான பிறகு மீண்டும் வழங்கப்படும்.

மேலும் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ள ஈரோடு மற்றும் தேனியிலிருந்து கூடுதலாக 2 அம்மா ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு பாதிப்புகள் தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண் 1962 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் இயக்குனருமான என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இவ்வாய்வின் போது பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், பயிற்சி ஆட்சியர் அமித், அக்னியாறு செயற்பொறியாளர் திருமதி.கனிமொழி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராமு, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் திருமதி தரணியா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.