.

Pages

Showing posts with label முத்துப்பேட்டை செய்திகள். Show all posts
Showing posts with label முத்துப்பேட்டை செய்திகள். Show all posts

Tuesday, February 18, 2020

CAA,NRC,NPR க்கு எதிராக முத்துப்பேட்டையில் 4-வது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்!

முத்துப்பேட்டை, பிப்.18
முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து இருக்கும் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் புதுத்தெரு திடலில் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் கடந்த 4 நாட்களாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் அதிகமாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று (18-02-2020) 4- வது நாள் போராட்டத்தில் சிறை கம்பி கூண்டு போல அமைத்து அதற்குள் கைதிகளாக இளைஞர்கள் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். மாலை நேரங்களில் மாணவர்கள் போராட்ட களத்திற்கு வருகை தந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

படங்கள்: முத்துப்பேட்டை சுல்தான் இப்ராஹீம்
 
 





 

Thursday, February 21, 2019

முத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணியின் தற்போதைய நிலவரம் (படங்கள்)

முத்துப்பேட்டை, பிப். 21
திருவாரூர் ~ பட்டுக்கோட்டை இடையேயான வழித்தடத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம் (நாச்சிகுளம்), முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வரையிலான 70 கிலோ மீட்டர் தூர அகல ரயில் பாதை பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த வழித்தடத்தில் உள்ள முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் 90 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், எஞ்சிய இறுதிகட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை மாலை எடுக்கப்பட்ட படங்கள்...
 

Thursday, December 27, 2018

முத்துப்பேட்டையில் பைக்கில் இருந்து கீழே விழுந்த பெண் மீது அரசுப்பேருந்து மோதி பலி!

முத்துப்பேட்டை, டிச.27
பைக்கிலிருந்து கீழே விழுந்த பெண் மீது பின்னே வந்த அரசுப்பேருந்து மோதி பலியானார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வடசேரி ரோட்டைச் சேர்ந்தவர் சாதிக் பாட்சா. இவரது மனைவி சகிலா பானு (30). இவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் முத்துப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு இன்று வியாழக்கிழமை மதியம் சென்றுகொண்டிருந்தார். வாகனம் முத்துப்பேட்டை தனியார் பள்ளி ரயில்வே கேட் அருகே கடந்தபோது, பின்னால் அமர்ந்திருந்த சகிலா பானு திடீரென வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். அப்போது, பின்னே வந்த அரசுப்பேருந்து மோதியதில் சகிலா பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், போலீசார் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக தமுமுக ஆம்புலன்ஸில்  திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி மற்றும் படங்கள்:
முத்துப்பேட்டை சுல்தான் இப்ராஹீம் (சுனா.இனா)
 
 

Sunday, November 4, 2018

முத்துப்பேட்டை ஈஸ்ட் கோஸ்ட் சாலை தடுப்பு சுவரில் அரசு விரைவுப் பேருந்து மோதி விபத்து (படங்கள்)

முத்துப்பேட்டை, நவ.04
திபாவளி பண்டிகையொட்டி சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு விரைவுப் பேருந்து ஒன்று சென்னையிலிருந்து நேற்று சனிக்கிழமை இரவு புறப்பட்டு இராமேஸ்வரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் ஈஸ்ட் கோஸ்ட் சாலை முத்துப்பேட்டை அருகே வந்தபோது சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த பயணிகள் காயங்களின்றி தப்பினர். இச்சாலையில் நள்ளிரவில் வாகனப் போக்குவரத்து குறைவாக காணப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேதமடைந்த அரசுப் பேருந்தை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை 'சமூக ஆர்வலர்' சூனா இனா (சுல்தான் இப்ராஹீம்) கூறியது;
'முத்துப்பேட்டை ஈஸ்ட் கோஸ்ட் பை பாஸ் சாலையில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, இரவில் கடந்து செல்லும் வாகனங்கள் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றன. இப்பகுதியில், வாகன விபத்து தடுப்பு எச்சரிக்கை அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக வாகன வேகத் தடுப்பு, சாலையின் வளைவுகளில் ஒளி எழுப்பான், எல்இடி விளக்குகள் போன்றவற்றை அமைப்பதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
 
 
 
 
 
 

Sunday, October 28, 2018

முத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணியின் தற்போதைய நிலவரம் (படங்கள்)

முத்துப்பேட்டை, அக்.28
திருவாரூர் ~ பட்டுக்கோட்டை இடையேயான வழித்தடத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, நாச்சிகுளம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வரையிலான 70 கிலோ மீட்டர் தூர அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த வழித்தடத்தில் உள்ள முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் தற்போது நடந்துவரும் கட்டுமானப் பணியின் நிலவரம் குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை எடுக்கப்பட்ட படங்கள்...