.

Pages

Showing posts with label வணிகச்செய்திகள். Show all posts
Showing posts with label வணிகச்செய்திகள். Show all posts

Friday, June 5, 2020

அதிராம்பட்டினத்தில் ஆட்டு இறைச்சி விலை குறைப்பு ஏன்?

அதிராம்பட்டினம், ஜூன் 05
அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக ரூ.700 க்கு விற்கப்பட்டு வந்த ஆட்டு இறைச்சி தற்போது ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது.

திடீர் விலை குறைப்பு பற்றி ஆட்டிறைச்சி வியாபாரி அஸ்ரப் கூறியது; 
செம்மறி இன ஆடுகள் வளர்க்கும் விவசாயிகள் இந்த மாதத்தில் ஆடுகளை கழிப்பதை வழமையாக கொண்டிருப்பார்கள். கழிக்கவில்லை என்றால், ஆடுகள் சினை படும் போது கலைந்து விடும் அபாயம் நிலவும் என்பதால், ஆடு வளர்ப்போர் ஆடுகளை விற்க அதிகம் ஆர்வம் காட்டுவர். தற்போது, கரோனா ஊரடங்கால் கால்நடை சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆடுகள் மொத்த விற்பனையும் மந்தமாகவே உள்ளன.

மேலும், திருமண விருந்து, மொய் விருந்து உள்ளிட்ட பல்வேறு விருந்து விழாக்கள் நடைபெருவதில்லை. இதனால் ஆட்டிறைச்சி பயன்பாடும் வெகுவாக குறைந்திருக்கிறது. தற்போது ஆடுகளை கழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதால், வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்கின்றனர். இதனால், ஆட்டிறைச்சியின் விலை குறைந்துள்ளது என்றார்.

Friday, May 29, 2020

அதிராம்பட்டினத்தில் ஆட்டு இறைச்சி ரூ.600 க்கு விற்பனை!

அதிராம்பட்டினம், மே.29
அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக ரூ.700 க்கு விற்கப்பட்டு வந்த ஆட்டு இறைச்சி தற்போது அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி நிஜாம் மட்டன் ஸ்டாலில் ரூ.600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து அதிராம்பட்டினம் நிஜாம் மட்டன் ஸ்டால் கே. ராஜிக் முகமது கூறியது;
'ரூ.700 க்கு விற்கப்பட்டு வந்த ஆட்டு இறைச்சி இன்று (29-05-2020) வெள்ளிக்கிழமை முதல் ரூ.600 க்கு விற்கப்படுகிறது. எங்களது விற்பனையகத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு தோறும் சலுகை விலையில் ஆட்டு இறைச்சி வழங்கப்படும். அதனடிப்படையில் தற்போது  ரூ.100 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை விலை விற்பனை எங்களிடமிருந்து மறு அறிவிப்பு வரும் வரை தொடரும்' என்றார்.

Wednesday, February 5, 2020

அதிராம்பட்டினத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை தொடக்கம்!

அதிராம்பட்டினம், பிப்:05
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தா்பூசணி பழங்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

ஆண்டுதோறும் வெயில் அதிகமிருக்கும் மாா்ச் முதல் ஜூன் மாதம் வரையுள்ள நாள்களில் திண்டுக்கல், ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் அதிராம்பட்டினத்துக்கு தா்பூசணி பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

ஆனால், நிகழாண்டு ஜனவரி மாதம் முடிந்து தற்போதுதான் பிப்ரவரி மாதம் தொடங்கியுள்ள நிலையில், அதிராம்பட்டினம் பகுதியில் கோடை காலம் ஆரம்பமாவதற்கு முன்னரே அனல் கக்கும் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் லாரிகளில் தா்பூசணி பழங்களை விற்பனைக்காக அதிராம்பட்டினத்துக்கு கொண்டு வந்துள்ளனா். இங்குள்ள கிழக்கு கடற்கரை சாலை, வண்டிப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்துள்ள ஏராளமான தா்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள அதிராம்பட்டினம் பகுதி மக்கள் வெயிலின் தாக்கத்தை குறைத்து கொள்வதற்காக தா்பூசணி பழங்களை ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.
 
 


Wednesday, October 9, 2019

அதிராம்பட்டினம் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை தும்பி மீன் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.09
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மீனவா் வலையில் அரியவகை தும்பி மீன் சிக்கியது.

அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகா், கரையூா் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவா்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனா்.

அதே போல் அருகிலுள்ள மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் கடலில் மீனவா் ஒருவரின் வலையில் சிக்கிய சுமாா் முக்கால் கிலோ எடையுள்ள அரிய வகை தும்பி மீன், அதிராம்பட்டினம் கடைத்தெரு பெரிய மாா்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை காலை பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மீனை வாடிக்கையாளா்கள் பலா் வியப்புடன் பாா்வையிட்டுச் சென்றனா்.

இதுகுறித்து மீன் வியாபாரி முகமது முகைதீன் கூறியது:
'பல வண்ணங்களில் காட்சியளிக்கும் இந்த மீனைச் சுற்றிக் காணப்படும் முள் கடும் விஷத்தன்மை கொண்டது. இந்த மீனை வலையில் சிக்கும் போது மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். கை, கால்களில் மீனின் முள் குத்தினால் கடுமையாக வலி ஏற்பட்டு, குத்தியப்பகுதியில் உடனே வீக்கம் ஏற்படும். இந்த மீன் உண்பதற்கு ஏற்றதல்ல. இருப்பினும், அரியவகை மீன் என்பதால் மக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது' என்றாா்.
 
  
 

Thursday, May 9, 2019

மீன் வரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்படும் அதிராம்பட்டினம் மீன் மார்க்கெட்!

அதிராம்பட்டினம், மே 09
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக காற்று வேகமாக வீசி வருவதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது குறைந்து விட்டது. இதனால், அதிராம்பட்டினம் கடைத்தெரு மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தமிழகத்தின் கடற்பகுதியில் தற்போது மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள் நாட்டுப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தனர். மீனவர் வலையில் அகப்படும் தேசைப்பொடி மீன், கத்தாளை, தாளன்சுறா, முரல் உள்ளிட்ட சிறு மீன்களை மீன் வியாபாரிகள் கடைத்தெரு மீன் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அதிராம்பட்டினம் கடலோரப்பகுதியில் வேகமாக காற்று வீசி வருவதால், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது குறைந்துவிட்டது. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் அதிராம்பட்டினம் கடைத்தெரு மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகின்றன. மீன்கள் கிடைக்காததால் மீன் வாங்க வரும் பலரும் ஏமாற்றமடைந்து செல்கின்றனர். வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்வதும் தடைபட்டுள்ளது.

Wednesday, April 24, 2019

அதிராம்பட்டினத்தில் வெள்ளரிப் பழங்கள் விற்பனை தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம் ஏப்.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானக் கடைகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை அதிராம்பட்டினம் கடைவீதிக்கு வெயிலுக்கு இதமான வெள்ளரிப் பழங்கள் கூடை, கூடையாக விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன.

இந்தப் பழங்கள் பக்கத்திலுள்ள மங்கனங்காடு கிராமத்திலிருந்து அதிராம்பட்டினம் கடைத்தெரு மார்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய பழம் ரூ.40-க்கும், பெரிய பழம் ரூ.60-க்கும் விற்பனையாகிறது.

இதுகுறித்து வெள்ளரிப்பழ சாகுபடியாளரும், விற்பனையாளருமான மங்கனங்காடு சுப்பிரமணியன் கூறியது: 
'எனது கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக சுமார் 1 ஏக்கர் நிலத்தில் வெள்ளரிப்பழங்களை சொந்தமாக சாகுபடி செய்கிறேன். கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் அதிராம்பட்டினம் கடைத்தெரு பகுதிக்கு வழக்கம் போல் வெள்ளரிப் பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறேன். தினமும் 150 பழங்கள் வரை விற்பனையாகிறது.

சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 3 மாதங்கள் மட்டுமே விளையக் கூடிய வெள்ளரிப் பழங்கள் மருத்துவ குணம் கொண்டவை. வெயிலுக்கு இதம் தரும் இந்த பழங்கள் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடலாம். குறிப்பாக உடல் பருமனை குறைக்க உதவும்.

3 மாதங்கள் மட்டுமே இந்த பழங்கள் கிடைக்கும் என்பதால், இப்பழத்துக்கு எப்போதும் கிராக்கி அதிகம். வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் அம்மை, வியர்க்குரு, வியர்வை கொப்பளங்கள் போன்றவற்றை தடுக்கும் வல்லமை கொண்டது.

வெள்ளரிப் பழம் சாப்பிட்டால் உடல் சூடு தணியும். வெள்ளரிப்பழச்சாறு குடித்தால் தாகம் தணியும். இந்த ஆண்டு கோடை வெப்பம் கடுமையாக இருப்பதால் அதிராம்பட்டினம் பகுதியில் பொதுமக்கள் வெள்ளரிப் பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்' என்றார்.






Tuesday, February 12, 2019

அதிராம்பட்டினத்தில் தக்காளி மீன்கள் விற்பனை (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதே போல் அருகில் உள்ள மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடலில் தூண்டில் மூலம் பிடிபட்ட சிகப்பு நிற கலவாய் மீன்கள் அதிராம்பட்டினம் கடைத்தெரு பெரிய மார்க்கெட்டிற்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை விற்பனைக்கு வந்தது. கிலோ ரூ.300 க்கு விற்பனையானது. மீன் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் இம்மீன்களை வியப்புடன் பார்வையிட்டனர்.

இதுகுறித்து மீன் வியாபாரி முகமது அலி கூறியது;
'சிகப்பு நிறத்தில் காணப்படும் இவ்வகை மீனை 'தக்காளி மீன்' என்று வியாபாரிகள் அழைப்பர். வளைகுடா நாடுகளில் இந்த வகை மீன்களை 'ஹம்ரூ'  என்ற பெயரில் அழைப்பதுண்டு. சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும்' என்றார்.
 

Wednesday, January 30, 2019

அதிராம்பட்டினத்தில் அபூர்வ பொட்டிக்கிழங்கு விற்பனை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகிற கடைத்தெரு பெரிய மீன் மார்க்கெட் பகுதியில் அப்பகுதியின் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான சில்லறை பெண் வியாபாரிகள் மார்க்கெட்டின் முகப்பு பகுதியில் வரிசையாக அமர்ந்து வியாபாரம் செய்வார்கள். இங்கு அந்தந்த காலக்கட்டங்களில் கிடைக்கும் பனங்கிழங்கு, இலந்தைப்பழம், நிலக்கடலை, சோளக்கதிர், மரவள்ளிக் கிழங்கு, சக்கரைவள்ளி கிழங்கு, பப்பாளி, வாழைப்பழம், கீரைவகைகள் , மாங்காய், மாம்பலம், நாவப்பழம், சீதாப்பழம், பலாப்பழம், கொய்யப்பழம் உள்ளிட்டவை விற்கப்படும். மார்க்கெட்டிற்கு மீன், இறைச்சி மற்றும் காய் கறிகள் வாங்க வரும் அன்றாட வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை வீட்டிற்கு விரும்பி வாங்கிச்செல்வார். இதனால் இப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில், வருஷத்தில் சில நாட்கள் மாத்திரம் அபூர்வமாகக் கிடைக்கும் பொட்டிக்கிழங்கு இன்று புதன்கிழமை காலை விற்பனைக்கு வந்தது. மருத்துவ குணம் வாய்ந்த பொட்டிக்கிழங்கை அதிகமானோர் வாங்கிச்சென்றனர். ஒரு சுண்டு (ஒரு குவளை அளவு) பொட்டிக்கிழங்கு ரூ. 20 க்கு விற்பனை ஆனது.

இதுகுறித்து மார்க்கெட் பகுதியில் பொட்டிக்கிழங்கு விற்பனை செய்யும் நாடியம்மாள் கூறியது;
'வருடம்தோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் மாத்திரம் பொட்டிக்கிழங்கு கிடைக்கும். வயல் பகுதிகளில் தானாக வளரக்கூடியது. சுமார் அரை அடி ஆழம் வரை தோண்டி பெரும் சிரமத்திற்கு மத்தியில் கிழங்கை எடுக்கிறோம். கிழங்கை சுற்றியுள்ள வேர்களை முழுவதும் பிடுங்கி எடுத்துவிட்டு நீரில் அவித்து விடுகிறோம். அவித்த கிழங்கு சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். மருத்துவக்குணம் வாய்ந்தது. உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. பலதரப்பட்ட நோய்களுக்கு நிவாரணியாக விளங்குகிறது' என்றார்.
 
 
 

Wednesday, October 10, 2018

அதிராம்பட்டினம் மீனவரின் தூண்டிலில் சிக்கிய அரிய வகை 'ஹம்ரூ' மீன்கள் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.10
அதிராம்பட்டினம் மீனவரின் தூண்டிலில் அரிய வகை கலவாய் இன 'ஹம்ரூ' மீன்கள் சிக்கியது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதே போல் அருகில் உள்ள மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் மீனவரின் தூண்டிலில் சிக்கிய அரிய வகை கலவாய் இன 'ஹம்ரூ' மீன்கள் இன்று புதன்கிழமை காலை அதிராம்பட்டினம் கடைத்தெரு மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தது. சுமார் 15 கிலோ எடைகொண்ட இரு மீன்களையும் வியாபாரிகள் வியப்புடன் பார்வையிட்டனர்.

இதுகுறித்து மீன் வியாபாரி முகமது அலி கூறியது;
'அதிராம்பட்டினம் கடலோரப்பகுதிகளில் அண்மையில் பெய்த தொடர் மழையால், கடலின் கரையோரத்தில் அதிகளவில் மீன்கள் தென்படும். கடந்த சில நாட்களாக கடலுக்கு செல்லும் மீனவர்கள் தூண்டில் மூலம் மீன்களை பிடித்து வருகின்றனர். இதில், சிக்கிய அரிய வகை கலவாய் இன மீன்களை விற்பனைக்காக இங்கு (கடைத்தெரு மீன் மார்க்கெட்டுக்கு) கொண்டு வரப்பட்டு, கிலோ ரூ. 300 க்கு விற்பனையானது. இம்மீன்களை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச்சென்றனர். இவ்வகை மீன்கள், வளைகுடா நாடுகளில் 'ஹம்ரூ' என்ற பெயரில் அழைப்பது உண்டு. அதே பெயரில் இப்பகுதியினர் அழைத்து வருகின்றனர். சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும்' என்றார்.
 

Sunday, September 2, 2018

அதிரையில் அபூர்வ கண்ணாடி பாறை மீன்கள் விற்பனை (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதே போல் அருகில் உள்ள மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அதிராம்பட்டினம் கடைத்தெரு பெரிய மீன் மார்கெட்டிற்கு 28 கிலோ எடையில் அபூர்வ கண்ணாடி பாறை மீன்கள் விற்பனைக்கு வந்தது. ஏற்றுமதிக்காக மீன் வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச்சென்றனர். கிலோ ரூ.350 க்கு விற்பனை ஆனது.

இதுகுறித்து மீன் வியாபாரி முகமது முகைதீன் கூறியது;
'பாறை மீன்களில் 100 க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இவை, அபூர்வ வகை கண்ணாடி பாறை. பெரும்பாலும் ஆழ்கடலில் மட்டும் வசிக்கும். மீனவர்கள் வலையில் அரிதாகவே சிக்கும். மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் இவற்றை வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது' என்றார்.
 
 

Friday, August 17, 2018

அதிரையில் குர்பானி ஆடு கிலோ ரூ.250 க்கு விற்பனை!

அதிராம்பட்டினம், ஆக.17
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் குர்பானி இறைச்சியை தானமாக வழங்கி மகிழ்வது இப்பண்டிகையின் சிறப்பாகும்.

ஹஜ் பெருநாள் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி விவசாயிகளிடமிருந்து ஏராளமான செம்மறி ஆடுகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து அதிரை நகரிலுள்ள வர்த்தகப் பகுதிகளில் விற்பனைக்காக நிறுத்தி வைத்துள்ளனர்.

அதிராம்பட்டினம், காட்டுப்பள்ளி பெண்கள் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள நிஜாம் மட்டன் ஸ்டாலில், குர்பானி ஆடு ரூ. 250 க்கு விற்பனையாகிறது. குர்பானி ஆடுகளை வாடிக்கையாளர்கள் போட்டிக் போட்டுக்கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து நிஜாம் மட்டன் ஸ்டால் உரிமையாளர் கே. ராஜிக் முகமது கூறியது;
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் குர்பானி இறைச்சியை தானமாக வழங்கி மகிழ்வார்கள்.

ஹஜ் பெருநாள் பண்டிகை நெருங்கிவிட்டதை அடுத்து, எங்களது கடையில் செம்மறி ஆடுகள் விற்பனை தொடங்கிவிடும். தினமும் வாடிக்கையாளர்கள் ஆடுகளை பார்ப்பதற்காக திடலில் மேயவிடுவோம். இவற்றைப் பார்வையிடும் வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமான ஆடுகளைத் தேர்வு செய்து விலைக்கு வாங்கிச் செல்வர். சராசரியாக 16 முதல் 30 கிலோ வரை எடைகொண்ட குர்பானி ஆடுகள் விற்பனைக்கு உள்ளது. காலை நேரத்தில் கிலோ ரூ. 270 க்கும், மாலை நேரத்தில் கிலோ ரூ. 250 க்கும் விற்கப்படுகிறது. இந்த விற்பனை ஹஜ் பெருநாள் பண்டிகை நாளான ஆக. 22-ம் தேதி வரை தொடரும் என்றார்.

தொடர்புக்கு: 
9943447195 / 9543612716 / 9943447196 / 9943447197