அதிராம்பட்டினம், ஜூலை 23
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அதிரை FM 90.4 சமூகப் பண்பலை வானொலி சார்பில், பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு, அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி நிர்வாகப் பொருளாளர் ஹாஜி முகமது இப்ராஹீம் தலைமை வகித்தார். நிகழ்வை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை சித்தா மருத்துவப்பிரிவு மருத்துவர் டாக்டர் இ.அருண்குமார் தொடங்கி வைத்து, கப சூரக் குடிநீரின் அவசியம் மற்றும் அதன் பயன்பாடு பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். மேலும், கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பரப்புரை வழங்கினர்.
இந்நிகழ்வில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் (சித்தா மருத்துவப்பிரிவு) நிவேதா, அதிரை FM சமூகப் பண்பலை வானொலி நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினர் சேக்கனா எம்.நிஜாமுதீன், மணிச்சுடர் ஏ.சாகுல் ஹமீது, நிலைய ஒருங்கினைப்பாளர் கண்ணன், சவுண்ட் இன்ஜினியர் உமர் ஆகியோர் கலந்துகொண்டு, அதிராம்பட்டினம் சேர்மன் வாடி, பெரிய கடைத்தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீரை நேரில் சென்று வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அதிரை FM 90.4 சமூகப் பண்பலை வானொலி செய்திருந்தது.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அதிரை FM 90.4 சமூகப் பண்பலை வானொலி சார்பில், பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு, அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி நிர்வாகப் பொருளாளர் ஹாஜி முகமது இப்ராஹீம் தலைமை வகித்தார். நிகழ்வை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை சித்தா மருத்துவப்பிரிவு மருத்துவர் டாக்டர் இ.அருண்குமார் தொடங்கி வைத்து, கப சூரக் குடிநீரின் அவசியம் மற்றும் அதன் பயன்பாடு பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். மேலும், கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பரப்புரை வழங்கினர்.
இந்நிகழ்வில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் (சித்தா மருத்துவப்பிரிவு) நிவேதா, அதிரை FM சமூகப் பண்பலை வானொலி நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினர் சேக்கனா எம்.நிஜாமுதீன், மணிச்சுடர் ஏ.சாகுல் ஹமீது, நிலைய ஒருங்கினைப்பாளர் கண்ணன், சவுண்ட் இன்ஜினியர் உமர் ஆகியோர் கலந்துகொண்டு, அதிராம்பட்டினம் சேர்மன் வாடி, பெரிய கடைத்தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீரை நேரில் சென்று வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அதிரை FM 90.4 சமூகப் பண்பலை வானொலி செய்திருந்தது.



















































