மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று (அக்.17) வெளியிடப்பட்டன.
இதுகுறித்து, அதிராம்பட்டினம் அடுத்து பிரிலியன்ட் சிபிஎஸ்இ பள்ளி நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி மைய இயக்குநர் வீ.சுப்ரமணியன் கூறியது;
பிரிலியன்ட் சிபிஎஸ்இ பள்ளி, ராஜஸ்தான் கோட்டா கேரியர் பாயிண்ட் நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்திய பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் எஸ்.திவ்யா, ஐ.தனுஷ் முறையே 588,587 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அரசு ஒதுக்கீட்டிலும், என்.விக்னேஷ், எஸ்.மணிகண்டன் ஆகியோர் முறையே 480, 476 மதிப்பெண்கள் பெற்று மாநில அரசு ஒதுக்கீட்டிலும், சிறப்பு ஒதுக்கீட்டில் 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்று மொத்தம் 8 மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர உள்ளார்கள் என்றார்.




































