அதிராம்பட்டினம், ஆக.12
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அறிவுறுத்தலின் பேரில், சர்வதேச இளைஞர் தின நிகழ்ச்சி புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்வில், கரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டன. மேலும், கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசூரக் குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், காதிர் முகைதீன் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே.முத்துக்குமரவேல், பேராசிரியர்கள் ஜெ.விஜயவேல், எஸ்.அன்பழகன், புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வெங்கடாசலம், ஊராட்சி கவுன்சிலர் எஸ்.மனோகரன் உள்ளிட்ட பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அறிவுறுத்தலின் பேரில், சர்வதேச இளைஞர் தின நிகழ்ச்சி புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்வில், கரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டன. மேலும், கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசூரக் குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், காதிர் முகைதீன் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே.முத்துக்குமரவேல், பேராசிரியர்கள் ஜெ.விஜயவேல், எஸ்.அன்பழகன், புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வெங்கடாசலம், ஊராட்சி கவுன்சிலர் எஸ்.மனோகரன் உள்ளிட்ட பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்துகொண்டனர்.












































