.

Pages

Friday, June 3, 2022

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன்.03

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின மார்ச் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் துணைதலைவர் வழக்குரைஞர் ஏ.முனாப் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (31-005-2022) அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.














Monday, May 2, 2022

ஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள் )


அதிரை நியூஸ்: மே.02 

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் ஜப்பான் நாட்டிலும் வசித்து வருகின்றனர். ஜப்பானில் வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று திங்கட்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஜப்பான் அஷிகஹா யமஸ்டசோவில் உள்ள நூர் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாகக் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.

இங்குள்ள, நூர் மஸ்ஜித்தில் ஆண்களுக்கு காலை 6 மணி, 7 மணி ஆகிய வேளைகளிலும், பெண்களுக்கு காலை 8 மணிக்கும் பெருநாள் சிறப்புத் தொழுகை தனித்தனியாக நடத்தப்பட்டது.





















Thursday, April 28, 2022

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)


அதிராம்பட்டினம், ஏப்.29

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின ஏப்ரல் மாத மாதாந்திரக் கூட்டம், இஃப்தார் நிகழ்வு  அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத் அவர்களின் தலைமையில், ஏஜெ ஜும்மா பள்ளி வாசல் வளாகத்தில் (25-04-2022) அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
















Friday, April 15, 2022

அதிரை பைத்துல்மால் சார்பில் தையல் இயந்திரம் வழங்கல்!

அதிரை பைத்துல்மாலில் ஏழ்மையான 4 சகோதரிகளுக்கு வாழ்வாதார உதவியாக 4 தையல் மெஷின் 14-04-2022 அன்று அவ்வமைப்பின் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், அவ்வமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.