.

Pages

Sunday, July 6, 2014

துபாயில் அதிரை நோன்பு கஞ்சியை தயாரித்து கொடுக்கும் நம்மூர் இளைஞர் !

அதிரையை சேர்ந்தவர் அலி அக்பர். துபாயில் பணி புரிந்துவரும் இவர் கடந்த வருடம் தனது நண்பர்களுக்காக புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சியை பிரத்தியகமாக தயார் கொடுத்துவந்தார். அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்று வந்தது. அனைவரும் ஆர்வத்துடன் ஆர்டரும் கொடுத்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் நோன்பு கஞ்சி தயார் செய்து கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இதுகுறித்து  துபாயிலிருந்து 'சேட்டு' என்கிற அலி அக்பர் நம்மிடம் அலைபேசியில் வாயிலாக கூறியதாவது...
'நமதூர் நோன்புக் கஞ்சி என்றாலே பிற ஊர்களில் மிகவும் பிரபலம். அந்த அளவுக்கு அதன் தனி சுவையும் மணமும் அமைந்திருக்கும். கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் துபாயில் நமதூர் நண்பர்களுக்காக ஆர்டரின் பேரில் நோன்பு கஞ்சியை பிரத்தியகமாக தயார்செய்து கொடுத்துவருகிறேன். இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் நண்பர்கள், சமுதாய அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து எங்களிடம் ஆர்டர் செய்து வருகின்றனர். சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட நோன்பு கஞ்சியை பாதுகாப்பான முறையில் பேக் செய்து சூடாவும் சுவையானதாகவும் குறித்த நேரத்தில் டெலிவரி செய்து வருகிறோம்' என்றார்.

தொடர்புக்கு : 00971 50 8796411, 00971 55 9803935 





குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    சஹர் ரமழான் முபாரக்.

    தம்பி அலி அக்பர் அவர்களை நான் நன்கு அறிவேன், காட்டுக்குளத்திற்கு அருகாமையில் என் வீட்டுக்கு பக்கத்தில் அவரும் வீடு ஒன்றை கட்டிக்கொண்டு இருக்கின்றார்.

    இந்த புனிதமான ரமழானில் இப்படி செய்வது ஒரு வகையில் சேவை மறுவகையில் வியாபாரம், ஆக மொத்தத்தில் எல்லோரும் பயன் பெரும் வகையில் எடுத்த முயற்சி வெற்றியைத் தரும்.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.