அதிராம்பட்டினம், டிச.13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவை சேர்ந்தவர் சிவா என்கிற என். செல்லத்துரை(58). இவர் செவ்வாய்க்கிழமை காலை அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் தியாகராஜன் செல்லதுரையை சோதனையிட்டு, அவரிடமிருந்த அஸாம் மாநில லாட்டரி டிக்கெட்டுகள், அதை விற்ற பணம் ரூ.200 ஆகியவற்றை பறிமுதல் செய்தார். இதுதொடர்பாக, அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து, செல்லதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவை சேர்ந்தவர் சிவா என்கிற என். செல்லத்துரை(58). இவர் செவ்வாய்க்கிழமை காலை அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் தியாகராஜன் செல்லதுரையை சோதனையிட்டு, அவரிடமிருந்த அஸாம் மாநில லாட்டரி டிக்கெட்டுகள், அதை விற்ற பணம் ரூ.200 ஆகியவற்றை பறிமுதல் செய்தார். இதுதொடர்பாக, அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து, செல்லதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.