துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து கென்யாவின் நைரோபிக்கு சுமார் 100 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போது திடீரென சூடானில் தரையிறக்கப்பட்டது. காரணம் ஒரு ப்ளூடூத் வைபை ஹாட்ஸ்பாட் பாஸ்வேர்டு.
பயணி ஒருவர் தனது வைபை பாஸ்வேர்டாக "bomb on board" என்ற வார்த்தைகளை ரகசிய பெயரை வைத்திருந்தார். இந்த பாஸ்வேர்டை படித்த விமானத்தின் தானியங்கி கணினி அமைப்பு விமானிகளை எச்சரித்ததன் விளைவே உடனடி விமான தரையிறக்கம்.
பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டு சோதிக்கப்பட்டு மீண்டும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். இந்த சோதனையின் போது தான் அந்தப் பயணியின் மிரட்டும் ப்ளூடூத் வைபை பாஸ்வேர்டு கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும், அந்தப் பயணி எந்தவித தவறான நோக்கமும் இன்றி எதார்த்தமாக அந்த வில்லங்க பாஸ்வேர்டை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரை மன்னித்து, பாஸ்வேர்டை மாற்றுமாறு புத்திமதி சொல்லி அனுப்பிவிட்டனர்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.