.

Pages

Showing posts with label அதிசயம். Show all posts
Showing posts with label அதிசயம். Show all posts

Friday, September 27, 2019

அதிசய பறவைக் கூடுகள் (படங்கள்)

இறைவனின் படைப்புகள் அனைத்தும் ஆச்சரியம் மிகுந்தவை. நம்முடைய வாழ்வில் பல்வேறு வகையான பறவைக்கூடுகளைக் கண்டு அதிசயத்திருப்போம் அல்லவா!

இதோ ஒருசில பறவை வீடுகள் உங்கள் ரசனைக்காக!
கிளிக்கூண்டில் அழகு பறவையாக வளர்க்கப்படும் கோழிக்குஞ்சுகள்
'தந்திமரம்' என நம் முந்தைய தலைமுறை சொன்னதை தவறாக புரிந்துகொண்ட ஒரு காகத்தின் கூடு

சாண்ட்லியர் விளக்கிற்கு மேலும் அழகு சேர்க்கும் சிட்டுக்குருவி கூடு
கதிர்வீச்சால் அழிவதாக சொல்லப்படும் நிலையில் எக்ஸ்ரே ரூமிற்கு அருகிலேயே மின்வயருக்குள் குடித்தனம் செய்யும் சிட்டுக்குருவி கூடு
பட்ட பனை மரத்தின் உச்சியும் ஒரு கூடுதான்
மிகவும் ஆச்சரியப்படுத்திய சின்னஞ்சிறு பறவையின் கூடு... 3 கொய்யா இலைகள் நேர்த்தியாக தைத்தும் ஒரு இலையை அந்தக் கூட்டின் குடையாகவும் அமைத்து உள்ளுக்குள் தனது வீட்டை அமைத்துக் கொண்ட பூஞ்சிட்டின் கூடு
இந்த ஒற்றை ஆலமரம் பறவை கூடல்ல.. சரணாலயம் என அழைப்பதே தகும். நூற்றுக்கணக்கான பறவைகளின் ஒரே வீடு

அழகிய படைப்பாளன் இறைவனுக்கு புகழனைத்தும்...

அதிரை அமீன்

Tuesday, January 8, 2019

அதிராம்பட்டினம் அருகே மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.08
அதிராம்பட்டினம் அடுத்து சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள ராவுத்தன் வயல் ஊராட்சி மறவன் வயல் பகுதியை சேர்ந்தவர் மதி (வயது 32) விவசாயி. இவர் வீட்டில் ஆடு வளர்த்து வருகிறார். நிறைமாத சினையாக இருந்த இவரது ஆடு இன்று செவ்வாய்க்கிழமை காலை இரண்டு குட்டிகளை ஈன்றது. அதில், ஒன்று சாதாரண குட்டியாகவும், மற்றொன்று மனித உருவத்தில் இறந்து பிறந்தது. அக்குட்டியின் உடல் பருமனாகவும், முகம் மனித உருவத்தில் இருந்ததைக் கண்டு மதி அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து வந்த அப்பகுதியினர் மனித உருவ ஆட்டுக்குட்டியை வியப்புடன் பார்த்துச் சென்றனர். பின்னர், அக்குட்டியை அடக்கம் செய்துவிட்டனர்.
 

Tuesday, February 13, 2018

அதிராம்பட்டினம் விவசாயி தோட்டத்தில் கொம்பு முளைத்த அதிசய தேங்காய்!

அதிராம்பட்டினம், பிப்.13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஏ.வி.எம் அபூபக்கர் (38). விவசாயி. இவரது அணைக்காடு தோட்டத்தில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் தனது தோட்டத்துக்கு சென்ற அபூபக்கர், வீட்டுக்கு தேவையான தேங்காய்களை பறித்தார். அதில் இரண்டு தேங்காய்கள் இரண்டு கொம்புகளுடன் இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார். பின்னர், அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்து குடும்பத்தினரிடம் காண்பித்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அபூபக்கர் வீட்டுக்கு வந்து கொம்பு முளைத்த அதிசய தேங்காய்களை வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
 

Saturday, August 20, 2016

அதிரையில் நீண்ட கிளையுடன் வளரும் அதிசய வாழை !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 20
வாழைமரம் என்றாலே தண்டுப்பகுதி நேராக வளர்ந்து குலைதள்ளுவது வழக்கம். ஆனால் அதிராம்பட்டினம் தட்டாரத்தெருவில் ஒரு வாழைமரத்தில் நீண்ட கிளைவிட்டு வாழைத்தார் வளர்ந்துள்ளது.

அதிராம்பட்டினம் தட்டாரத்தெரு பகுதியில் வசித்து வருபவர் தேவா, நகைக்கடை உரிமையாளர். இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் வாழைக்கன்றுகள் பயிரிட்டுள்ளார். அதில் ஒரு வாழைக்கன்று தற்போது நீண்ட கிளை விட்டு வாழைத்தார் வளர்ந்துள்ளது. இதைப்பார்த்து ஆச்சரியம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினருக்கு தெரிவித்தார். அவர்களும் இதை பார்த்து ஆர்வமுடன் ரசித்தனர்.
 
 
 
 
 

Friday, April 1, 2016

அதிரை அருகே ஒரே தென்னை மரத்தில் ஒன்பது கிளைகள் உள்ள அதிசய தென்னை மரம் !

அதிரை அருகே உள்ள மகிழங்கோட்டை கிரமத்தில் வசித்து வருபவர் நடராஜன் சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் மா மரம், பலாமரம், வாழைமரம் மற்றும் 250க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வைத்து வளர்த்து வருகின்றனர். இவர்கள் தோப்பில் உள்ள ஒரு தென்னை மரம் கடந்த வருடம் மரத்தின் தலைபகுதியில் கிளை வெடித்து இரண்டு கிளைகள் வந்துள்ளது. அதன் பிறகு அந்த மூன்று கிளைகளில் இருந்தும் இரண்டு கிளைகள் வீதம் வெடித்து தற்போது ஒரே தென்னை மரத்தில் ஒன்பது கிளைகளுடன் ஒரு தென்னை மரம் இருப்பது அந்த பகுதி விவசாயிகளிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஒவ்வொரு புதிய குருத்து தவிர மற்ற கிளைகள் அனைத்திலும் பாலை விட்டு காய்கள் காய்ப்பது வியப்பினை ஏற்படுத்துகிறது.

இது குறித்து மதுக்கூர் வேளாண்மை அலுவலர் நவீன் சேவியரை தொடர்புகொண்டு கேட்டபோது. 'ஒரு மரத்தில் இரண்டு கிளைகள் இருக்கும் அதிலும் ஒரு கிளைதான் காய்க்கும் , இதில் மூன்று கிளைகள் முளைத்து, அதிலிருந்து தலா இரண்டு கிளைகள் வந்து ஒவ்வொன்றும் காய்ப்பது அதிசயமாக இருக்கிறது. இந்த தகவலை வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தெரிவித்து ஆய்வு செய்ய போவதாக கூறியவர். இது பெரும்பாலும் மரபனு மாற்றத்தினால் ஏற்பட்டதாக இருக்கம்' என்றார்.

செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
 

Tuesday, February 17, 2015

இரண்டு வாய்களுடன் அதிசய மீன் !

ஆஸ்திரேலியா தென் பகுதியில் காணப்படும் ஏரியில் இரண்டு வாய்களுடன் கூடிய மீனை கேரி வாரிக் என்பவர் பிடித்துள்ளார். இரண்டு வாய்களும் இணைந்து காணப்படுகின்றன. மேல் பகுதி வாய் திறக்கவும் மூடவும் செய்கிறது. ஆனால் கீழ் பகுதி வாய் திறந்தே காணப்படுகிறது. மற்ற பகுதிகள் சாதரண மீனை போல் காட்சியளிக்கிறது என்றும், இதுவரையில் இதுபோன்ற மீனை தாம் எங்கேயும் கண்டதில்லை என்றும் கூறுகிறார்.

Sunday, January 25, 2015

அதிரையில் விற்பனைக்கு வந்த கத்தரிக்காயில் பொறிக்கப்பட்ட அரபி எழுத்தால் பரபரப்பு !

அதிரை மேலத்தெரு சானாவயல் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது இப்ராஹீம். இன்று காலை சமைப்பதற்காக மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகள் வாங்கியுள்ளார். இவற்றை வீட்டிற்கு கொண்டு வந்து நறுக்கும் போது, கத்தரிக்காயில் அரபி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதை கண்டு ஆச்சரியமடைந்தார்.

தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் அரபி எழுத்துகளுடன் காணப்படும் கத்தரிக்காயை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து 'முஹம்மது இப்ராஹீம்' நம்மிடம் கூறுகையில்...
'கத்தரிக்காயில் அரபி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதை கண்டு வியந்த நான் உடனே உள்ளூர் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் இரண்டு துண்டாக நறுக்கிய கத்திரிக்காயை எடுத்துச் சென்று காட்டினேன். பார்வையிட்ட அவர்கள் இவை அரபி எழுத்துதான் என்று கூறினார்கள்' என்றார்.

இதுகுறித்து மார்க்க அறிஞர்கள் கூறும் போது...
'சிலர் கத்தரிக்காயில் அல்லாஹ் பெயர், மாங்காயில் அல்லாஹ்வின் பெயர்,
தேங்காயில் அல்லாஹ்வின் பெயர், உடலில் அல்லாஹ் அல்லது நபி பெயர், மேகத்தில் அல்லாஹ் அல்லது நபி பெயர் என இது போன்ற செய்திகளை எல்லாம் இஸ்லாத்தின் அதிசயம் என்று கருதுகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். இறைவன் குர்ஆனில் எதை சொல்லியிருக்கிறானோ, இறைவனின் ரசூல் (ஸல்) அவர்கள் எதை நமக்கு நடைமுறைப் படுத்தியிருக்கிறார்களோ அதை மட்டும் பின்பற்றுங்கள்' என்கின்றனர்.

Thursday, January 22, 2015

70 வயது மூதாட்டி இரட்டை குழந்தைகளை பெற்றடுத்த அதிசயம்!

இந்தியாவின் வடக்கு உத்திரப்பிரதேச மாநிலத்தில் Omkari Panwar எனும் கிட்டத்தட்ட 70 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவருக்கு ஆணும் பெண்ணும் என்று இரட்டைக் குழந்தைகள் கடந்த 2008 ம் ஆண்டு பிறந்தது. அதிக வயதில் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்தது உலக சாதனையாக அப்போது கருதப்பட்டது. எனினும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மூதாட்டியின் பெண் குழந்தை மரணமடைந்தது.

தற்போது 76 வயதாகும் மூதாட்டி தனது 6 வயது மகனுடனும், மனநலம் பாதிப்படைந்த கனவருடன் வசித்து வருகிறார். மூதாட்டிக்கு ஏற்கனவே இரண்டு மகள்களும் 5 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். மூத்த வயதில் குழைந்தைகளை பெற்றடுத்ததால் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாக கூறுகின்றனர்.

மூதாட்டி தனது ஆறு வயது மகனுடன் 

Wednesday, December 24, 2014

அதிரையில் விற்பனைக்கு வந்த மீனின் சினையில் பொறிக்கப்பட்ட அரபி எழுத்தால் பரபரப்பு !

அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் அஜ்மல் கான். இவரது மகன் அன்வர்தீன் ( வயது 28 ). இவர் கட்டட பொறியாளராக பணியாற்றி வருகிறார். இன்று காலை சமைப்பதற்காக மீன் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த பண்ணா மீனை வாங்கி வந்து வீட்டில் வைத்து அறுத்துள்ளார். அப்போது மீனின் வயிற்றில் இருந்த சினையை பார்த்தபோது இவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் அரபி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதை கண்டு வியந்துள்ளார். செய்தி குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் மீனின் சினையை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர். இதனால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து 'பொறியாளர்' அன்வர்தீன் நம்மிடம் கூறுகையில்...
'மீனின் சினையில் அரபி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதை கண்டு வியந்த நான் உடனே உள்ளூர் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் மீனின் சினையை எடுத்துச் சென்று காட்டினேன். இவை அரபி எழுத்துதான் என்றும், 'அல்லாஹ்' என்ற வாசகம் இதில் உள்ளதாக கூறினார்கள்' என்றார்.

அதிரையில் ஒரே பிரசவத்தில் ஆறு குட்டிகளை ஈன்ற வெள்ளாடு ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை அடுத்துள்ள கீழபழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். விவசாயியான இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் சினையாக இருந்த வெள்ளாடு ஒன்று ஒரே பிரசவத்தில் ஆறு குட்டிகளை அடுத்தடுத்து ஈன்றது. அதில் மூன்று ஆடுகள் பெண் ஆடுகளாகும். மற்ற மூன்றும் கிடா ஆகும். ஆறு குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளன. இத்தகவல் அக்கம்பக்கத்தில் பரவியது. அப்பகுதியினர் வியப்புடன் பார்த்துச் சென்றனர். வழக்கமாக வெள்ளாடு இரண்டு முதல் நான்கு குட்டிகள் தான் போடும். ஆனால் ஆறு குட்டிகள் போட்டது பொதுமக்கள் அதிசயமாக கருதுகின்றனர்.

இதுகுறித்து விவசாயி பழனிவேல் கூறுகையில்...
'இந்த ஆடு முதல் பிரசவத்தில் இரண்டு குட்டிகளும், அடுத்த ஆறு மாதத்தில் இரண்டாவது பிரசவத்தில் ஒரு குட்டியும் ஈன்றது. தற்போது மூன்றாவது பிரசவத்தில் ஆறு குட்டிகள் ஈன்றுள்ளது' என்றார்.