காரைக்குடி ~ பட்டுக்கோட்டை~ திருவாரூர் ~ மயிலாடுதுறை வரை மீட்டர் கேஜ் பாதையில் இயங்கியதுபோல தினசரி, பயணிகள் இரயில்களை இயக்க வேண்டும்.
காரைக்குடி ~ பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழியாக வாரத்தில் 3 நாட்கள் மட்டும் செங்கோட்டை ~ சென்னை தாம்பரம் இடையே முன் மொழியப்பட்ட விரைவு ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்.
காரைக்குடி- பட்டுக்கோட்டை- திருவாரூர் வழியாக எர்ணாகுளம் ~ வேளாங்கண்ணி இடையே முன் மொழியப்பட்ட விரைவு ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்.
கிழக்கு கடற்கரைச்சாலை, டெல்டா பகுதி விவசாயிகள் மீனவர்கள், வரத்தகர்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில், ஏற்றுமதி, இறக்குதி உள்ளிட்ட தொழில்வளம் மேம்படும் வகையில், இந்த வழித்தடத்தில் உள்ள பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், அறந்தாங்கி, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் சரக்கு முனையம் ஏற்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் நகல், மத்திய ரயில்வே துறை சேர்மன், தமிழக முதல்வர் (தனிப்பிரிவு), தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட வரத்தக மேலாளர், தெற்கு ரயில்வே சென்னை மண்டல துணை பொது மேலாளர் ஆகியோருக்கு தனித்தனியே அனுப்பி வைத்துள்ளனர்.

















































