.

Pages

Showing posts with label அமீரகச்செய்திகள். Show all posts
Showing posts with label அமீரகச்செய்திகள். Show all posts

Friday, May 22, 2015

துபாயில் வானலை வளர்தமிழ் மன்றத்தார் நடத்திய கவியரங்கில் அதிரை கவிஞர்கள் பங்கேற்பு ! [ புகைப் படங்கள் இணைப்பு ]

22/05/2015 இன்று அமீரகம் துபாய் கராமாவில் உள்ள சிவ ஸ்டார் பவனில்  துபாயில் இயங்கிவரும் தமிழ்த்தேர் வானலை வளர்தமிழ் மன்றத்தார்  இம்மாதம் தொழிலாளர்கள் தினத்தை நினைவு கூறும் விதமாக ''புரட்சியின் பூபாளம் '' என்ற தலைப்பில் கவியரங்கம் மிகச் சிறப்புடன்  நடைபெற்றது..

இந்நிகழ்ச்சிக்கு வானலை வளர்தமிழ் ஆசிரியரும் நிர்வாகியுமான காவேரிமைந்தன் அவர்கள் தலைமை தாங்கினார்.மூத்த பத்திரிக்கையாளர் முதுவை ஹிதாயத்துல்லா அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு மலேசிய வாழ் தமிழரும் தமிழ் மேல் மிகுந்த பற்று கொண்டவரும், தமிழை இலகுவாக கற்றுக் கொள்ளும் வகையில் மென்பொருளை தயாரித்துக் கொண்டிருப்பவரும், அரபி மொழியை இலகுவாக பயில கணினி மூலம் பயிற்று கொடுப்பவருமான நசிருல்லாகான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ் மொழியை இலகுவாக பயில்வது குறித்தும் தமிழ் எழுத்துக்களின் புதுவடிவம் குறித்தும்,தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பில் உள்ள நிறைகுறைகள் குறித்தும்  சிறப்புரையாற்றி பல பயனுள்ள விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வண்ணம் ''புரட்சியின் பூபாளம்'' என்ற தலைப்பில் கவிதாயினிகள் அஞ்சுகம்,நர்கிஸ்,நாகி,சுவேதா,ரமா, கவிஞர்கள்  குறிஞ்சிதாசன்,தஞ்சாவூரான், ஜெயராமன்,சசிகுமார்,காவேரிமைந்தன், ஜியாவுதீன்  இவர்களுடன் அதிரையைச் சேர்ந்த கவிஞர்கள்  கவியன்பன் அப்துல் கலாம், அதிரை மெய்சா மற்றும் பல கவிஞர்கள் கலந்துகொண்டு தமது தரப்புக் கவிதைகளை சிறப்புடன் வாசித்தனர் 

இந்நிகழ்ச்சியின் முடிவில் வானலை வளர்தமிழ் பொறுப்பாசிரியர் ஜியாவுதீன் நன்றி கூற நிகழ்ச்சி  இனிதாய் முடிவுற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

தகவல் மற்றும் புகைப் படம்
மூன் டி.வி. ஹிதாயத்துல்லா

Tuesday, May 19, 2015

துபாயில் இமான் அமைப்பு நடத்திய செயற்குழு கூட்டம்.!

கடந்த 18/05/2015 இரவு துபாயில் உள்ள அஸ்கான் ''டி'' பிளாக்கில் துபையில் இயங்கி வரும் இமான் அமைப்பின் செயற்குழு கூட்டம்  இனிதே நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு இமான் அமைப்பின் துணை செயலாளர் ஜனாப் லியாகத் அலி அவர்கள் தலைமை தாங்கினார்  ஜனாப் முஹம்மது தாஹா அவர்கள் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் வருடாவருடம் ரமளான் மாதத்தில் இமான் அமைப்பினரால் அமீரகத்தில் வழங்கிவரும் சுவையுடன் கூடிய தமிழகத்து ருசியுடனான நோன்புக்கஞ்சியை இவ்வருடமும் தொடர்ந்து வழங்குவது குறித்தும், தமிழகத்து மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் கல்வி கை ஏடு இமான் அமைப்பு வெளியிடுவது குறித்தும்  கலந்து ஆலோசிக்கப்பட்டன.

மற்றும் அமீரகத்தில் இமான் அமைப்பு செய்துவரும்  தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம், பொதுமக்கள்  பயன்பெரும்வகையில் இரத்ததான முகாம்,தமிழகத்திலிருந்து அமீரகம் வந்து உடல்நிலை சரியில்லாமலும் தாயகத்திற்கு செல்லமுடியாமலும் தவிக்கும் தமிழருக்கு தாயகம் செல்ல உதவிவருவது குறித்தும்  இங்கு மரணமடையும் தமிழர்களை தாயகம் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்தும்  மேலும் இமான் அமைப்பின் நலத்திட்ட செயல்பாடுகள் குறித்தும்  கலந்து விரிவாக ஆலோசிக்கப் பட்டன.

இக்கூட்டத்திற்கு அருப்புக் கோட்டை ரசாக், பைசுர் ரஹ்மான்,முஹைதீன் மேத்தா,ஹிதாயத்துல்லா,காதர், யாக்கூப் மற்றும் இமான் உறுப்பினர்கள் அனைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .




தகவல் மற்றும் புகைப்படங்கள்
மூன் டி.வி. ஹிதாயத் 

Monday, May 11, 2015

துபாயில் அல் பயான் பத்திரிகை நிறுவனம் தமிழருக்கு பாராட்டி பரிசளித்து கௌரவிப்பு ! [ புகைப்படங்கள் இணைப்பு ]


கடந்த 10/05/2015 ஞாயிற்றுக் கிழமை துபாயில் வெளியாகும் அல் பயான் என்கிற அரபிப் பத்திரிக்கையின் 35 வது வருட விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது இந்த நிறுவனத்தில் கடந்த 32 வருடமாக நன்னடத்தையுடனும் சிறப்புடனும் பணி புரிந்ததற்காக நீடூரைச் சேர்ந்த நஸீர் அலி என்பவருக்கு அந்நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டரும் ஷீஃப் எடிட்டருமான தாஹின் ஷாஹின் [Mr.thahin shahin] அவர்களால் பாராட்டி சான்றிதழ்  வழங்கி பரிசளித்து கௌரவித்தது. அத்துடன் இன்று வெளியான அல் பயான் பத்திரிக்கையிலும் இச்செய்தியை புகைப்படத்துடன்  பிரசுரித்து இருந்தது.

அமீரகத்தில் சமீப காலமாக நன்னடத்தைக்காகவும் சிறப்புடன் பணி புரிந்தமைக்காகவும்  பாராட்டுதலும்,அன்பளிப்புக்களும் கௌரவிப்பும் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் பெறுவது குறிப்பிடத்தக்கது.

நஸீர் அலி நீடூர் சீசன் எனும் இணைய தள நிர்வாகி முகம்மது அலி அவர்களின் மகனார் என்பது குறிப்பிடத் தக்கது.

தகவல் நஸீர் அலி துபாய் 



Sunday, April 19, 2015

துபாயில் நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் த.மு.மு.க வின் மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு ! [படங்கள் இணைப்பு ]!

18/04/2015 இன்று இரவு 9.00 மணியளவில் டேரா துபாய் தமிழ் பஜாரில்  அமைந்துள்ள  த.மு.மு.க துபாய் மண்டல மர்க்கசில் வளைகுடாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமாகிய பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் த.மு.மு.க துபாய் மண்டல மர்க்கசில் நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் இருக்கும் த.மு.முக.கிளைகளின் சார்பாக தர்பியத் நிகழ்ச்சியும் பொதுமக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சமுதாய மக்களுக்கு மார்க்க ரீதியான உபதேசமும் நடைபெற்றது. மார்க்கம் மற்றும் சமுதாய அரசியல் ரீதியான  கேள்விகளுக்கும் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் பதிலளித்தார். 

இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் த.மு.மு.க.தலைவர் அதிரை அப்துல் ஹாதி, துபாய் மண்டலத்தின் த.மு.மு.க.தலைவர் சகோதரர் A.S.இப்ராஹீம் மண்டலத்தின் செயலாளர் சகோதரர் அதிரை S.M.A. அப்துல் ஹமீது மண்டலத்தின் பொருளாளர் சகோதரர் அய்யம்பேட்டை முகம்மது பாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பொதுமக்களும் த.மு.மு.க. ம.ம.க. உறுப்பினர்களும் பெரும்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்து வைத்தனர். கூட்டத்தில் அதிரை நியூஸ் அமீரக செய்தியாளர் நூவன்னா என்கிற நூர்முகம்மது பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ்வை  மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

தகவல் மற்றும் புகைப்படங்கள்:
துபாயிலிருந்து நூர் முகம்மது [ நூவன்னா ]

Sunday, March 1, 2015

துபாயில் EIFF நடத்திய மார்க்க சொற்பொழிவு கூட்டம் ! [ படங்கள் இணைப்பு ]

துபாயில் கடந்த 27/02/2015 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பர் துபாய் அல்முசல்லா டவர் [ பர் துபாய் அல்பஹாதி மெட்ரோ இரயில் நிலையம் அருகில் ] எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம்  நடத்திய மார்க்க சொற்ப்பொழிவு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

துவக்கமாக இன்ஜீனியர் ஜனாப் ஜுனைத் அவர்கள் குரான் ஓதி தமிழிலும் மொழியாக்கம் செய்து துவக்கி வைத்தார்.ஜனாப் E.M.S.அப்துல் ஹமீத் [துணை ஆசிரியர் புதிய விடியல் ] வரவேற்புரை  நிகழ்த்த  சிறப்புரையாக நபிகளாரை நேசிப்போம் [ஹுப்புர் ரசூல் ] என்ற தலைப்பில் ஜனாப் முகம்மத் சாதிக் ரஹ்மானி ஆலிம் அவர்கள் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியை ஜனாப் நூர் முகம்மது தொகுத்து வழங்கினார். இறுதியில் ஜனாப் திட்டவளை அன்வர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த கூட்டம் இனிதாக முடிந்தது.

இக்கூட்டத்திற்கு தமிழ் சகோதரர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

தகவல்: புஹாரி துபாய்
 

Wednesday, February 25, 2015

துபாயில் EIFF நடத்தும் மார்க்க சொற்பொழிவு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு !

அமீரகம் துபாயில் 27/02/2015 வெள்ளிக் கிழமை இரவு 7.30 மணியளவில் பர் துபாய் அல்முசல்லா டவர் [ பர் துபாய் அல்பஹாதி மெட்ரோ இரயில் நிலையம் அருகில் ] எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் நடத்தவிருக்கும்   நபிகளாரை நேசிப்போம் [ஹுப்பூர் ரசூல் ]என்ற தலைப்பில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ உள்ளது. இந்நிகழ்ச்சியில்  அனைத்து தமிழ் சகோதரர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு, 
EMIRATES INDIA FRATERNITY FORUM --EIFF

தகவல்: புஹாரி 

Saturday, January 24, 2015

துபாயில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்திய பொதுக்கூட்டம்!

23/01/2015 இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பர் துபாயில் உள்ள முஸல்லா டவரில் இந்திய அரசியலை நமதாக்குவோம் ! தேசத்தை பொதுவாக்குவோம் ! என்ற தலைப்பில்  இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அமீரக மாநில துணைத் தலைவர் ஜனாப் முபாரக்  தலைமை வகித்தார் B.அப்துல் ஹமீது [ தமிழ் மாநில பொதுச் செயலாளர்  சோசியல்  டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ] சிறப்புரையாற்றினார்

சிறப்பு அழைப்பாளராக அஷ்ரப் [ கேரளா ஜனாதிபதி விருது பெற்ற சமூக ஆர்வலர் ] வருகை தந்திருந்தார்.

முகம்மது முன்னவர் , [ அமீரக தேசிய பொதுச் செயலாளர் ] சுஹைல் யூசுப் [ துபாய் மண்டல தலைவர் ], ஹசன் பாட்சா,[ ஷார்ஜா மண்டல தலைவர் ] கியாசுதீன் [ அபுதாபி மண்டல தலைவர் ],ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இறுதியில் அப்துல் ரஹ்மான் [ சார்ஜா மண்டல பொதுச் செயலாளர் ] நன்றி யுரையாற்ற  கூட்டம் இனிதே நிறைவுற்றது. 

இக்கூட்டத்திற்கு திரளாக தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் வந்து கலந்து  கொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அதிரை மெய்சா

Tuesday, January 20, 2015

துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம் !




துபாயில் 66-வது இந்திய குடியரசு தின விழாவையொட்டி ஈமான் கலாச்சார மையம் ரத்ததான முகாமை துபாய் ரத்ததான மையத்துடன் இணைந்து  23.01.2015 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடத்த இருக்கிறது. 

இந்த தகவலை ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்கள்.

ரத்ததானம் செய்ய விரும்புவோர்

* 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்

* ஏற்கனவே ரத்ததானம் செய்து இரண்டரை மாதங்களுக்கு மேற்பட்டு இருக்க வேண்டும்

* எமிரேட்ஸ் ஐடி, டிரைவிங் லைசன்ஸ், லேபர் கார்டு அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் வரவேண்டும்

ரத்ததானம் செய்வோர் உடலில் தாங்கள் கொடுத்த ரத்தம் 48 மணி நேரத்தில் மீண்டும் கிடைத்து விடும்.

எனவே உயிர் காக்கும் ரத்ததானம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 ரத்ததானம் செய்வதால் நமக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்று அஞ்ச தேவையில்லை. ரத்ததானம் செயவது நம் உடலுக்கு ஆரோக்கியமானது என்றும் உடலில்  தானாகவே 48 மணிநேரத்தில் அதே அளவு ரத்தம் உற்பத்தியாகி விடுவதாக மருத்துவகுறிப்புகள் தெரிவிக்கின்றன.

ரத்ததானம் செய்ய விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களை கீழக்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதுவை ஹிதாயத் :  050 51 96 433
கீழை ஹமீது யாசின் : 052 777 83 41
அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் : 055 41 45 068

 http://imandubai.com/iman/?page_id=2186 என்ற இணைப்பில் சென்று பதிவு செய்யலாம்
அல்லது

 info@imandubai.com

 எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.  \

 தகவல் முதுவை ஹிதாயத் 

Monday, January 19, 2015

துபாயில் திடீர் கனமழை ! [ படங்கள் இணைப்பு ]

அமீரகத்தில் உள்ள பெரும்பாலன இடங்களில் குறிப்பாக அபுதாபி, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் துறிக்கொண்டிருந்த மழை காலை சுமார் 7.45 மணிமுதல் வெளுத்து வாங்குகிறது. ஏற்கனவே அமீரகத்தில் குளிர்காலம் துவங்கிவிட்ட நிலையில் இந்த மழையால் மேலும் குளிர்தன்மை அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமீரகத்தில், வேலை நேரம் பொதுவாக காலை 8 மணிக்கு துவங்கும் நிலையில் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக விடாது தற்போது வரை தொடர்ந்து முஸஃபா பகுதியில் கனமழை பெய்து கொண்டுள்ளது

அபூ ஹாரித்