பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்தும், உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும் அதிராம்பட்டினத்தில் தமுமுகவினர் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவ்வமைப்பின் மாநில துணைச்செயலாளர் அதிரை அகமது ஹாஜா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, மாநில துணைத்தலைவர் கோவை செய்யது கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் என்.காளிதாஸ், மஜக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் அதிரை சேக், சாகுல் ஹமீது ஆகியோர் கண்டித்து பேசினர்.
இந்நிகழ்வில், எஸ்டிபிஐ கட்சி அதிரை பேரூர் தலைவர் எஸ்.அகமது அஸ்லம், மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை சேக், பொருளாளர் மதுக்கூர் ஜபருல்லா மற்றும் அவ்வமைப்பை சேர்ந்த சேக்காதியார், சேக்தாவூது, அப்துல் ஹலீம், சேக் நசுருதீன், சாதிக் பாட்சா உள்ளிட்ட பலர் திரளாகக் கலந்துகொண்டு, நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்களை சிறையிலடைக்க கோரியும், உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு முழக்கமிட்டனர்.





















































