அதிரை நியூஸ்: மார்ச் 31
ஆஸ்திரேலியாவில், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடல் மற்றும் SISMA அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் (30.03.2018) வெள்ளிகிழமை, ஜும்மா தொழுகைக்கு பிறகு ஆபரன் பார்க்கில் (Auburn Park) நடைபெற்றது.
கூட்டத்திற்கு, ஏ.மீரா ஷாஹிப் அமானுல்லா தலைமை வகித்தார். எம்.எஸ் பஷீர் அகமது முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், அதிராம்பட்டினம் பகுதி மாணவர்களின் உயர்கல்வி / IAS, IPS, lawyer, Policy Makers, இந்திய ஆட்சிப்பணிகளில் சேர்வதற்கான ஊக்கம், இதற்கு, SISMA அமைப்பு வழங்கும் ஒத்துழைப்பு, ஆஸ்திரேலியா வாழ் அதிரையர்களுக்கு தேவையான உதவியை வழங்குவது, SISMA அமைப்பின் பதிவு, கூட்டத்தின் தீர்மானங்கள் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், அதிராம்பட்டினம் புதுமனைத்தெரு சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் புதிதாக கட்டப்பட உள்ள திருமண / சமுதாய மண்டப கட்டிடப் பணிக்கு உதவுவது குறித்து பேசப்பட்டது.
இதன்பின்னர், SISMA அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக M.A ஹாலித் அபூபக்கர், செயலாளராக M.S இர்ஷாத் அஹமது, பொருளாளராக M.B இம்ரான் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக M.A ஜெயினுள் ஆபிதீன், M.A முஹம்மது சாலிகு, A மீராஷாஹிப், A.S ஷர்புதீன், M.S பசீர் அஹமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக, SISMA அமைப்பின் நிதிநிலை அறிக்கை வாசிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்களின் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். கூட்ட முடிவில், A.S ஷர்புதீன் அவர்களின் சுவையான மந்தி உணவு பரிமாறப்பட்டன.
இக்கூட்டத்தில், A S சாகுல் ஹமீது, A தையூப், S.A ஷாஹுல் ஹமீது, A இத்ரிஸ், N. இஸ்ஹாக், A.H ஜாவித். M.S ராஜிக், S H சாஜித், J செய்யது ஹுசைன், AG அஹமது முஹைதீன், A K முபாரக், M.A ரபிக், S அப்துல்லாஹ் M ஹிஷாம், I பாரிஸ், A ரியாஸ் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். மேலும், ஆஸ்திரேலியாவின் பிற பகுதிகள், குறிப்பாக, Dubbo விலிருந்து S.S இர்ஷாத், Brisbane லிருந்து M.A பைசல், Melbourne லிருந்து M.O சாலிம், M.F ஷஃபிக், J அப்துல் ஹமீது, ஜே.எம் யாசிர், ஜே.எம் காமில் ஆகியோரின் ஆலோசனைகள் பெறப்பட்டன.