.

Pages

Showing posts with label ஆஸ்திரேலியா செய்திகள். Show all posts
Showing posts with label ஆஸ்திரேலியா செய்திகள். Show all posts

Saturday, June 16, 2018

ஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

 
அதிரை நியூஸ்: ஜூன் 31
இசுலாமியர்களின் ஈகைத் திருநாள் ரமலான் பெருநாள் பண்டிகை உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, ஆஸ்திரேலியாவில் வாழும் அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் (SISMA அமைப்பின்) பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ஆபரன் பார்க்கில் (Auburn Park) சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியா வாழ் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் குடும்பத்துடன் கலந்துகொண்டு பரஸ்பரம் நலம் விசாரிப்பு மற்றும் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர். அனைவருக்கும் அதிரையின் பிரசித்தம் பெற்ற 'அஞ்சு கறி' அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. பின்னர், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு 'பெருநாள் கிட்' அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் குடும்பத்துடன்  கலந்துகொண்டனர்.
 
 
  
 
 
 
 
 
 
 

Sunday, April 22, 2018

ஆஸ்திரேலியா சிட்னியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஏப்.22
ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் சிட்னி நகரில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ, சாகர் மாலா போன்ற திட்டங்களை ரத்து செய்யக்கோரியும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தினர்.

அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

Saturday, March 31, 2018

ஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் ஒன்று கூடல் ~ SISMA புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: மார்ச் 31
ஆஸ்திரேலியாவில், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லா  குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடல் மற்றும் SISMA அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் (30.03.2018) வெள்ளிகிழமை, ஜும்மா தொழுகைக்கு பிறகு ஆபரன் பார்க்கில் (Auburn Park) நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஏ.மீரா ஷாஹிப் அமானுல்லா தலைமை வகித்தார். எம்.எஸ் பஷீர் அகமது முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், அதிராம்பட்டினம் பகுதி மாணவர்களின் உயர்கல்வி / IAS, IPS, lawyer, Policy Makers, இந்திய ஆட்சிப்பணிகளில் சேர்வதற்கான ஊக்கம், இதற்கு, SISMA அமைப்பு வழங்கும் ஒத்துழைப்பு, ஆஸ்திரேலியா வாழ் அதிரையர்களுக்கு தேவையான உதவியை வழங்குவது, SISMA அமைப்பின் பதிவு, கூட்டத்தின் தீர்மானங்கள் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், அதிராம்பட்டினம் புதுமனைத்தெரு சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் புதிதாக கட்டப்பட உள்ள  திருமண / சமுதாய மண்டப  கட்டிடப் பணிக்கு உதவுவது குறித்து பேசப்பட்டது.

இதன்பின்னர், SISMA அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக M.A ஹாலித் அபூபக்கர், செயலாளராக M.S  இர்ஷாத் அஹமது, பொருளாளராக M.B இம்ரான் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக M.A ஜெயினுள் ஆபிதீன், M.A முஹம்மது சாலிகு, A  மீராஷாஹிப், A.S ஷர்புதீன், M.S பசீர் அஹமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

முன்னதாக, SISMA அமைப்பின் நிதிநிலை அறிக்கை வாசிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்களின் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். கூட்ட முடிவில்,  A.S ஷர்புதீன் அவர்களின் சுவையான மந்தி உணவு பரிமாறப்பட்டன.

இக்கூட்டத்தில், A S சாகுல் ஹமீது, A தையூப்,  S.A  ஷாஹுல் ஹமீது, A  இத்ரிஸ், N. இஸ்ஹாக்,  A.H ஜாவித். M.S  ராஜிக், S H சாஜித், J செய்யது ஹுசைன், AG அஹமது முஹைதீன், A K முபாரக், M.A ரபிக், S அப்துல்லாஹ் M  ஹிஷாம், I பாரிஸ், A  ரியாஸ் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். மேலும், ஆஸ்திரேலியாவின் பிற பகுதிகள், குறிப்பாக, Dubbo விலிருந்து S.S  இர்ஷாத், Brisbane லிருந்து M.A பைசல், Melbourne லிருந்து M.O சாலிம், M.F ஷஃபிக், J அப்துல் ஹமீது, ஜே.எம் யாசிர், ஜே.எம் காமில் ஆகியோரின் ஆலோசனைகள் பெறப்பட்டன.