ஒரத்தநாடு, ஜன.03
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு பள்ளிவாசல் விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்படும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், ஆர்ப்பாட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் அஸ்லம் பாஷா, மாநில பேச்சாளர் கோவை. செய்யது ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
கஜா புயலினால் சேதமடைந்த பள்ளிவாசல் புனரமைக்கும் பணியை தடுத்து, தொழுகை நடத்த இடையூறாக இருப்பவர்களை கைது செய்யக்கோரியும், ஒருதலைப்பட்சமாக செயல்படும் அரசு அதிகாரிகளை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்ட முடிவில், அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் மதுக்கூர் ஜபருல்லா நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அதிராம்பட்டினம், மதுக்கூர், பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமுமுகவினர், ஜமாத்தார்கள் உள்ளிட்ட 400 பேரை போலீசார் கைது செய்து ஒரத்தநாடு தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு பள்ளிவாசல் விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்படும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், ஆர்ப்பாட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் அஸ்லம் பாஷா, மாநில பேச்சாளர் கோவை. செய்யது ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
கஜா புயலினால் சேதமடைந்த பள்ளிவாசல் புனரமைக்கும் பணியை தடுத்து, தொழுகை நடத்த இடையூறாக இருப்பவர்களை கைது செய்யக்கோரியும், ஒருதலைப்பட்சமாக செயல்படும் அரசு அதிகாரிகளை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்ட முடிவில், அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் மதுக்கூர் ஜபருல்லா நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அதிராம்பட்டினம், மதுக்கூர், பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமுமுகவினர், ஜமாத்தார்கள் உள்ளிட்ட 400 பேரை போலீசார் கைது செய்து ஒரத்தநாடு தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.





















