அதிராம்பட்டினம், மே.05
அதிராம்பட்டினம் நாட்டுப்படகு மீனவர்களை கடலில் மீன் பிடிக்க அனுமதிக்குமாறு, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ர.சக்திவேல் ஆகியோரிடம் கரையூர்தெரு கிராம பஞ்சாயத்தார்கள் வலியுறுத்தினர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினம் பகுதியில் கரையூர் தெரு, காந்தி நகர் மற்றும் ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய மீனவ கிராமங்களின் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ர.சக்திவேல் ஆகியோரை கரையூர்தெரு கிராம பஞ்சாயத்தார்கள் சந்தித்து, அதிராம்பட்டினம் நாட்டுப்படகு மீனவர்களை கடலில் சென்று மீன் பிடிக்க அனுமதிக்குமாறும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெகு தொலைவில் துறைமுகம் அமைந்திருப்பதாகவும் வலியுறுத்தினர். இதையடுத்து, துறைமுகப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு, இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அவர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சா.அருள் பிரகாசம், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர்கள் உமர், சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் அசாருதீன், ராஜசேகர், கிராம உதவியாளர்கள் பத்மநாபன், பாலா மற்றும் கரையூர்தெரு கிராம நிர்வாகத் தலைவர் அய்யாவு, துணைத்தலைவர் வீரையன் மற்றும் கோடி.நாகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதிராம்பட்டினம் நாட்டுப்படகு மீனவர்களை கடலில் மீன் பிடிக்க அனுமதிக்குமாறு, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ர.சக்திவேல் ஆகியோரிடம் கரையூர்தெரு கிராம பஞ்சாயத்தார்கள் வலியுறுத்தினர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினம் பகுதியில் கரையூர் தெரு, காந்தி நகர் மற்றும் ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய மீனவ கிராமங்களின் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ர.சக்திவேல் ஆகியோரை கரையூர்தெரு கிராம பஞ்சாயத்தார்கள் சந்தித்து, அதிராம்பட்டினம் நாட்டுப்படகு மீனவர்களை கடலில் சென்று மீன் பிடிக்க அனுமதிக்குமாறும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெகு தொலைவில் துறைமுகம் அமைந்திருப்பதாகவும் வலியுறுத்தினர். இதையடுத்து, துறைமுகப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு, இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அவர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சா.அருள் பிரகாசம், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர்கள் உமர், சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் அசாருதீன், ராஜசேகர், கிராம உதவியாளர்கள் பத்மநாபன், பாலா மற்றும் கரையூர்தெரு கிராம நிர்வாகத் தலைவர் அய்யாவு, துணைத்தலைவர் வீரையன் மற்றும் கோடி.நாகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

















































