தஞ்சாவூர், ஆக.19
உண்மையில் இப்பதிவிற்கு தஞ்சையில் ஓர் மனிதநேய டாக்டர் என்றிருப்பதே சரியான தலைப்பாக இருக்க முடியும் என்றாலும் நம் கண்முன்னே 5 ரூபாய் டாக்டர், 10 ரூபாய் டாக்டர், இலவச டாக்டர் என பல மனிதநேய செல்வங்கள் (சிலர் மறைந்தும்) வாழ்ந்து கொண்டுள்ளதால் அவர்களோடு இணைத்து சிலாகிக்க வேண்டுமென நாடியதாலேயே தலைப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது.
தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் MR மருத்துவமனைக்கு அடுத்து அமைந்துள்ளது டாக்டர் ஆர். முரளி MS M.ch அவர்களின் முரளி கேஸ்ட்ரோ கிளினிக் எனும் மருத்துவமனை. இவர் குடல் நோய் மற்றும் மஞ்சள் காமாலைக்கான சிறப்பு மருத்துவர்.
தஞ்சை போன்ற பெருநகரங்களில் நாம் அறியாத நல்ல மருத்துவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் 50 ரூபாயை மட்டும் மருத்துவ ஆலோசனை கட்டணமாக பெற்றுக் கொண்டு வைத்தியம் பார்க்கக்கூடிய ஒரு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் இன்னொருவர் இருக்க வாய்ப்பில்லை, பொதுவாக தஞ்சையில் பல டாக்டர்களின் கன்சல்டிங் பீஸ் 300 ரூபாயில் இருந்து தான் துவங்கும், விதிவிலக்காக சிலர் குறைவாக வாங்கினாலும் நிச்சயம் 50 ரூபாய் வாங்க வாய்ப்பில்லை என்பதோடு பல நேரங்களில் நோயாளிகளின் சூழல் அறிந்து அதையும் தவிர்த்து விடுகின்றார். எண்டோஸ்கோபி போன்ற சிறப்பு சிகிச்சை கட்டணங்கள் குறித்து இங்கு பேசவில்லை.
குறைவான கன்சல்டிங் பீஸ் பெறுவது ஏன் என வினவிய போது 2 காரணங்களை தெரிவிக்கின்றார். ஒன்று, பல நோயாளிகள் தங்களது பொருளாதார சூழலின் காரணமாக டாக்டர் எழுதித்தரும் மருந்துகளை குறைவாகவே வாங்கிச் செல்வதை அவதானித்ததன் விளைவாக தன்னுடைய பீஸை குறைத்துக் கொண்டால் அந்த பணத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வாங்கிச் செல்வார்களே என்ற நல்லெண்ணம், மருந்துகளைக் கூட அதிகமாக எழுதுவதில்லை என்பது இன்னொரு சிறப்பு. இரண்டாவதாக, பட்டுக்கோட்டை ரத்தினம்பிள்ளை டாக்டருடன் இணைந்து பிராக்டீஸ் செய்தபோது அவரும் குறைவான கட்டணத்தை பெறுவதை கண்டு, அவர் நன்றாக இருக்கும் போது நாம் நன்றாக இருக்க மாட்டோமா? என்ற திருப்தியான எண்ணம் ஏற்பட்டதையும் நினைவுகூறுகின்றார்.
தன்னுடைய மருத்துவமனையை சுற்றி நல்ல பல அற வாசகங்களை எழுதி வைத்துள்ள டாக்டர் இந்து மதத்தில் பற்றுள்ள ஆன்மீகவாதி என்றாலும் பிற மதத்தினரையும் மதங்களையும் நேசிக்கக்கூடியவர், ஒரு உண்மையான ஆன்மீகவாதியின் மெய் குணம் இதுவாகவே இருக்க முடியும்.
தன்னுடைய மருத்துவமனையின் வரவேற்பரையில் டாக்டருக்காக காத்திருப்போர் வாசிப்பதற்காக இந்து மத ஆன்மீக புத்தகங்களுடன் புனித குர்ஆனின் தமிழாக்கங்கள், பைபிள், வரலாற்று புத்தகங்கள், சமூக அரசியல் புரட்சியாளர்கள் பற்றிய புத்தகங்கள், பொதுவான தலைப்பிலானவை என பாரபட்சமற்ற நூலகத்தையும் பராமரித்து வருகின்றார்.
தனது மேசையின் மீது புத்தர் சிலையை வைத்திருக்கும் டாக்டர் முரளி அவர்கள் முஸ்லீம் நோயாளிகள், உறவினர்கள் சென்றால் தொழுகை மற்றும் கடவுள் நம்பிக்கையை வலியுறுத்துவதையும் காணலாம்.
தன்னுடைய கனிவான அணுகுமுறை, கம்மியான கட்டணம் அனைத்திற்கும் எல்லாம் அவன் செயல் என இறைவனைப் போற்றும் தன்னடக்கத்தையும் இவரிடம் காணலாம். இந்தியாவின் இன்றைய மதவெறி தூண்டிவிடப்பட்டுள்ள சூழலில் டாக்டர் முரளி போன்ற நல்லிணக்க ஆன்மீகவாதிகள் அதிகம் தேவை.
சந்திப்பு: அதிரை அமீன்
உண்மையில் இப்பதிவிற்கு தஞ்சையில் ஓர் மனிதநேய டாக்டர் என்றிருப்பதே சரியான தலைப்பாக இருக்க முடியும் என்றாலும் நம் கண்முன்னே 5 ரூபாய் டாக்டர், 10 ரூபாய் டாக்டர், இலவச டாக்டர் என பல மனிதநேய செல்வங்கள் (சிலர் மறைந்தும்) வாழ்ந்து கொண்டுள்ளதால் அவர்களோடு இணைத்து சிலாகிக்க வேண்டுமென நாடியதாலேயே தலைப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது.
தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் MR மருத்துவமனைக்கு அடுத்து அமைந்துள்ளது டாக்டர் ஆர். முரளி MS M.ch அவர்களின் முரளி கேஸ்ட்ரோ கிளினிக் எனும் மருத்துவமனை. இவர் குடல் நோய் மற்றும் மஞ்சள் காமாலைக்கான சிறப்பு மருத்துவர்.
தஞ்சை போன்ற பெருநகரங்களில் நாம் அறியாத நல்ல மருத்துவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் 50 ரூபாயை மட்டும் மருத்துவ ஆலோசனை கட்டணமாக பெற்றுக் கொண்டு வைத்தியம் பார்க்கக்கூடிய ஒரு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் இன்னொருவர் இருக்க வாய்ப்பில்லை, பொதுவாக தஞ்சையில் பல டாக்டர்களின் கன்சல்டிங் பீஸ் 300 ரூபாயில் இருந்து தான் துவங்கும், விதிவிலக்காக சிலர் குறைவாக வாங்கினாலும் நிச்சயம் 50 ரூபாய் வாங்க வாய்ப்பில்லை என்பதோடு பல நேரங்களில் நோயாளிகளின் சூழல் அறிந்து அதையும் தவிர்த்து விடுகின்றார். எண்டோஸ்கோபி போன்ற சிறப்பு சிகிச்சை கட்டணங்கள் குறித்து இங்கு பேசவில்லை.
குறைவான கன்சல்டிங் பீஸ் பெறுவது ஏன் என வினவிய போது 2 காரணங்களை தெரிவிக்கின்றார். ஒன்று, பல நோயாளிகள் தங்களது பொருளாதார சூழலின் காரணமாக டாக்டர் எழுதித்தரும் மருந்துகளை குறைவாகவே வாங்கிச் செல்வதை அவதானித்ததன் விளைவாக தன்னுடைய பீஸை குறைத்துக் கொண்டால் அந்த பணத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வாங்கிச் செல்வார்களே என்ற நல்லெண்ணம், மருந்துகளைக் கூட அதிகமாக எழுதுவதில்லை என்பது இன்னொரு சிறப்பு. இரண்டாவதாக, பட்டுக்கோட்டை ரத்தினம்பிள்ளை டாக்டருடன் இணைந்து பிராக்டீஸ் செய்தபோது அவரும் குறைவான கட்டணத்தை பெறுவதை கண்டு, அவர் நன்றாக இருக்கும் போது நாம் நன்றாக இருக்க மாட்டோமா? என்ற திருப்தியான எண்ணம் ஏற்பட்டதையும் நினைவுகூறுகின்றார்.
தன்னுடைய மருத்துவமனையை சுற்றி நல்ல பல அற வாசகங்களை எழுதி வைத்துள்ள டாக்டர் இந்து மதத்தில் பற்றுள்ள ஆன்மீகவாதி என்றாலும் பிற மதத்தினரையும் மதங்களையும் நேசிக்கக்கூடியவர், ஒரு உண்மையான ஆன்மீகவாதியின் மெய் குணம் இதுவாகவே இருக்க முடியும்.
தன்னுடைய மருத்துவமனையின் வரவேற்பரையில் டாக்டருக்காக காத்திருப்போர் வாசிப்பதற்காக இந்து மத ஆன்மீக புத்தகங்களுடன் புனித குர்ஆனின் தமிழாக்கங்கள், பைபிள், வரலாற்று புத்தகங்கள், சமூக அரசியல் புரட்சியாளர்கள் பற்றிய புத்தகங்கள், பொதுவான தலைப்பிலானவை என பாரபட்சமற்ற நூலகத்தையும் பராமரித்து வருகின்றார்.
தனது மேசையின் மீது புத்தர் சிலையை வைத்திருக்கும் டாக்டர் முரளி அவர்கள் முஸ்லீம் நோயாளிகள், உறவினர்கள் சென்றால் தொழுகை மற்றும் கடவுள் நம்பிக்கையை வலியுறுத்துவதையும் காணலாம்.
தன்னுடைய கனிவான அணுகுமுறை, கம்மியான கட்டணம் அனைத்திற்கும் எல்லாம் அவன் செயல் என இறைவனைப் போற்றும் தன்னடக்கத்தையும் இவரிடம் காணலாம். இந்தியாவின் இன்றைய மதவெறி தூண்டிவிடப்பட்டுள்ள சூழலில் டாக்டர் முரளி போன்ற நல்லிணக்க ஆன்மீகவாதிகள் அதிகம் தேவை.
சந்திப்பு: அதிரை அமீன்























