அதிராம்பட்டினம், ஜூன் 29
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட கடற்கரை பகுதி ரயில் நுகர்வோர் குழு நிறுவனர் தம்பிக்கோட்டை ராஜாராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது;
அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக நிறுத்தப்பட்ட திருவாரூர் ~ காரைக்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ~ அகஸ்தியம்பள்ளிக்கு இடையில் ரயில் போக்குவரத்து இல்லாததால், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்ட கடற்கரைப் பகுதி மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக தம்பிக்கோட்டை வருவாய் சரக ரயில் பாதையிலிருந்து தம்பிக்கோட்டை, சுந்தரம், மறவாக்காடு ஆகிய 3 ரயில் நிலையங்களை அகற்றுவதுடன், 7 ரயில்வே கேட்டுகளை அகற்ற இருப்பதாக தெரிகிறது.
தஞ்சாவூர் ~ திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 63 கிராம மக்கள் ரயில் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்த முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை மக்கள் தொகை அடிப்படையில் தரம் உயர்த்தாமல் தகுதி குறைந்த தில்லைவிளாகம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி 63 கிராம மக்களை அலைகழிப்பதை ஏற்க முடியாது.
மேற்கண்ட கோரிக்கையை ரயில்வே நிர்வாகத்திற்கும், மத்திய அரசுக்கும் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து வருகிற 3 ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் தம்பிக்கோட்டை முக்கூட்டுச்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ என்.ஆர் ரெங்கராஜன் தலைமை தாங்குகிறார். இதில், 3 மாவட்டங்களை சேர்ந்த அனைத்து கட்சியினர், கிராம மக்கள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட கடற்கரை பகுதி ரயில் நுகர்வோர் குழு நிறுவனர் தம்பிக்கோட்டை ராஜாராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது;
அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக நிறுத்தப்பட்ட திருவாரூர் ~ காரைக்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ~ அகஸ்தியம்பள்ளிக்கு இடையில் ரயில் போக்குவரத்து இல்லாததால், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்ட கடற்கரைப் பகுதி மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக தம்பிக்கோட்டை வருவாய் சரக ரயில் பாதையிலிருந்து தம்பிக்கோட்டை, சுந்தரம், மறவாக்காடு ஆகிய 3 ரயில் நிலையங்களை அகற்றுவதுடன், 7 ரயில்வே கேட்டுகளை அகற்ற இருப்பதாக தெரிகிறது.
தஞ்சாவூர் ~ திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 63 கிராம மக்கள் ரயில் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்த முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை மக்கள் தொகை அடிப்படையில் தரம் உயர்த்தாமல் தகுதி குறைந்த தில்லைவிளாகம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி 63 கிராம மக்களை அலைகழிப்பதை ஏற்க முடியாது.
மேற்கண்ட கோரிக்கையை ரயில்வே நிர்வாகத்திற்கும், மத்திய அரசுக்கும் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து வருகிற 3 ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் தம்பிக்கோட்டை முக்கூட்டுச்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ என்.ஆர் ரெங்கராஜன் தலைமை தாங்குகிறார். இதில், 3 மாவட்டங்களை சேர்ந்த அனைத்து கட்சியினர், கிராம மக்கள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.













.jpg)


.jpg)





