.

Pages

Showing posts with label மக்கள் அதிகாரம். Show all posts
Showing posts with label மக்கள் அதிகாரம். Show all posts

Tuesday, December 12, 2017

மீனவர்கள் துயரத்திற்கு நீதி கோரி அதிரையில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.12
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் துயரத்திற்கு நீதி வழங்கக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, அவ்வமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். அவ்வமைப்பின் வட்டார நிர்வாகி நடராஜன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் முரளி, வழக்குரைஞர் ஜெயபாண்டியன், வேதாரண்யம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தனியரசு, மாநில பொருளாளர் காளியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், ஓகிபுயல் பாதிப்பில் கரை சேராத மீனவர்களை விரைந்து கண்டு பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பாதிக்கப்பட்ட மீனவ மக்களை முதல்வர் உடனடியாக நேரில் சென்று சந்திக்க வேண்டும், போராடியவர்கள் மீது வழக்கு போடுவதை உடனே கைவிட வேண்டும், மக்கள் அதிகாரம் அமைப்பினரை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓகி புயலில் இறந்த மீனவ குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிதி உதவி, ஒருவருக்கு அரசு வேலை, சேதமான படகுக்கு நிவராணம் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த ஆர்பாட்டத்தில், பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலந்துகொண்டனர்.
 

Wednesday, May 31, 2017

கரையூர்தெரு தீ விபத்தில் பாதித்தோருக்கு வீடு கட்டித்தர மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோரிக்கை !

அதிராம்பட்டினம், மே 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்து உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியது. இதன் சேத மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.

தகவலறிந்த  மக்கள் அதிகாரம் பட்டுக்கோட்டை வட்டார நிர்வாகிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பாதிப்படைந்த குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் தீ விபத்தில் பாதிப்படைந்த 50 குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக  அரிசி, சேலை, பள்ளி நோட்டு புத்தகங்கள், சிறுவர் சிறுமிகளுக்கு ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்கள்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டலக்குழு உறுப்பினர் மாரிமுத்து கூறுகையில்;
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெரு மீனவர் கிராமத்தில் கடந்த மே 29ந் தேதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 54 குடிசைகள் தீயில் கருகி தரைமட்டமானது. இதில் இலட்சக்கனக்கான பொருட்கள் எரிந்து நாசமானது. நூற்றுக்கணக்கான மக்கள் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு இல்லாத மக்களுக்கு அரசு கொடுக்கும் நிவாரணமோ வெறும் 5 ஆயிரம் ரூபாய். இது வாயிக்கும், வயிற்றுக்கும் கூட போதாது.

அந்த வகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை போர்கால அடிப்படையில் செய்து தரவேண்டும்.  வீட்டை இழந்து தெருவில் நிற்கும் மக்களுக்கு தரமான வீடு கட்டித்தர வேண்டும், மீன்பிடி தொழிலை நம்பி இருக்கும் மீனவ மக்களுக்கு வலைகளை வழங்கி வாழ்வாதாரத்தை உறுதிபடுத்து வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைக்கிறேன்' என்றார்.
 
 
 
 

Saturday, March 11, 2017

அதிரையில் மறியல்: மக்கள் அதிகாரம் அமைப்பினர் 18 பேர் கைது

அதிராம்பட்டினம், மார்ச் 11:
தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ அண்மையில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவிலுள்ள அஞ்சலகம் முன், மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அவ்வமைப்பின் மீனவர் சங்க பிரதிநிதி முனியாண்டி தலைமையில் நடைபெற்ற மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
 

Thursday, May 5, 2016

அதிரை ஈசிஆர் சாலை டாஸ்மாக் கடையை முற்றுகை இட முயன்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் 23 பேர் கைது !

அதிராம்பட்டினம் மே-05
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடச்சொல்லி, இன்று காலை 11 மணி அளவில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார். போராட்டக்காரர்கள் டாஸ்மாக்கை இழுத்து மூடு என்று கோஷம் எழுப்பியவாறு ஈசிஆர் முத்துப்பேட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை நோக்கி சென்றனர். அப்போது அங்கு தயாராக நின்றுகொண்டிருந்த பட்டுக்கோட்டை ஏஎஸ்பி அரவிந்த்மேனன் தலைமையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 23 பேர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். பின்னர் அனைவரும் அதிரை செல்லியம்மன் சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு இன்று மாலை விடுவிக்கப்பட்டனர்.
 

Tuesday, March 29, 2016

குடிபோதைக்கு எதிராக அதிரையில் வீடு, வீடாக துண்டு பிரசுரம் !

அதிராம்பட்டினம், மார்ச்-29
தமிழகத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி ஆங்காங்கே தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை வட்டாரம் சார்பில் அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் குடிபோதைக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பட்டு வருகிறது. மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மாரிமுத்து, வட்டார குழு உறுப்பினர் முனியாண்டி, வட்டார பொறுப்பாளர் பாலு உள்ளிட்டோர் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மாரிமுத்து நம்மிடம் கூறுகையில்...
'குடிபோதைக்கு எதிராக கடந்த 3 நாட்களாக அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகிறோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'குடிபோதைக்கு எதிரானது எங்கள் குடும்பம்' என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரசுரத்தை ஒவ்வொரு வீட்டின் முன்புற பகுதிகளில் ஒட்டிக்கொள்ள அறிவுறுத்தி வருகிறோம். மேலும் போதையால் ஏற்படும் தீமை குறித்து விளக்கி வருகிறோம். மக்கள் அதிகாரம் சார்பில் 'மூடு டாஸ்மாக்கை' போராட்டம் தொடர்ந்து நடைபெறும்' என்றார்.
 
 

Thursday, October 15, 2015

அதிரையில் இயங்கும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் !

அதிராம்பட்டினம் அக்,15
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் ஏரிப்புறக்கரை கிராமம் ஆகிய பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் பட்டுக்கோட்டை வட்டாரம் சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் பொறுப்பாளர் நடராஜன் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரை நகர செயலாளர் என். காளிதாஸ், அதிரை அன்வர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலளார் புருசோத்மன், ஆதி திராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சதாசிவ குமார், விவசாய விடுதலை முன்னணி வட்டார துணைச்செயலாளர் முத்து உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில தலைமை குழு உறுப்பினர் காளியப்பன் நிறைவுரை ஆற்றினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு அதிரை பகுதிகளில் இயங்கிவரும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.