தென்மேற்கு வங்கக் கடலில் உருவான அதி தீவிர நிவர் புயலானது தமிழகம் ~ புதுச்சேரிக்கு இடையே நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று காலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று (26-11-2020) வியாழக்கிழமை காலை 7 மணி நேர நிலவரப்படி, அதிராம்பட்டினம் 23.40 மி.மீ, மதுக்கூர் 37.80 மி.மீ, பட்டுக்கோட்டை 31 மி.மீ, பேராவூரணி 12.80, ஒரத்தநாடு 23.80, தஞ்சாவூர் 38, வல்லம் 34, திருவையாறு 40, பூதலூர் 28.80, திருக்காட்டுப்பள்ளி 18.60, நெய்வாசல் தென்பாதி 46.20, வெட்டிக்காடு 38, திருவிடைமருதூர் 49.80, கும்பகோணம் 59, பாபநாசம் 51.40, அய்யம்பேட்டை 41 மி.மீ மழை பதிவாகியது.
















































