.

Pages

Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Thursday, November 26, 2020

அதிராம்பட்டினத்தில் 23.40 மி.மீ மழை பதிவு!

அதிராம்பட்டினம், நவ.26
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான அதி தீவிர நிவர் புயலானது தமிழகம் ~ புதுச்சேரிக்கு இடையே நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று காலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று (26-11-2020) வியாழக்கிழமை காலை 7 மணி நேர நிலவரப்படி, அதிராம்பட்டினம் 23.40 மி.மீ, மதுக்கூர் 37.80 மி.மீ, பட்டுக்கோட்டை 31 மி.மீ, பேராவூரணி 12.80, ஒரத்தநாடு 23.80, தஞ்சாவூர் 38, வல்லம் 34, திருவையாறு 40, பூதலூர் 28.80, திருக்காட்டுப்பள்ளி 18.60, நெய்வாசல் தென்பாதி 46.20, வெட்டிக்காடு 38, திருவிடைமருதூர் 49.80, கும்பகோணம் 59, பாபநாசம் 51.40, அய்யம்பேட்டை 41 மி.மீ மழை பதிவாகியது.

Wednesday, November 25, 2020

அதிராம்பட்டினத்தில் 5.11 மி.மீ மழை பதிவு!

அதிராம்பட்டினம், நவ.25
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் புதன்கிழமை காலை குளிர்ந்த காற்றுடன் பெய்த மழை சிறிது இடைவெளி விட்டு மீண்டும் இரவு முதல் மழை பெய்து வருகிறது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று (25-11-2020) புதன்கிழமை மாலை 4 மணி நேர நிலவரப்படி, அதிராம்பட்டினம் 5.11 மி.மீ, மதுக்கூர் 6.10 மி.மீ, பட்டுக்கோட்டை 8.10 மி.மீ,  ஒரத்தநாடு 9, தஞ்சாவூர் 14.20, வல்லம் 6, திருவையாறு 8, பூதலூர் 4.40, திருக்காட்டுப்பள்ளி 8.60, நெய்வாசல் தென்பாதி 14.20, வெட்டிக்காடு 10.20, திருவிடைமருதூர் 16.90, கும்பகோணம் 18, பாபநாசம் 20.40, அய்யம்பேட்டை 21 மி.மீ மழை பதிவாகியது.

Wednesday, July 29, 2020

அதிராம்பட்டினத்தில் 16.20 மி.மீ மழை பதிவு!

அதிராம்பட்டினம், ஜூலை 29
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் புதன்கிழமை அதிகாலை மின்னல், இடியுடன் கூடிய மழை செய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று (29-07-2020) புதன்கிழமை காலை 7 மணி நேர நிலவரப்படி, அதிராம்பட்டினம் 16.20 மி.மீ, மதுக்கூர் 47 மி.மீ, பட்டுக்கோட்டை 14 மி.மீ,  பேராவூரணி 12.40, ஒரத்தநாடு 6.40, தஞ்சாவூர் 15, வல்லம் 10, திருவையாறு 9, பூதலூர் 11.40, திருக்காட்டுப்பள்ளி 8.80, நெய்வாசல் தென்பாதி 14.80, வெட்டிக்காடு 11.80, கும்பகோணம் 36, பாபநாசம் 18.40, அய்யம்பேட்டை 16, திருவிடைமருதூா் 36, மஞ்சளாறு 52.40, லோவர் அணைகட் 84.80,  ஈச்சன்விடுதி 2.40 மி.மீ மழை பதிவாகியது.

Thursday, June 25, 2020

அதிராம்பட்டினம் 4 செ.மீ, மதுக்கூர் 3 செ.மீ, பட்டுக்கோட்டை 2 செ.மீ மழை பதிவு!

கோப்பு படம்
அதிராம்பட்டினம், ஜூன் 25
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பகலில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் மழை செய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (25-06-2020) வியாழக்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி, அதிகபட்சமாக அதிராம்பட்டினம் 4 செ.மீ, மதுக்கூர் 3 செ.மீ, பட்டுக்கோட்டை 2 செ.மீ மழை பதிவாகியது.

Wednesday, April 29, 2020

அதிராம்பட்டினத்தில் ஒரு மணி நேரத்தில் 2 செ.மீ மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

அதிராம்பட்டினம், ஏப்.29
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பகலில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் லேசான இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் நீடித்து பெய்த மழையால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சை மாவட்டத்தில், அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் (ஏப்.29) புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 2 செ.மீ மழை பதிவாகியது.

Sunday, April 5, 2020

கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் அதிராம்பட்டினதில் திடீர் மழை!

அதிராம்பட்டினம், ஏப்.05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்
கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், அதிராம்பட்டினம் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து பெய்த மழையால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

Saturday, December 14, 2019

அதிராம்பட்டினத்தில் 16.10 மி.மீ மழை!

அதிராம்பட்டினம், டிச.14
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் அவ்வப்போது விட்டு மிதமான மழை செய்தது. இன்று (டிச.14) சனிக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், குளிரும் நிலவுகிறது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 47 மி.மீ, அதிராம்பட்டினத்தில் 16.10 மி.மீ மழை பதிவாகியது.

இதேபோல், தஞ்சாவூர் 23, வல்லம் 13, குருங்குளம் 12, திருவையாறு 29, பூதலூா் 10.80, திருக்காட்டுப்பள்ளி 10.80, கிராண்ட் அணைகட் 15.30, ஒரத்தநாடு 10.40, நெய்வாசல் தென்பாதி 19.80, வெட்டிக்காடு 19, கும்பகோணம் 27.40, அய்யம்பேட்டை 38,  திருவிடைமருதூா் 34.40, மஞ்சளாறு 45, லோவர் அணைகட் 13, பட்டுக்கோட்டை 7.60, ஈச்சன்விடுதி 2, மதுக்கூா் 20.20, பேராவூரணி 16 மி.மீ மழை பதிவாகியது.

Sunday, December 8, 2019

அதிராம்பட்டினத்தில் 5.70 மி.மீ. மழை!

அதிராம்பட்டினம், டிச.08
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று சனிக்கிழமை பகலில் முதல் அவ்வப்போது விட்டு மிதமான மழை செய்தது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மதுக்கூரில் 21 மி.மீ, அதிராம்பட்டினத்தில் 5.70 மி.மீ மழை பதிவாகியது.

இதேபோல், பட்டுக்கோட்டை 14.8, வெட்டிக்காடு 10.5, பேராவூரணி 6, அதிராம்பட்டினம் 5.7, ஒரத்தநாடு 4.5, ஈச்சன்விடுதி 4 மி.மீ. மழை பதிவாகியது.

இன்று (டிச.08) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், குளிரும் நிலவுகிறது.

Sunday, December 1, 2019

அதிராம்பட்டினத்தில் 82.50 மி.மீ மழை பதிவு!

அதிராம்பட்டினம், டிச.01
அதிராம்பட்டினம மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடா்ந்து மூன்று நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

அதிராம்பட்டினத்தில் (டிச.01) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 82.50 மி.மீ மழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
லோவர் அணைகட் 101.40, குருங்குளம் 48, மஞ்சளாறு 65, பட்டுக்கோட்டை 84.60, திருவிடைமருதூா் 58, மதுக்கூா் 84.80, பேராவூரணி 52, அய்யம்பேட்டை 54, அதிராம்பட்டினம் 82.50, வல்லம் 69, ஈச்சன்விடுதி 42.40, கும்பகோணம் 59, பூதலூா் 48.80, கிராண்ட் அணைகட் 38.30, பாபநாசம் 57, தஞ்சாவூா் 55, வெட்டிக்காடு 95.80, திருக்காட்டுப்பள்ளி 41.8, திருவையாறு 51, ஒரத்தநாடு 50.20, நெய்வாசல் தென்பாதி 70.20

Friday, November 29, 2019

அதிராம்பட்டினத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 35.90 மி.மீ மழை பதிவு!

அதிராம்பட்டினம், நவ.29
அதிராம்பட்டினம மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடா்ந்து இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

அதிராம்பட்டினத்தில் நேற்று (நவ.29) வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 23.7 மி.மீ மழை பெய்தது. இதேபோல, இன்று (நவ.29) வெள்ளிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 12.20 மி.மீ மழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
குருங்குளம் 3, மஞ்சளாறு 42.20, பட்டுக்கோட்டை 11.00, திருவிடைமருதூா் 38, மதுக்கூா் 25, பேராவூரணி 10.20, அய்யம்பேட்டை 52.00, அதிராம்பட்டினம் 12.20, வல்லம் 14, ஈச்சன்விடுதி 7.20, கும்பகோணம் 40.00, பூதலூா் 30.20, பாபநாசம் 32.20, தஞ்சாவூா் 10, வெட்டிக்காடு 27.40, திருக்காட்டுப்பள்ளி 18, திருவையாறு 39, ஒரத்தநாடு 9.6, நெய்வாசல் தென்பாதி 10.40

தஞ்சை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
குருங்குளம் 48, மஞ்சளாறு 44.4, பட்டுக்கோட்டை 44.2, அணைக்கரை 40.4, திருவிடைமருதூா் 38, மதுக்கூா், பேராவூரணி தலா 26, அய்யம்பேட்டை 24, அதிராம்பட்டினம் 23.7, வல்லம் 23, ஈச்சன்விடுதி 22.4, கல்லணை, கும்பகோணம் தலா 21.4, பூதலூா், பாபநாசம் தலா 21, தஞ்சாவூா் 17.3, வெட்டிக்காடு 15.8, திருக்காட்டுப்பள்ளி 11.4, திருவையாறு 10, ஒரத்தநாடு 9.6, நெய்வாசல் தென்பாதி 9.2.
 
 
 

Saturday, November 2, 2019

அதிராம்பட்டினத்தில் கடந்த ஒரு மாதத்தில் 377.60 மி.மீ (38 செ.மீ) மழை பதிவு!

அதிராம்பட்டினம், நவ.02
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 38 செ.மீ மழை பெய்துள்ளது.

அதிராம்பட்டினத்தில் கடந்த
01-11-2019, 7.70 மி.மீ,
31-10-2019, 56.80 மி.மீ,
30-10-2019, 22.70 மி.மீ,
29-10-2019, 9.60 மி.மீ,
24-10-2019, 44.70 மி.மீ,
22-10-2019, 44.80 மி.மீ,
21-10-2019, 5.0 மி.மீ,
20-10-2019, 1.20 மி.மீ,
19-10-2019, 1.0 மி.மீ,
18-10-2019, 8.30 மி.மீ,
17-10-2019, 73.80 மி.மீ,
16-10-2019, 13.0 மி.மீ,
30-09-2019, 89.0 மி.மீ என மொத்தம் 377.60 மி.மீ (38 செ.மீ) மழை பதிவாகியது. 

Thursday, October 31, 2019

அதிராம்பட்டினத்தில் 2-வது நாளாக தொடர் மழை: அதிகபட்சமாக 56.80 மி.மீ பதிவு!

அதிராம்பட்டினம், அக்.31
தஞ்சாவூர் மாவட்டத்தில், அதிராம்பட்டினத்தில் 2-வது நாளாக தொடர் மழை பெய்தது. மாவட்டத்தில், அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 56.80 மி.மீ. மழை பதிவாகியது.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று புதன்கிழமை காலை முதல் அவ்வப்போது தொடங்கிய மழை, இன்று (அக்.31) வியாழக்கிழமை வரை நீடித்தது. இதனால், அதிராம்பட்டினத்தின் தாழ்வானப் பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகின்றன. வானம் மேகம் மூட்டத்துடன் காட்சி தருவதால், இப்பகுதியில், மீண்டும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
அதிராம்பட்டினம் 56.80, பாபநாசம் 26.80 திருவையாறு 27, கும்பகோணம் 18, திருவிடைமருதூர் 13.40, மஞ்சளாறு 30, திருக்காட்டுப்பள்ளி 42, வல்லம் 44, கிராண்ட் அணைகட் 14.40, லோவர் அணைகட் 14.40, பூதலூர் 49.40, வெட்டிக்காடு 46.80, நெய்வாசல் தென்பாதி 22.4, தஞ்சாவூர் 14, குருங்குளம் 53, மஞ்சளாறு 25, பட்டுக்கோட்டை 38.60, ஒரத்தநாடு 10.24, மதுக்கூர் 55.4, அய்யம்பேட்டை 15,  ஈச்சன்விடுதி 40.20,  பேராவூரணி 43.60
 

Thursday, October 24, 2019

அதிராம்பட்டினத்தில் பலத்த மழை: 44.70 மி.மீ பதிவு, பிலால் நகர் பெரிதும் பாதிப்பு!

அதிராம்பட்டினம், அக்.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை, நேற்று புதன்கிழமை இரவு தொடங்கி இன்று  வியாழக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது.

அதிராம்பட்டினம், பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தன. இப்பகுதியில், முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கிக் காணப்படுகின்றன. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியின் பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளிகின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதிராம்பட்டினத்தில் இன்று (அக்.24) வியாழக்கிழமை காலை 7 மணி நேர நிலவரப்படி 44.70 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில் 577.40 மி.மீ மழையளவு பதிவானது. அதிகபட்சமாக வல்லத்தில் 90 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக அய்யம்பேட்டையில் 11 மி.மீட்டரும் பதிவானது.

மாவட்டத்தில் பதிவான மழையளவு வருமாறு (மி.மீ):
தஞ்சாவூர் 25, வல்லம் 90, குருங்குளம் 14, திருவையாறு 25, பூதலூர் 36.20, திருக்காட்டுப்பள்ளி 36.60, கல்லணை 65.20, ஒரத்தநாடு 23, நெய்வாசல் தென்பாதி 13.80, வெட்டிக்காடு 11.60, கும்பகோணம் 13, பாபநாசம் 18.20, அய்யம்பேட்டை 11, திருவிடைமருதூர் 16, மஞ்சளாறு 42.20, அணைக்கரை 14.40, பட்டுக்கோட்டை 12.50, அதிராம்பட்டினம் 44.70, ஈச்சன்விடுதி 22.40, மதுக்கூர் 20, பேராவூரணி 22.60 மி.மீ என பதிவானது.
 

Thursday, October 17, 2019

அதிராம்பட்டினத்தில் பலத்த மழை: அதிகபட்சமாக 73.80 மி.மீ பதிவு!


அதிராம்பட்டினம், அக்.17
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 73.80 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல, புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
அதிராம்பட்டினம் 73.80, பாபநாசம் 12.20 திருவையாறு 24, கும்பகோணம் 9.80, திருவிடைமருதூர் 12, மஞ்சளாறு 23.60, திருக்காட்டுப்பள்ளி 15.2, வல்லம் 66, லோவர் அணைகட் 61, பூதலூர் 14.80, வெட்டிக்காடு 15.20, நெய்வாசல் தென்பாதி 46.4, தஞ்சாவூர் 7, குருங்குளம் 30, மஞ்சளாறு 25, பட்டுக்கோட்டை 46.5, ஒரத்தநாடு 9.60, மதுக்கூர் 27.4, அய்யம்பேட்டை 14,  ஈச்சன்விடுதி 27.20,  பேராவூரணி 22.4

Monday, September 30, 2019

ஒரு மழைக்கே வெள்ளக்காடான பிலால் நகர் (படங்கள்)

அதிரை நியூஸ்:செப்.30
வருடாவருடம் பிலால் நகர் மக்கள் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமென்பது அரசு விதியா? என தெரியவில்லை.

இன்று அதிகாலை முதல் பெய்த கனமழையில் பிலால் நகர் கிட்டதட்ட முழங்கால் அளவு நீரில் மிதக்கின்ற நிலையில் இன்னும் மழைக்காலம் எஞ்சியுள்ளதால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் பிலால் நகர்வாசிகள்.

பிலால் நகர் என்பதற்கு பதில் அரசு நிர்வாகத்தால் கைவிடப்பட்ட "அனாதை நகர்' என அழைப்பதே சாலப்பொருத்தம். ஏரிப்புறக்கரை ஊராட்சி அதிகாரிகள், பட்டுக்கோட்டை ஒன்றிய ஊராட்சித்துறை அதிகாரிகள் எல்லோருக்கும் வரிவசூல் செய்யும் போது மட்டுமே ஞாபகத்தில் வந்து செல்லும் அவலநிலை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடரும் என தெரியவில்லை.

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் அவர்களும் இதர ஆளுங்கட்சி பிரமுகர்களும் உடனடி கவனம் செலுத்தி பிலால் நகரின் பிரதான சாலையை முறையான வடிகால் வசதியுடன் உயர்த்தி தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.

பல வருட தொடர் கோரிக்கையான செடியன்குளம் வடிகால் வாய்க்காலில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி முன்புபோல் நீர் தடங்களின்றி செய்னாங்குளத்திற்குள் செல்லவும் வழியேற்படுத்த வேண்டும் இல்லையேல் மழைநீரும் செடியங்குள நீரும் வழிந்தோடும் போது பிலால் நகர் மக்கள் இன்னொரு கஜா புயல்கால துன்பங்களை சந்திக்க நேரிடும்.

அதிரை அமீன்
 

அதிராம்பட்டினத்தில் பலத்த மழை!

அதிராம்பட்டினம், செப். 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை, இன்று (செப்.30) திங்கட்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. அவ்வப்போது லேசாக இடி இடித்தது.

தாழ்வானப் பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. வானம் மேகம் மூட்டத்துடன் காட்சி தருவதால், இப்பகுதியில், மீண்டும் மழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Tuesday, September 3, 2019

அதிராம்பட்டினத்தில் 2-வது நாளாக தொடரும் மழை!

அதிராம்பட்டினம், செப்.03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்
கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை மாலை திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. இரவு வரை நீடித்தது. இந்நிலையில், 2-வது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. பின்னர், சிறிது இடைவெளி விட்டு மீண்டும் இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

பகலில் கடும் புழுக்கம் நிலவி வருவதும், இரவில் குளிர்ந்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருவதும் தொடர்கிறது. இதனால், இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 

Thursday, July 25, 2019

அதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் கன மழை!

அதிராம்பட்டினம், ஜூலை 27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்
கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் இருந்து வந்தது. இன்று (ஜூலை 25) வியாழக்கிழமை பகல் முழுவதும் கடும் புழுக்கம் நிலவி வந்த நிலையில், இரவு 7.15 மணி முதல் திடீரென குளிர்ந்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால், இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 

Thursday, April 25, 2019

ஃபானி புயல்: கடற்கரையோரங்களில் பெய்யவுள்ள மழைநீரை சேமிப்போம்!

அதிரை நியூஸ்: ஏப்.25
தென் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை எதிர்வரும் ஏப். 27, 28 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயலாக) உருவாகி தமிழக கடற்கரையை நோக்கி நகரும், இந்தப் புயல் தமிழக கடற்கரை வழியாக கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது இதனால் எதிர்வரும் ஏப். 27, 28, 29 ஆகிய நாட்களில் பலத்த மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது தமிழகத்தை கடும் வெயில் வாட்டி வருவதுடன் நீர்நிலைகளும் காய்ந்து வறண்டு போயுள்ளன. கடந்தமுறை கர்நாடக மாநிலம் திறந்துவிட்ட காவிரி நீரும் கடைமடை பகுதிக்குள் நுழையாதவாறு கவனமாக கடலில் கொண்டு சேர்க்கப்பட்ட அவலத்தையும் அறிவோம். எனவே கடைமடை பகுதியினர் காவிரி நீரை எதிர்பார்த்திருப்பது அறிவீனம்.

இந்நிலையில், நம் கையே நமக்கு உதவி என்ற அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் 27, 28, 29 ஆகிய தேதிகளில் பெய்யலாம் என எதிர்பார்க்கப்படும் மழைநீரை பத்திரமாக சேமிப்பது நமது கடமை என உணர்வோம், குளம் குட்டைகளில், நிலத்தடியில் நீரை சேமிப்போம். புனித ரமலான் மாதத்திற்கும், எஞ்சியுள்ள கோடைகாலத்தை சமாளிப்பதற்கு இந்த மழைநீர் மிக மிக அவசியம்.

தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர், இவர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள அதிரை முஹல்லா ஜமாத்துகளும் பொதுசேவை அமைப்புக்களும் முன்வர வேண்டும். மழைக்கு முன் நீர்நிலைகளுக்கு மழைநீர் வரும் பாதைகளை கண்டறிந்து செப்பனிட தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டினரும் தாமாக முன்வந்து மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்புக்களை எற்படுத்திட விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்வதுடன் நிழல் தரும், பயன் தரும் மரங்களை வளர்க்கவும் ஆர்வம் ஏற்படுத்த வேண்டும்.

மழைநீரை சேமிப்போம், கோடை வெப்பத்தை சமாளிப்போம், நிலத்தடி நீரை உயர்த்துவோம்.

மரம் வளர்ப்போம் மழைநீரை பெறுவோம்.

கஜா எனும் கோரப்புயலால் பாதிக்கப்பட்ட நாம் முன்னேற்பாடாக தேவையான அவசரகால உபகரணங்களை சேமித்து வைப்பதுடன் இந்த புயலால் மக்களுக்கு எத்தகைய பேரிடர்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என ஏகன் அல்லாஹ்விடம் தொழுது துஆச் செய்து வருவோமாக.

கோடையில் எப்போதும் மழைகள் பெய்து கொண்டிருக்காது என்பதை அறிந்துள்ள தெரு சங்கங்களும், முஹல்லா ஜமாத்துகளும், இளைஞர்களும், மாணவர்களும் விரைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய அறிய தருணம் இது என்பதை மறவாதீர்.

குறிப்பு: அதிரையை மையப்படுத்தி பதிவு எழுதப்பட்டிருந்தாலும் அனைத்து ஊர்களுக்குமான பொதுவான பதிவே.

அக்கறையுடன்
அதிரை அமீன்

Friday, April 19, 2019

அதிராம்பட்டினத்தில் அதிகாலை மழை!

அதிராம்பட்டினம், ஏப்.19
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பகலில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை லேசான இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார் 45 நிமிடத்திற்கும் மேலாக நீடித்து பெய்த மழையால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

தமிழகத்தில் அடுத்து சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.