.

Pages

Showing posts with label ஏரிபுறக்கரை செய்திகள். Show all posts
Showing posts with label ஏரிபுறக்கரை செய்திகள். Show all posts

Sunday, November 8, 2020

ஏரிப்புறக்கரை ஊராட்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் 3 இடங்களில் கொடி ஏற்றம்!

அதிராம்பட்டினம், நவ.08
எஸ்டிபிஐ கட்சி சார்பில், ஏரிப்புறக்கரை ஊராட்சியில் 3 இடங்களில் கொடி ஏற்ற நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்வுக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ். அகமது அஸ்லம் தலைமை வகித்தார். அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஜெ சாகுல் ஹமீது, தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் முகமது ரஹீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் இணைச் செயலாளர் சி. அகமது வரவேற்றுப் பேசினார்.

இந்நிகழ்வில், அக்கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில், ஏரிப்புறக்கரை ஊராட்சி கண்டியன் கொல்லை, காந்தி நகர், மஸ்னி நகர் ஆகிய 3 இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு, கொள்கை முழக்கமிடப்பட்டது.


Sunday, March 29, 2020

அதிராம்பட்டினம் குப்பத்து கிராம எல்லையில் சோதனை சாவடி அமைத்த மக்கள் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 29
கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, அதிராம்பட்டினம் குப்பத்து  மக்கள் கிராம எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனா்.

அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி குப்பத்து கிராம எல்லை அருகே கடற்கரைச்செல்லும் சாலையின் குறுக்கே அமைத்துள்ள சோதனைச் சாவடியின் இரு புறங்களிலும் வேப்பிலைகள் கட்டியும், நடுவில், 'கொரானா நோய் தடுப்பு விழிப்புணர்வு', 'வெளிநபர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை' என்ற பதாகையை வைத்து குப்பத்து கிராம இளைஞர்கள் கண்காணித்து வருகின்றனா். மேலும், அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளின் வாசல் முன்பாக வேப்பிலையை கட்டி தொங்கவிட்டும், மஞ்சள் நீர் தெளித்தும் வருகின்றனர்.
 

Monday, February 10, 2020

சாலையோரங்களில் மண்டிக்கிடந்த கருவை மரங்கள் அகற்றம்!

அதிராம்பட்டினம், பிப்.10
அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி சாலையோர இறபுறங்களிலும் கருவை மரங்கள் மண்டிக்காணப்பட்டதால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க இடவசதியின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகின.

இந்நிலையில், சாலையோரங்களில் மண்டிக்கிடந்த கருவை மரங்கள் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியோடு அகற்றும் பணி ஏரிப்புறக்கரை  ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.சக்திவேல் மேற்பார்வையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. அப்போது, சேனா மூனா ஹாஜா முகைதீன், ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 
 

Monday, January 6, 2020

ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏற்பு: பிலால் நகர், எம்.எஸ்.எம் நகர் ஜமாத்தார்கள் வாழ்த்து!

அதிராம்பட்டினம், ஜன.06
அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா ஊராட்சி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

இதில், ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவராக எஸ்.சக்திவேல் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டார். அதேபோல், பிலால் நகர் 1-வது வார்டு கவுன்சிலராக ஜாஸ்மின் பானு (எம்.ஆர் கமாலுதீன்), எம்.எஸ்.எம் நகர் 2-வது வார்டு கவுன்சிலராக ரஹ்மத் (எஸ். முகமது தமீம்) ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து, புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவருக்கும் பிலால் நகர் ஜமாத் மற்றும் எம்.எஸ்.எம் நகர் ஜமாத் சார்பில், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு மூன்றாமிடம் பிடித்த அதிரை அமீன் என்கிற ஏ.முகமது அமீன் இந்நிகழ்வில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில்,

பிலால் நகர் ஜமாத் சார்பில்...
ஹாஜி எஸ்.எம்.ஏ அகமது கபீர், எஸ்.முகமது முகைதீன், அஸ்ரப் அலி, எம்.நிஜாமுதீன், அதிரை அமீன், முகமது, இஜாஸ் அகமது, சேக்தாவூது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எம்.எஸ்.எம் நகர் ஜமாத் சார்பில்...
இ.வாப்பு மரைக்காயர், முகமது வலீத், பிஸ்மில்லாக்கான், அல் அமீன்,  அப்துல் வஹாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 


Friday, January 3, 2020

ஏரிப்புறக்கரை ஊராட்சி உள்ளாட்சி தேர்தல் வெற்றி நிலவரம் (முழு விவரம்)

அதிராம்பட்டினம், ஜன.03
உள்ளாட்சி தேர்தலில் பட்டுக்கோட்டை ஒன்றியம், ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளர்களாக அதிரை அமீன் என்கிற ஏ.முகமது அமீன், எஸ்.சக்திவேல், பி.கண்ணன், தேவி யுவராஜா, 'அவிசோ' ஏ.சேக் அப்துல்லா, ஏ.முகமது ராசிக் ஆகியோர் போட்டியிட்டனர்.

இரண்டாம் கட்டமாக ஏரிப்புறக்கரை ஊராட்சியில் கடந்த டிச.30 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மொத்தம் 9 வார்டுகளை கொண்ட 5 வாக்குச்சாவடிகளில் 2215 வாக்குகள் பதிவாகின. இவை, அனைத்தும் நேற்று வியாழக்கிழமை இரவு எண்ணப்பட்டு, வெற்றி நிலவரங்கள் வெளியாகியது.

இதில், எஸ்.சக்திவேல் 972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பி.கண்ணன் (613 வாக்குகள்), அதிரை அமீன் என்கிற ஏ.முகமது அமீன் (271 வாக்குகள்), ஏ.முகமது ராசிக் (166 வாக்குகள்), தேவி யுவராஜா (56 வாக்குகள்), 'அவிசோ' ஏ.சேக் அப்துல்லா (11 வாக்குகள்) பெற்றனர். இதில், 126 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

பிலால் நகர் 1-வது வார்டில் போட்டியிட்ட ஜாஸ்மின் பானு (எம்.ஆர் கமாலுதீன்) 186 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எம்.எஸ்.எம் நகர் 2-வது வார்டில் போட்டியிட்ட ரஹ்மத் (எஸ். முகமது தமீம்) 161 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

Thursday, October 24, 2019

ஏரி வடிகாலில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: கடலில் கலந்து வீணாகும் அவலம்!

அதிராம்பட்டினம், அக். 24
அதிராம்பட்டினம் அடுத்துள்ள தொக்காலிக்காடு, மஹாராஜா சமுத்திர அணைக்கட்டு அக்னியாற்றின் உபரி நீர் வெளியேறி, ஏரிப்புறக்கரை பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகியவற்றில் நிரம்பி வழிந்து, பின்னர், கிழக்கு கடற்கரை சாலை பிலால் நகர், காதிர் முகைதீன் கல்லூரி, ஏரிப்புறக்கரை கிராம இணைப்பு சாலை (காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி) வாய்க்கால் வழியாக கடலில் வீணாகக் கலந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக ஏரி வடிகாலை  முறையாக தூர் வாரி, கரையை பலப்படுத்தாததால், தற்போது ஏரியிலிருந்து நிரம்பி வழிந்து கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், வடிகால் உடைந்து பிலால் நகர் குடியிருப்பு பகுதியினுள் வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் நிலவி உள்ளது.

எனவே, பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துவிடாதவாறு மணல் மூடைகளைக் கொண்டு கரையை பலப்படுத்தும் பணிகளில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏரியிலிருந்து வெளியேறி வரும் உபரி நீர் கடலில் கலந்து வீணாகிறது. இந்த நீரை அருகில் உள்ள குளங்களில் நிரப்பும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

அதிராம்பட்டினத்தில் பலத்த மழை: 44.70 மி.மீ பதிவு, பிலால் நகர் பெரிதும் பாதிப்பு!

அதிராம்பட்டினம், அக்.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை, நேற்று புதன்கிழமை இரவு தொடங்கி இன்று  வியாழக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது.

அதிராம்பட்டினம், பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தன. இப்பகுதியில், முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கிக் காணப்படுகின்றன. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியின் பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளிகின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதிராம்பட்டினத்தில் இன்று (அக்.24) வியாழக்கிழமை காலை 7 மணி நேர நிலவரப்படி 44.70 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில் 577.40 மி.மீ மழையளவு பதிவானது. அதிகபட்சமாக வல்லத்தில் 90 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக அய்யம்பேட்டையில் 11 மி.மீட்டரும் பதிவானது.

மாவட்டத்தில் பதிவான மழையளவு வருமாறு (மி.மீ):
தஞ்சாவூர் 25, வல்லம் 90, குருங்குளம் 14, திருவையாறு 25, பூதலூர் 36.20, திருக்காட்டுப்பள்ளி 36.60, கல்லணை 65.20, ஒரத்தநாடு 23, நெய்வாசல் தென்பாதி 13.80, வெட்டிக்காடு 11.60, கும்பகோணம் 13, பாபநாசம் 18.20, அய்யம்பேட்டை 11, திருவிடைமருதூர் 16, மஞ்சளாறு 42.20, அணைக்கரை 14.40, பட்டுக்கோட்டை 12.50, அதிராம்பட்டினம் 44.70, ஈச்சன்விடுதி 22.40, மதுக்கூர் 20, பேராவூரணி 22.60 மி.மீ என பதிவானது.