ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் என். முகமது புகாரி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில பொச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில இளைஞரணித் தலைவர் ஜெரோன் குமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட திரளானோர் பங்கேற்று, வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991 ஐ அமல்படுத்த வேண்டும், பாபரி மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும், பாபரி மசூதியை சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, மத்திய அரசு மற்றும் நீதித்துறையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதில், அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சாகுல் ஹமீது, அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் அகமது அஸ்லம், மாவட்டச்செயலாளர்கள் முகமது ரஹீஸ், முகமது அஸ்கர், மாவட்ட பொருளாளர் இத்ரீஸ், அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் சி.அகமது உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.






















































