.

Pages

Showing posts with label மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம். Show all posts
Showing posts with label மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம். Show all posts

Tuesday, November 22, 2016

பட்டுக்கோட்டையில் நாளை மறுதினம் (நவ.24) மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்: நுகர்வோர் பங்கேற்க அழைப்பு !

அதிராம்பட்டினம், நவ-22
பட்டுக்கோட்டை பாளையம் பகுதியிலுள்ள மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் கே. அருள்மொழி தலைமையில் வியாழக்கிழமை (நவ.24) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம் என பட்டுக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் மு. சின்னையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.