.

Pages

Showing posts with label லயன்ஸ் சங்கம். Show all posts
Showing posts with label லயன்ஸ் சங்கம். Show all posts

Sunday, November 15, 2020

அதிராம்பட்டினத்தில் நீரிழிவு நோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு மற்றும் கண்டறியும் முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.15 
உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி அதிராம்பட்டினம் அரிமா சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நீரிழிவு நோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் இலவச நீரிழிவு நோய் கண்டறியும் முகாம் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

முகாமுக்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முகாமை, அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் முகமது இம்தியாஸ் தொடங்கி வைத்தார். முகாமில், சென்னை பிரபல நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் முபாரக் பங்கேற்று, நீரிழிவு நோய் குறித்தும், நோய் வராமல் தடுத்துக் கொள்வது, நோய் வந்த பின்னர் பின்பற்ற வேண்டிய உணவு மற்றும் பழக்க வழக்க முறைகள் ஆகியவை குறித்து கருத்துரை வழங்கினார்.  

முகாமில் 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக நீரிழிவு நோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் பேராசிரியர் மேஜர் எஸ்.பி.கணபதி, எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஆர். செல்வராஜ், எம்.முகமது அபூபக்கர், எம்.கே.எம் முகமது அபூபக்கர், பி.உமா சங்கர், ஏ.வி.எம் வரிசை முகமது, ஏ.முகமது ஆரிப், எச்.அப்துல் ரெஜாக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Saturday, October 31, 2020

அதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் ~ உறுப்பினர்கள் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் 30.10.2020 அன்று வெள்ளிக்கிழமை சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்து, வரவேற்றுப் பேசினார். செயலாளர் எம்.நிஜாமுதீன் மாதாந்திர அறிக்கை வாசித்தார். பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் சங்க நிதி நிலை அறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில், பசித்தோருக்கு அன்னதானம் வழங்குவது, கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடத்துவது, நடைபாதை எளிய வியாபாரிக்கு தள்ளுவண்டி ஒன்றை இலவசமாக வழங்குவது, எதிர்வரும் 14-11-2020 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

சேவைப் பணிக்காக, மாவட்ட ஆளுநரின் வாழ்த்து மடல் பெற்ற சங்கத்தலைவர் எம்.அப்துல் ஜலீலுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. நிறைவில் சங்க இயக்குநர் என்.ஆறுமுகச்சாமி நன்றி கூறினார்.

கூட்டத்தில்,  அதிராம்பட்டினம் அரிமா சங்க இயக்குநர்கள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஆர். செல்வராஜ், அரிமா சங்க நிர்வாகிகள் பி.பிச்சமுத்து, என்.யூ ராமமூர்த்தி, எம்.முகமது அபூபக்கர், எம். அப்துல் ரஹ்மான், சி.சார்லஸ், முல்லை ஆர்.மதி, குப்பாஷா எம்.அகமது கபீர், எம்.கே.எம் முகமது அபூபக்கர், பி.உமா சங்கர், கலையரசன், எம்.ஏ முகமது அபூபக்கர், ஏ.வி.எம் வரிசை முகமது, ஏ.முகமது ஆரிப், ஒய்.முகமது அபூபக்கர், எம்.ஹாஜா நசுருதீன், ஏ.அயூப்கான் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


Monday, September 28, 2020

'கல்விமாமணி' விருது பெற்ற காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்!

அதிரை நியூஸ், செப்.28
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் எஸ்.நாகராஜனுக்கு அரிமா சங்க ஆசிரியர் தினவிழாவில் 'கல்விமாமணி' விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், ஆசிரியர் தின விழா 27.09.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவிற்கு, சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்து வரவேற்றார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், நிர்வாக அலுவலர் எம்.நெய்னா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

சிறப்பு விருந்தினராக, அரிமா சங்க மாவட்டத் தலைவர் எஸ்.விஜயலட்சுமி சண்முகவேல் கலந்துகொண்டு, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் எஸ்.நாகராசன் அவர்களுக்கு 'தமிழ்மாமணி' விருது வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அஸ்ரப் அலி, சுராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதுகலை ஆசிரியர் எஸ்.நாகராசன் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு:
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியராக கடந்த 31 ஆண்டுகளாக கல்விச் சேவை ஆற்றி வருகிறார்.
தாவரவியல் பாடப்பிரிவில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து 100 சதவித தேர்ச்சி.  கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலராக பொறுப்பில் உள்ளார். சுமார் 20 க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்களை நடத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் பாராட்டைப்பெற்றவர். 

கடந்த 15 ஆண்டுகளாக பள்ளியின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பில் இருந்து வருகிறார். பள்ளி வளாகத்தை பசுமை வளாகமாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மாநில அளவில் நடத்தப்பட்ட தாவரவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சியில் மாவட்ட அளவில் தேர்வுபெற்று கருத்தாளராக பணியாற்றியவர் ஆவார்.

மாணவர்கள் நல மேம்பாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதை பாராட்டும் விதத்தில் அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், கல்விமாமணி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 





அதிராம்பட்டினம் அரிமா சங்க ஆசிரியர் தின விழாவில் 'தமிழ்மாமணி' விருது வழங்கி கெளரவிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.26
அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், ஆசிரியர் தின விழா 27.09.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவிற்கு, சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்து வரவேற்றார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் எம்.நெய்னா முகமது சிறப்பு விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக, அரிமா சங்க மாவட்டத் தலைவர் எஸ்.விஜயலட்சுமி சண்முகவேல் கலந்துகொண்டு, ஆசிரியர் தின விழா பேருரை நிகழ்த்தி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் எஸ்.நாகராசன் அவர்களுக்கு 'தமிழ்மாமணி' விருது வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். மேலும், பேராசிரியர்கள் எம்.ஏ முகமது அப்துல் காதர், பி.கணபதி, கே.முருகானந்தம், கே.செய்யது அகமது கபீர், என்.உதயகுமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

விழாவில், தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கே.அனுராதா மற்றும் சிறந்த சேவைக்காக விருது பெற்ற சங்கத்தலைவர் எம். அப்துல் ஜலீல், செயலாளர் எம்.நிஜாமுதீன் ஆகியோருக்கு சால்வை அணித்து பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

விழாவில், சங்கத்தில் புதிய உறுப்பினராக இணைந்த ஹாஜா நசுருதீன், அயூப்கான் ஆகியோருக்கு, அரிமா சங்க மாவட்ட ஒரியண்டேஷன் பிரிவுத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வினை, மாவட்டத் தலைவர் எம். கஜாலி முகமது தொகுத்தளித்தார். நிறைவில், செயலாளர் எம்.நிஜாமுதீன்  நன்றி கூறினார். முன்னதாக, கரோனா பாதிப்பில் உயிர் நீத்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுனம் கடைபிடிக்கப்பட்டது. 

விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அஸ்ரப் அலி, சுராஜ், ஷிஃபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் இம்தியாஸ் அகமது, அரிமா சங்க மாவட்டத் தலைவர்கள் எம்.அகமது, எம்.சாகுல் ஹமீது, டி.பி.கே ராஜேந்திரன், அதிராம்பட்டினம் அரிமா சங்க இயக்குநர்கள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஆர். செல்வராஜ், அரிமா சங்க நிர்வாகிகள் பி.பிச்சமுத்து, என்.யூ ராமமூர்த்தி, எம்.முகமது அபூபக்கர், எம். அப்துல் ரஹ்மான், எம்.நெய்னா முகமது, சி.சார்லஸ், முல்லை ஆர்.மதி, குப்பாஷா எம்.அகமது கபீர், எம்.கே.எம் முகமது அபூபக்கர், பி.உமா சங்கர், கலையரசன், எம்.ஏ முகமது அபூபக்கர், ஏ.வி.எம் வரிசை முகமது, ஏ.முகமது ஆரிப், ஒய்.முகமது அபூபக்கர், எச் அப்துல் ரெஜாக்  உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.