பட்டுக்கோட்டை, ஆக.16
அதிராம்பட்டினம் அடுத்துள்ள பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப் பள்ளியில் 71 வது சுதந்திர தின விழா பள்ளித் தாளாளர் வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை காவல் துறை ஆய்வாளர் என்.அன்பழகன் கலந்து கொண்டு கொடியேற்றி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் துணைமுதல்வர் வி.பி.சந்திரசேகர் மற்றும் பள்ளி இயக்குனர்கள் பாரத், எலிசபெத் தேவஆசிர்வாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவன் எம்.ஆலன் மாணவி அ.அஞ்சலி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து ரொக்கப்பரிசு வழங்கினார்கள்.
முன்னதாக தலைமையாசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். விழா முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.கிட்டப்பா நன்றி கூறினார்
அதிராம்பட்டினம் அடுத்துள்ள பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப் பள்ளியில் 71 வது சுதந்திர தின விழா பள்ளித் தாளாளர் வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை காவல் துறை ஆய்வாளர் என்.அன்பழகன் கலந்து கொண்டு கொடியேற்றி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் துணைமுதல்வர் வி.பி.சந்திரசேகர் மற்றும் பள்ளி இயக்குனர்கள் பாரத், எலிசபெத் தேவஆசிர்வாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவன் எம்.ஆலன் மாணவி அ.அஞ்சலி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து ரொக்கப்பரிசு வழங்கினார்கள்.
முன்னதாக தலைமையாசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். விழா முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.கிட்டப்பா நன்றி கூறினார்






