.

Pages

Showing posts with label DMK. Show all posts
Showing posts with label DMK. Show all posts

Sunday, December 6, 2020

திமுக தேர்தல் அறிக்கையில், அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், தொக்காலிகாடு நீரேற்று நிலையம் அமைக்க கோரிக்கை!

தஞ்சாவூர், டிச.06
திமுக சார்பில் 2021 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நியமிக்கப்பட்டு அவர்கள் தமிழகம் முழுவதும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி கருத்துகளை கேட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் கருத்து கேட்புக் கூட்டம் தஞ்சையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மனும், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளருமாகிய எஸ்.எச் அஸ்லம் பங்கேற்று, அதிராம்பட்டினம் பேரூர் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான பாதாள சாக்கடைத் திட்டத்தை கொண்டு வரவும், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காலிக்காடு கிராமம் மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டுலிருந்து வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை பம்பிங் மூலம் அதிராம்பட்டினம், தொக்காலிக்காடு, மகிழங்கோட்டை, நடுவிக்காடு, மிலாரிக்காடு ஆகிய கிராமங்களின் விவசாயத்திற்கும், நீர் நிலைகளை நிரப்புவதற்காகவும், இப்பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய தனித்தனி மனுக்களை, திமுக கருத்துக் கேட்புக் குழுவினர் நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோரிடம் வழங்கினார்.

அப்போது, தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன், தஞ்சை மத்திய மாவட்ட பொறுப்பாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் க.கல்யாண சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.


Friday, November 20, 2020

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து பட்டுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது (படங்கள்)

பட்டுக்கோட்டை, நவ.20
தடையை மீறி திருக்குவளையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி. பாலசுப்பிரமணியன் தலைமையில், அக்கட்சியினர் பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளையில் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஈடுபட்டனர்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 247 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பட்டுக்கோட்டை தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


Wednesday, November 18, 2020

திமுக தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக ஏனாதி பாலசுப்பிரமணியன் நியமனம்: அதிராம்பட்டினம் திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து!

அதிரை நியூஸ்: நவ.18
தஞ்சாவூர் மாவட்ட திமுக, நிர்வாக வசதிக்காக 3 ஆகப் பிரிக்கப்படுவதாகவும், அதற்குரிய மாவட்டப் பொறுப்பாளர்களையும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் தற்போது தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு  மாவட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

முன்னர் ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 மாவட்டங்களாக வடக்கு, தெற்குப் பகுதி என இருந்ததை மாற்றி தற்போது தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில், தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏனாதி பாலசுப்பிரமணியன், தஞ்சை மத்திய மாவட்ட பொறுப்பாளராக துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக க.கல்யாண சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன் தலைமையில், திமுகவினர் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட ஏனாதி பாலசுப்பிரமணியனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


Thursday, October 15, 2020

ராஜாமடம் அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி முன்பாக திமுக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.15
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி முன்பாக திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதை கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நிதி தேவையில்லை என்று கடிதம் எழுதிய சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சன் இராமநாதன், மாணவரணி அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த திமுக இளைஞரணியினர் மற்றும் மாணவரணியினர் திரளானோர் கலந்து கொண்டு, மத்திய அரசைக் கண்டித்து பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள் ஏனாதி பாலசுப்பிரமணியன், கா.அண்ணாதுரை, திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் சத்திய விஜயன், பார்த்திபன், பா.இராமநாதன், லண்டன் கோவிந்தராஜ், முருகானந்தம், அன்பழகன், முத்துமாணிக்கம், ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் செந்தில் குமார், அதிராம்பட்டினம் பேரூர் செயலளார் இராம குணசேகரன், ஒன்றிய பெருந்தலைவர் பழனிவேலு, துணைத்தலைவர் ராஜா, தஞ்சை தெற்கு மாவட்ட கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை  அமைப்பாளர் பழஞ்சூர் கே.செல்வம், அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், இராஜமடம் இளங்கோ, பட்டுக்கோட்டை ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் வீரமணி, ரமேஷ், அதிராம்பட்டினம் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் அதிரை மைதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

அதிராம்பட்டினம் பேரூர்...
எம்.எம்.எஸ் அப்துல் கரீம், என்.கே.எஸ் சபீர், கோடி முதலி, ஏ.எம்.ஒய் அன்சர்கான், சி.தில்லைநாதன், இன்பநாதன், எம்.பகுருதீன், முல்லை ஆர்.மதி, ஏ.எம் அப்துல் ஹலீம், வீரப்பன், கே. இத்ரீஸ் அகமது, முன்னாள் கவுன்சிலர்கள் எச்.முகமது இப்ராஹீம், என்.கே.எஸ் முகமது சரீப், அய்யாவு, கோடி நாகராஜ், டி.முத்துராமன், சைபுதீன், நிஜாமுதீன், இ.வாப்பு மரைக்காயர், பிரின்ஸ் முகமது ராவுத்தர், எம்.அன்வர்தீன், வீரசேகரன், இராமநாதன், ஏ.வி.எம் வரிசை முகமது, கதிர், நாசர், கிருபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

மனிதநேய மக்கள் கட்சியினர் பங்கேற்பு:
இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து, மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, எஸ்.அஸ்லம், நியாஸ் அகமது, எச்.செய்யது புஹாரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.