.

Pages

Showing posts with label SBI. Show all posts
Showing posts with label SBI. Show all posts

Friday, September 29, 2017

அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு பாராட்டு ~ வழியனுப்பும் விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 29
பதவி உயர்வு பெற்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ஏ. ஹமீத்கானுக்கு பாராட்டு - வழியனுப்பும் விழா.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளராக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தவர் ஏ.ஹமீத்கான். இந்நிலையில், பதவி உயர்வு பெற்று, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, சக பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சார்பில் பாராட்டு மற்றும் வழியனுப்பும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, வங்கி கிளை புதிய மேலாளர் பிரவின் குமார் தலைமை வகித்தார். விழாவில், அதிரை பேரூர் வர்த்தக சங்கத் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், முன்னாள் தலைமை ஆசிரியர் ஏ.மகபூப் அலி, வங்கி காசாளர் ஜெயா, பிரேம் நாத், பாண்டியன், நகை மதிப்பீட்டாளர் வாசு, ஜாகிர் உசேன் (ஜே.எஸ்), ராமசாமி, ஜமால் முஹம்மது உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதன்பின்னர் மேலாளர் ஏ. ஹமீத்கான் தனது ஏற்புரையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

தொடக்கத்தில், வங்கி வர்த்தகத் தொடர்பாளர் ஏ. ஷேக் அப்துல்லாஹ் வரவேற்றுப்பேசினார், விழா முடிவில் நன்றி கூறினார். இவ்விழாவில் வங்கி பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

Friday, September 8, 2017

அதிராம்பட்டினத்தில் ஆசிரியர்களுக்கு நேரில் சென்று வாழ்த்துக் கூறிய வங்கி மேலாளர் !

அதிராம்பட்டினம், செப்-08
செப், 5 ந் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ஹமீத்கான் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள்/பெண்ககள் மேல்நிலைப்பள்ளிகள், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கரையூர் தெரு அரசு நடுநிலைப்பள்ளி, இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு நேரில் சென்று, அங்குள்ள தலைமை ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து, எழுதுகோல் அன்பளிப்பாக வழங்கி ஆசிரியர் தின வாழ்த்து கூறினார். மேலும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வங்கி கிளை முன்பாக பேனர் தொங்கவிடப்பட்டுள்ளது.
 

Thursday, August 24, 2017

அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கியின் முக்கிய அறிவிப்பு !

மேலாளர் ஹமீத்கான்
அதிராம்பட்டினம், ஆக. 24
நகைக் கடனை புதிப்பித்துக் கொள்ள சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ஹமீத்கான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது;
அன்புநிறை வாடிக்கையாளர்களே,
இது சென்ற வருடம் 31-07-2016க்கு முன் நகைக்கடன் பெற்றவர்களுக்கு மட்டும் நடத்தப்படும் சிறப்பு முகாம்.

தாங்கள் செலுத்த வேண்டிய நகைகடனுக்கான வட்டியை மட்டும் செலுத்தி நகைக்கடனை புதிப்பித்துக்கொள்ள ஒரு சிறப்பு முகாம் ஒன்று எதிர்வரும் 29-08-2017, 30-08-2017 மற்றும் 31-08-2017 ஆகிய மூன்று தினங்களில் மட்டும் பாரத ஸ்டேட் வங்கி, அதிராம்பட்டினம் கிளையில் நடைபெற இருக்கின்றது.

இவ்வாறு இவ்வாய்ப்பை பயன்படுத்தக் கொள்ள விரும்புபவர்கள் சிறப்பு முகாம் நடக்கும் தினங்களில் அன்று காலை 09.30 மணி முதல் 10.00 மணிக்குள் வங்கிற்கு வந்து, நகைக்கடனை புதிப்பித்துக் கொள்வதற்காக, தங்களது நகைகடன் அட்டையை வழங்கி பதிவு செய்துக் கொள்ள வேண்டுகிறோம்.

இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி நகை ஏலத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளும்படியும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம்,
மேளாளர்,
பாரத ஸ்டேட் வங்கி,
அதிராம்பட்டினம்.

Saturday, August 12, 2017

அதிரை பாரத ஸ்டேட் வங்கியில் எளிய முறையில் பணம் எடுக்கும்-செலுத்தும் வசதி !

அதிராம்பட்டினம், ஆக.12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கில் பணம் போடவோ அல்லது பணம் எடுக்கவோ காத்துக்கிடக்க தேவையில்லை. வங்கி நிர்வாகம் ஊழியரைக் கொண்டு ஸ்வைப் மிஷின் மூலம் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். அதற்கு வங்கியில் கணக்கு வைத்திருப்போர் நேரடியாக வங்கிக்கு ஏடிஎம் அட்டை எடுத்து வந்து தனக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளலாம் அதே போல் பணத்தையும் வங்கியில் டெபாசிட் செய்யலாம். 

Wednesday, August 2, 2017

அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி காசாளருக்கு பிரிவுபசார விழா !

அதிராம்பட்டினம், ஆக.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளையின் காசாளாராக கடந்த 7 ஆண்டுகள் 7 நாட்கள் பணியாற்றி வந்த பட்டுக்கோட்டை கபிலன், தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வங்கி கிளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வங்கி வளாகத்தில் நடந்த பிரிவு உபசார விழாவில் வங்கி மேலாளர் ஹமீத்கான், வர்த்தகத் தொடர்பாளர் ஷேக் அப்துல்லா, அலுவலர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Thursday, July 6, 2017

அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளரின் அறிவிப்பு !

வங்கி மேலாளர் ஹமீதுகான்
அதிராம்பட்டினம், ஜூலை 06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில் வாடிக்கையாளர்கள் ஆதார் எண் பதிவு செய்யும் சிறப்பு முகாம் எதிர்வரும் 12.07.2017 அன்று வரை நடைபெற உள்ளது. வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை இணைத்து தங்களது கணக்குகள் முடங்காமல் தவிர்த்துகொள்ளவும்.

வங்கியிலோ அல்லது அதன் சேவை மையத்திலோ தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யலாம் என வங்கி கிளை மேலாளர் ஹமீதுகான் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
பாரத ஸ்டேட் வங்கி
புதுத்தெரு
அதிராம்பட்டினம் கிளை

சேவை மையம்:
எஸ்.ஏ.எச் டவர், எஸ்பிஐ கியோஸ் வங்கி, கிராணி மளிகை அருகில்
கடைத்தெரு, அதிராம்பட்டினம்
99520 39825

Friday, April 21, 2017

கரையூர்தெரு அரசுப் பள்ளியில் வங்கி படிவங்கள் பூர்த்தி செய்தல் போட்டி !

அதிராம்பட்டினம், ஏப்-21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வங்கி படிவங்கள் பூர்த்தி செய்தல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

போட்டியை பள்ளித் தலைமை ஆசிரியை மணிமேகலா நடத்தினார்.
போட்டியில் 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக பாரத ஸ்டேட் வங்கி அதிராம்பட்டினம் கிளை மேலாளர் ஹமீதுகான் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்து, போட்டியில் வெற்றி பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு எழுதுகோல் பரிசாக வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். மேலும் பாரத ஸ்டேட் வங்கி அதிராம்பட்டினம் கிளை சார்பில் பள்ளிக்கூட வகுப்பறைகளுக்கு 4 மின்விசிறிகள் ( சீலிங் பேன் ) தலைமை ஆசிரியையிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வங்கி வர்த்தகத் தொடர்பாளர் ஷேக் அப்துல்லா, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.