.

Pages

Monday, July 7, 2014

அதிரை அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் இரு வாலிபர்கள் பரிதாப பலி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை அருகே உள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பரமசிவம் ( வயது 20  ) வீரமணி ( வயது 20  ) நண்பர்களான இருவரும் இன்று மாலை திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஊருக்கு இருசக்கர வாகனத்தில் ஈசிஆர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அதே சாலையில் பேராவூரனியிலிருந்து முத்துபேட்டையை நோக்கி டெம்போ வாகனம் வாழைத்தார்களை ஏற்றிகொண்டு சென்றது. டெம்போ வாகனம் கருங்குளம் அருகே சென்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் இறந்த வாலிபர்களின் இரு உடல்களையும் கைப்பற்றி அதிரை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றது.

தகவலறிந்த வாலிபர்களின் உறவினர்கள் மருத்துவனையில் சோகத்துடன் காணப்படுகின்றனர். பிரத பரிசோதனைக்கு பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



4 comments:

  1. ஈசிஆர் ரோடு இன்னும் எத்தனை உயிர் பலிகொல்ல போகிறதோ? யா அல்லாஹ் நீயே பாதுகாவலன்.

    ReplyDelete
  2. இசியான மர்டர் ரோடு
    வேகத்தை குறைத்து விவேகத்தோடு சென்றால்
    மரனத்தையாவது தவிர்க்கலாம்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.