தேசிய மீனவர் பேரவை மற்றும் ஆதரவு அமைப்புகள் சார்பில், கடல் வளம், நிலவளம், பொதுவளம், சுற்றுச்சூழல், கடலோர மற்றும் விவசாய சமூக வாழ்வாதாரங்களை பாதுகாத்திட வலியுறுத்தி 'வளங்களைக் காப்போம்' எனும் தலைப்பில், கடலோர விழிப்புணர்வு பிரச்சாரம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
பிரசாரத்திற்கு, ஏஐடியூசி சங்க மாவட்டச் செயலர் என். காளிதாஸ் தலைமை வகித்தார். தேசிய மீனவர் பேரவை துணைத் தலைவர் குமரவேல் முன்னிலை வகித்தார்.
இதில், விவசாய தொழிற்சங்க செயலாளர் சி.பக்கிரிசாமி, ஏ.கலியபெருமாள், பாலுசாமி, பூபேஷ் குப்தா, ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.எச் பசீர் அகமது, பன்னீர்செல்வம், மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



















































