தஞ்சாவூர் ஜூன்.27-
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் படுகொலைக்கு காரணமான காவல்துறை, உடந்தையாக இருந்த மருத்துவர்கள், சிறைத் துறை அதிகாரிகள், நீதித்துறை நடுவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களை பணிநீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும். காவல்துறையினருக்கு மனித உரிமைகள் குறித்த பயிற்சி வழங்க வேண்டும். காவல்நிலைய படுகொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.
படுகொலை செய்த காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு துணை போகக்கூடாது. பேராவூரணி காவல்துறையினர் விவசாயிகள் சங்கத் தலைவர் கொரட்டூர் நீலகண்டன் மீது பொய் வழக்குப் போடும் முயற்சியைக் கைவிட வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பேராவூரணி அண்ணாசிலை அருகில் நேற்று வெள்ளிக்கிழமை காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், கட்சி நகரச் செயலாளர் வே.ரெங்கசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.மாணிக்கம், இந்துமதி, ராமலிங்கம், ராஜா முகமது, கிளைச் செயலாளர் தயார் சுல்தான் மற்றும் 25 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் படுகொலைக்கு காரணமான காவல்துறை, உடந்தையாக இருந்த மருத்துவர்கள், சிறைத் துறை அதிகாரிகள், நீதித்துறை நடுவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களை பணிநீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும். காவல்துறையினருக்கு மனித உரிமைகள் குறித்த பயிற்சி வழங்க வேண்டும். காவல்நிலைய படுகொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.
படுகொலை செய்த காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு துணை போகக்கூடாது. பேராவூரணி காவல்துறையினர் விவசாயிகள் சங்கத் தலைவர் கொரட்டூர் நீலகண்டன் மீது பொய் வழக்குப் போடும் முயற்சியைக் கைவிட வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பேராவூரணி அண்ணாசிலை அருகில் நேற்று வெள்ளிக்கிழமை காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், கட்சி நகரச் செயலாளர் வே.ரெங்கசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.மாணிக்கம், இந்துமதி, ராமலிங்கம், ராஜா முகமது, கிளைச் செயலாளர் தயார் சுல்தான் மற்றும் 25 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
















































