.

Pages

Showing posts with label தீ விபத்து. Show all posts
Showing posts with label தீ விபத்து. Show all posts

Thursday, March 12, 2020

அதிராம்பட்டினத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 12
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கூரை வீடுகள் தீயில் கருகின.

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுரைக்கா கொல்லை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதன்கிழமை மதியம் திடிரென தீ பிடித்து மளமளவென பரவியதால் அடுத்தடுத்து 5 கூரை வீடுகளில் தீ பற்றியது. இதில், வசந்தி, நாகம்மாள், சாரதம், தெய்வானை, நாகம்மாள் ஆகியோரின் கூரை வீடுகள் தீயில் கருகி சாம்பலாகியது. இதனால், அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர், அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து தீயை அணைத்தனர். இதனால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. பின்னர், பட்டுக்கோட்டை தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் நிகழ்விடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.
 

Wednesday, November 20, 2019

அதிராம்பட்டினத்தில் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்!

அதிராம்பட்டினம், நவ.20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மன்னப்பன் குளக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கோபு. இதே பகுதியில் இவருக்கு சொந்தமான வீடுகளில் மரியா (வயது 70), பாப்பாத்தி (வயது 75), மோகன் (வயது 55) ஆகிய மூவரும் தனித்தனியாக குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு மோகன் என்பர் வீட்டில் திடீரென தீ பற்றியது. பின்னர், அருகில் இருந்த வீடுகளிலும், தீ மளமளவென பரவியது. இதனால், வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியது. இதனால், அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர், அப்பகுதி இளைஞர்கள் திரண்டு வந்து தீயை போராடி அணைத்தனர். இதனால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. பின்னர், பட்டுக்கோட்டையில் இருந்து தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்தில் காயமடைந்த மோகன் என்பவர் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழும நண்பர்கள் சார்பில், தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு, ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான அரிசி ஒரு மூடை, புடவை, கைலி, சட்டை, பெட் சீட், குடம், பக்கெட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினர்.

மேலும், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மோகனை சந்தித்து ஆறுதல் கூறினர். இதில், அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழும பொறுப்பாளர்கள் எம். சாகுல் ஹமீது, இக்பால், ஜெய்னூல், தமீம் அன்சாரி, அரபாத், நாகூர் கனி, காசிம், சைபுதீன், சலீம் மாலிக், நசீர் அஹமத், அப்துல் சமது, குலாப்ஜாமூன் அன்சாரி, சாகுல் ஹமீது ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tuesday, June 25, 2019

அதிராம்பட்டினத்தில் குடிசை வீடுகள் எரிந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 25
அதிராம்பட்டினத்தில் குடிசை வீடுகள் தீ பற்றி எரிந்ததில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகியது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு மேல்புறத்தை சேர்ந்தவர் அபூபக்கர். இவரது வீட்டின் அருகே சாகுல் ஹமீது மனைவி ரஹ்மத் (38), ரஹ்மான் மனைவி அபுரோஸ் பேகம் (25) ஆகியோர் அடுத்தடுத்து குடிசை வீடுகளில் குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென குடிசையின் மேற்கூரையில் தீ பற்றியது, பின்னர், தீ மளமளவென பரவியதால் வீட்டில் இருந்த அரிசி மூடை, பீரோல், எரிவாயு சிலிண்டர், இடியாப்பம் சுடும் தளவாடப் பொருட்கள் உட்பட அனைத்தும் தீயில் கருகியது. இதனால், அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர், அப்பகுதியினர் திரண்டு வந்து தீயை போராடி அணைத்தனர். இதனால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

பின்னர், பட்டுக்கோட்டை தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் சேத மதிப்பு ரூ. 1 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
 
 
 
 
 
 

Thursday, April 25, 2019

அதிராம்பட்டினத்தில் குடிசை வீடு எரிந்து நாசம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கீழத்தெரு புதுக்குடியை சேர்ந்தவர் காதர் பாட்சா. இவரது மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று வியாழக்கிழமை மதியம் திடீரென வீட்டின் மேற்கூரையில் தீ பற்றியது, பின்னர், தீ மளமளவென பரவியதால் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகின. இதனால், அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர், அப்பகுதியினர் திரண்டு வந்து தீயை போராடி அணைத்தனர். இதனால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

பின்னர், பட்டுக்கோட்டை தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
 

Friday, October 12, 2018

மேலத்தெரு நீர் தேக்கத் தொட்டி அருகே நள்ளிரவில் தீ விபத்து (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 12
அதிராம்பட்டினம், மேலத்தெரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகம் அருகே செல்லும் உயர்மின் அழுத்த கம்பியில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அருகில் உள்ள தென்னை மரத்தில் உரசி திடீரென தீ பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி இளைஞர்கள் மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்து மின் இணைப்பை துண்டிக்கச் செய்தனர். தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் துரிதமாக செயல்பட்டனர். பின்னர், தகவல் அறிந்து வந்த பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர். இதனால், நள்ளிரவில் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Tuesday, August 14, 2018

காந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மீன்பிடி வலை வழங்கப்பட்டது (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காந்திநகரைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன் (35). தனது மனைவி மாலதி (30) மற்றும் பிள்ளைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். அதன் அருகே, மற்றொரு குடிசை வீட்டில் மாரியப்பன் தாய் வள்ளி (56) வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாலதி வீட்டில் திடீரென தீ பிடித்து எரிந்து சாம்பலானது. இதில், வீட்டில் வைத்து இருந்த பணம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பள்ளிச் சான்றிதழ்கள், ஆடைகள் உள்ளிட்டவை தீயில் கருகியது. தீ விபத்து குறித்து அறிந்த பல்வேறு தரப்பினர் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் கீழத்தெரு மஹல்லா அமீரக அமைப்பின் தலைவர் எல்.எம்.ஐ அப்பாஸ் சார்பில், நிவாரணமாக ரூ.10 ஆயிரம் மதிப்பில், மீன் பிடிக்க பயன்படும் வலை இன்று (ஆக. 14) செவ்வாய்க்கிழமை காலை வழங்கப்பட்டது. என்.காளிதாஸ், ஹாஜா முகைதீன், ஜீசான் அலி, முகமது பாருக், முகமது முகைதீன், ஜாகிர் உசேன், பஞ்சவர்ணம் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வழங்கினர்.





Thursday, April 26, 2018

அதிராம்பட்டினத்தில் பந்தல் கடையில் தீ விபத்து (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடைத்தெரு ஐஸ் பேக்டரிக்கு அடுத்து அமைந்துள்ள எஸ்.எம்.ஏ அன்வர் பந்தல் கொட்டகையில் புதன்கிழமை இரவு திடீரென தீ மளமளவென பரவியது. அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த யூகலிப்டஸ் மரங்கள், கீற்றுகள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்து தகவல் அறிந்த தன்னார்வல இளைஞர்கள் திரண்டு வந்து தீயை போராடி அணைத்தனர். இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

பின்னர், தீ விபத்து பற்றி தகவல் அறிந்த பேராவூரணி தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 

Monday, February 19, 2018

அதிராம்பட்டினத்தில் மாட்டுக்கொட்டகையில் தீ !

அதிராம்பட்டினம், பிப்.19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் அன்சாரி. விவசாயி. இவரது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கொட்டகையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், மாட்டுக்கொட்டகை முழுவதும் எரிந்து சேதமாகியது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி இளைஞர்கள் தீ மேலும் பரவாமல் இருக்க, தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
 

Friday, February 16, 2018

அதிராம்பட்டினம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்துக்கு எம்.எல்.ஏ நிதி உதவி!

அதிராம்பட்டினம், பிப்.16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள முடுக்குகாடு கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலன். கூலித்தொழிலாளி. இவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் புதன்கிழமை தீப்பிடித்தது. இதில், வீட்டின் மேற்கூரை தீயில் கருகின.

இந்நிலையில், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பாஞ்சாலன் குடும்பத்தை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ, இன்று வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரத்தை பாஞ்சாலனிடம் வழங்கினார். மேலும், அரசின் சார்பில், தீ விபத்து நிவாரண உதவி பெற உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினார்.

அப்போது, அதிமுக ஒன்றியச் செயலர் பி. சுப்ரமணியன், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை, பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் சுப. ராஜேந்திரன், அதிராம்பட்டினம் பேரூர் துணைச் செயலாளர் முகமது தமீம், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன், அபுதாஹிர் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)