அதிராம்பட்டினம், மார்ச் 12
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கூரை வீடுகள் தீயில் கருகின.
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுரைக்கா கொல்லை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதன்கிழமை மதியம் திடிரென தீ பிடித்து மளமளவென பரவியதால் அடுத்தடுத்து 5 கூரை வீடுகளில் தீ பற்றியது. இதில், வசந்தி, நாகம்மாள், சாரதம், தெய்வானை, நாகம்மாள் ஆகியோரின் கூரை வீடுகள் தீயில் கருகி சாம்பலாகியது. இதனால், அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர், அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து தீயை அணைத்தனர். இதனால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. பின்னர், பட்டுக்கோட்டை தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் நிகழ்விடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கூரை வீடுகள் தீயில் கருகின.
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுரைக்கா கொல்லை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதன்கிழமை மதியம் திடிரென தீ பிடித்து மளமளவென பரவியதால் அடுத்தடுத்து 5 கூரை வீடுகளில் தீ பற்றியது. இதில், வசந்தி, நாகம்மாள், சாரதம், தெய்வானை, நாகம்மாள் ஆகியோரின் கூரை வீடுகள் தீயில் கருகி சாம்பலாகியது. இதனால், அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர், அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து தீயை அணைத்தனர். இதனால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. பின்னர், பட்டுக்கோட்டை தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் நிகழ்விடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.



















































