.

Pages

Showing posts with label தேமுதிக. Show all posts
Showing posts with label தேமுதிக. Show all posts

Thursday, May 5, 2016

அதிரை பேரூர் 1 வது வார்டில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு !

அதிராம்பட்டினம் மே-05
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேமுதிக-தமாகா-மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என். செந்தில் குமாரை ஆதரித்து தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன் தலைமையில் கூட்டணி கட்சியினர் அதிரை பேரூராட்சி 1 வது வார்டு பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனர்.

அப்போது இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி - மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தனர். தமாகா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, அதிரை பேரூர் துணை தலைவர் கண்ணன், தமாகா அதிரை பேரூர் இளைஞர் அணி தலைவர் டி.ராஜா, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
 
 
 
 
 
 


Saturday, April 30, 2016

அதிரையில் வாய் பேச இயலாத - காது கேளாத நலஅறக்கட்டளை உறுப்பினர்களிடம் வேட்பாளர் செந்தில்குமார் வாக்கு சேகரிப்பு !

அதிராம்பட்டினம் ஏப்-30
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல அறக்கட்டளை உறுப்பினர்களிடம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேமுதிக - தமாகா - மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் என். செந்தில் குமார் முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வேண்டுகோள் விடுத்தார். அப்போது நலஅறக்கட்டளைத் தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் ஹாஜா ஷெரிப், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தவும், நலச்சங்க ஏழை எளிய உறுப்பினர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்கள். மனுவை பெற்றுக்கொண்டு தான் வெற்றி பெற்று சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தேர்வு ஆனால் இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார்.

அப்போது தமாகா அதிரை பேரூர் தலைவர் எம்எம்எஸ் அப்துல் கரீம், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், தமாகா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அக்பர் சுல்தான் ( தேமுதிக ), காளிதாஸ் (இந்திய கம்யூ), உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 

Wednesday, April 13, 2016

தே.மு.தி.க பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளராக செந்தில் குமார் அறிவிப்பு !

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை இன்று காலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார். தற்போது 2 மற்றும் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக என். செந்தில் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Tuesday, April 15, 2014

அதிரையரின் உணர்வுக்கு மதிப்பளித்து தேமுதிக நகர செயலாளர் பதவியை தூக்கிவீசிய நூர் முஹம்மதுடன் சந்திப்பு ! [ காணொளி ]

அதிரை நெசவுத்தெருவை சேர்ந்தவர் நூர் முஹம்மது. சமூக ஆர்வலரான இவர் அதிரை பேரூராட்சியின் 18 வது வார்டு உறுப்பினராக பல முறை பணியாற்றியவர். அதிரை நகர தேமுதிகவின் செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார். இவரின் கீழ் 450 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இவருக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

நடக்க இருக்கிற பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் மதவாத கட்சியான பிஜேபியோடு கூட்டணி அமைத்தனால் கட்சியில் பல்வேறு மட்டங்களில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. திராவிட காட்சிகளில் ஒன்றாக இருந்துவரும் தேமுதிக, திராவிட கொள்கைக்கு மாற்றமாக மதவாத கட்சியுடன் ஏற்பட்ட கூட்டணியை ஜீரணிக்க முடியாமல் பலர் பிற அரசியல் கட்சியில் சேர்ந்த வருவது தின நாளிதழ்களில் அன்றாட செய்திகளாக வந்த வண்ணம் இருக்கின்ற வேளையில், பிஜேபி சமீபத்தில் வெளியிட்ட தனது தேர்தல் அறிக்கையில் பொதுசிவில் சட்டம், அயோத்தியில் இராமர் கோவில் கட்டும் திட்டம் உள்ளிட்ட கொள்கைகள் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் அதிரையில் வசிக்கும் பெரும்பாலான இஸ்லாமியர்களின் மத்தியிலும் காணப்பட்டன. இவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக அதிரை நகர கிளையின் செயலாளராக பொறுப்பில் இருக்கும் நூர் முஹம்மது தனது ராஜினாமா கடிதத்தை தேமுதிக தலைமையகத்துக்கும், மாவட்டம் - ஒன்றியம் ஆகியவற்றின் பொறுப்பாளருக்கும் அனுப்பியுள்ளார் என்ற தகவல் நமக்கு கிடைத்தவுடன் இன்று அதிகாலை அவரது அலுவலத்தில் சந்தித்து பதவியை திடீரென தூக்கி வீசியது குறித்து பேசினோம்.