.

Pages

Showing posts with label புதுப்பட்டினம் செய்தி. Show all posts
Showing posts with label புதுப்பட்டினம் செய்தி. Show all posts

Wednesday, September 2, 2020

புதுப்பட்டினத்தில் TNTJ அமைப்பினர் 34 யூனிட் இரத்தம் தானம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.02
கரோனா பேரிடரை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுப்பட்டினம் கிளை சார்பில், 130-வது இரத்த தானம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.

இதில், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குருதி பரிமாற்ற அலுவலர் மருத்துவர் வேல்முருகன், இரத்த வங்கி ஆலோசகர் கண்ணன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, 34 யூனிட் இரத்தத்தை டி.என்.டி.ஜே அமைப்பின் கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்ட துணைச் செயலாளர் பாவா உள்ளிட்ட அவ்வமைப்பினர் பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, புதுப்பட்டினம் கிளைத் தலைவர் ஹபீப் முகமது, துணைத்தலைவர் முகமது உசேன், துணைச் செயலாளர் சதக்கத்துல்லா, மாணவரணி சாகுல், மருத்துவரணி நபீல் மற்றும் செந்தலைப்பட்டினம் மருத்துவரணி பாரிஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

Sunday, August 30, 2020

புதுப்பட்டினத்தில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.30
புதிய தேசியக் கல்விக் கொள்கை ரத்து செய்ய வேண்டும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கைவிட வேண்டும், கிரிமினல் சட்டங்களில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சார்பில், நாடு தழுவிய பிரச்சார இயக்கம் கடந்த ஆக.25ந் தேதி தொடங்கி வரும் ஆக.31 வரை  நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கட்சியினர், புதுப்பட்டினம் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

நிகழ்வுக்கு, அக்கட்சியின் புதுப்பட்டினம் கிளைத் தலைவர்
எஸ்.ரபீக்கான் தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புஹாரி கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில் அக்கட்சியினர் பலர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
 
 

Monday, March 5, 2018

புதுப்பட்டினத்தில் கால்பந்தாட்ட கிளப் அறிமுக விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் ஊராட்சியில், புதுப்பட்டினம் ஸ்போர்ட்ஸ் அகதெமி (PSA) சார்பில், புதுப்பட்டினம் கால்பந்தாட்ட கிளப் அறிமுக விழா புதுப்பட்டினம் கால்பந்தாட்ட மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, டி.கே.எம் அப்துல் ஹமீது தலைமை வகித்தார். புதுப்பட்டினம் ஜமாத் நிர்வாகிகள், புதுப்பட்டினம் பைத்துல்மால் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

விழாவில், சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்நாடு கால்பந்தாட்ட பயிற்சியாளர் இன்பமணி, சென்னை துறைமுக முன்னாள் காலந்தாட்ட வீரர் நல்லதம்பி, பாண்டிச்சேரி மாநில முன்னாள் கால்பந்தாட்ட வீரர், ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீரபுத்திரன், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தனர்.

விழாவில், புதுப்பட்டினத்தை சேர்ந்த அதிரை காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஏ.முகமது ஆபித், 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் உடல் திறனாய்வு தேர்வில் நீளம் தாண்டுதல் போட்டியில் 4.4 மீட்டர் தாண்டி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கும்பகோணம் ஆகிய கல்வி மாவட்டங்கள் இணைந்து மண்டல ரீதியாக நடந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கு, அதேபோல் நடப்பு கல்வி ஆண்டிலும் வெற்றி பெற்றதற்காக, இவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஏ.ரியாசுதீன் வரவேற்றுப் பேசினார். விழா முடிவில் ஒளரங்கசீப் நன்றி கூறினார். இவ்விழாவில், கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

Wednesday, December 28, 2016

அதிரை அருகே ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை திறப்பு !

அதிராம்பட்டினம், டிச-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடையை பேராவூரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மா.கோவிந்தராசு திறந்து வைத்து பேசினார்.

உலக அளவில் வெளிநாட்டு பணப்பரிமாற்றம் செய்து வரும் பால் மெர்ச்சண்ட்ஸ், வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் சார்பில் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி புதுப்பட்டினம் பஸ் நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குழ. சுந்தர்ராஜன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா. கோவிந்தராசு பயணியர் நிழற்கூடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் பால் மெர்ச்சண்ட்ஸ் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கர்நாடக தலைவர் கே .கோவிந்தராஜன் , வெஸ்டர்ன் யூனியன் தமிழ்நாடு வாணிப மேம்பாட்டு மேலாளர் பிரேம் சுகுணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் பால் மெர்ச்சண்ட்ஸ் நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
 



Friday, March 11, 2016

அதிரை அருகே உள்ள புதுப்பட்டினம் மீனவர் கத்தார் நாட்டில் மரணம் !

அதிரை அருகே உள்ள புதுப்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி ( வயது 33), அவரது தந்தை வீரையன் , தாயார் சிவபாக்கியம், தந்தை இறந்துவிட்டார். இவர் மீன்பிடி வேலைக்காக கத்தார் நாட்டிற்கு பணிக்காக சென்றுள்ளார். இவருக்கு 10 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது,

இந்நிலையில் கத்தார் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 8ம் தேதி இறந்துவிட்டார். அதன் பிறகு அவரது பிரேதத்தை இந்தியா கொண்டு வர ஒட்டு மொத்த கிராத்தினரும் சேர்ந்து கடும் போராட்டத்திற்கு பிறகு இன்று மாலை 5 மணியளவில் புதுப்பட்டினம் கிராமத்திற்கு கொண்டு வந்து சிறிது நேரத்தில் அடக்கம் செய்தனர்.

10 மாத குழந்தையுடன் தவிக்கும் அவரது மனைவிக்கு எந்த ஆதரவும் இல்லாத நிலையில் மத்திய மாநில அரசுகள் இணைந்து கத்தார் நாட்டில் அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து இழப்பீடு பெற்று தரவும், இவர்கள் சார்பில் நிவாரணம் வழங்கியும் உதவிட வேண்டும் என புதுப்பட்டினம் மீனவ கிராமத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை

Monday, September 29, 2014

புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவராக SDPI கட்சியின் சம்சுன் மஹரிபா பதவியேற்பு !

காலியாக உள்ள புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு SDPI கட்சியின் சார்பில் சம்சுன் மஹரிபா போட்டியிட முடிவு செய்தார்.

இதையடுத்து கடந்த [03-09-2014 ] அன்று தஞ்சை தெற்கு மாவட்டத்  தலைவர் Z. முகம்மது இலியாஸ், புதுப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து மாற்று வேட்பாளர் யாரும் மனு தாக்கல் செய்யாததையடுத்து ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் ஊராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இன்று காலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவருக்கு முறைப்படி பதவி பிராமணம் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ், எஸ்டிபிஐ கட்சியின் அதிரை மற்றும் புதுப்பட்டினம் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற துணை தலைவராக அதே கட்சியை சேர்ந்த அஹமது ஆசாத் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.




Friday, September 12, 2014

புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவராக SDPI கட்சியின் சம்சுன் மஹரிபா போட்டியின்றி தேர்வு !

காலியாக உள்ள புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு SDPI கட்சியின் சார்பில் சம்சுன் மஹரிபா போட்டியிட முடிவு செய்தார்.

இதையடுத்து கடந்த அன்று தஞ்சை தெற்கு மாவட்டத்  தலைவர் Z. முகம்மது இலியாஸ், புதுப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து மாற்று வேட்பாளர் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் ஊராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

புதுப்பட்டினம் ஊராட்சி துணை தலைவராக அதே கட்சியை சேர்ந்த அஹமது ஆசாத் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.



Wednesday, September 3, 2014

புதுப்பட்டினம் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு SDPI கட்சி வேட்புமனு தாக்கல் !


காலியாக உள்ள புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர்பதவிக்கு SDPI கட்சியின் சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து  இன்று காலை  தஞ்சை தெற்கு மாவட்டத்  தலைவர் Z. முகம்மது இலியாஸ், புதுப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலையில் வேட்பாளராக போட்டியிடும் சம்சுன் மகரிபா வேட்புமனு தாக்கல் செய்தார்.