.

Pages

Showing posts with label ரோட்டரி சங்கம். Show all posts
Showing posts with label ரோட்டரி சங்கம். Show all posts

Thursday, December 3, 2020

அதிராம்பட்டினத்தில் உலக மாற்றுத்திறனாளி தின விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.03
அதிராம்பட்டின ரோட்டரி சங்கம் சார்பில்,  உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா அதிராம்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில், சங்க மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் முகமது, அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஜம்ஜம் அகமது அஷ்ரப், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.சாகுல் ஹமீது,  முன்னாள் தலைவர் டி.முகமது நவாஸ்கான், முன்னாள் செயலர் இசட். அகமது மன்சூர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Monday, October 19, 2020

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு காகிதத்தால் ஆன மாத்திரை கவர் வழங்கல்!

அதிராம்பட்டினம், அக்.19
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு காகிதத்தால் ஆன மாத்திரை கவர் திங்கட்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்வில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.சாகுல் ஹமீது, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில், மருத்துவமனை மருந்தாளுநரிடம் காகிதத்தால் ஆன 5 ஆயிரம் மாத்திரை கவரினை வழங்கினார்.

இந்நிகழ்வில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் என்.கலைவாணி, எச்.இஸ்ரத் நஸ்ரின், வனசுந்தரி மற்றும் செவிலியர்கள், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஜமால் முகமது, இசட்.அகமது மன்சூர், அகமது சலீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Saturday, August 15, 2020

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.சாகுல் ஹமீது தலைமை வகித்து, இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். செயலாளர் ஏ.ஜமால் முகமது, பொருளாளர் ஜெ.அமீன் நவாஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

நிகழ்வில், ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  அனைவருக்கும் இனிப்பு, கப சூரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டன.
 
 
 
 
 
 

Sunday, July 12, 2020

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க 2020-2021 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா அதிராம்பட்டினம் ராயல் மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் டி. முகமது நவாஸ்கான் தலைமை வகித்தார். செயலாளர் எஸ். சாகுல் ஹமீது ஆண்டறிக்கை வாசித்தார்.

நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் ஜி. மனோகரன் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். இதில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய தலைவராக எஸ். சாகுல் ஹமீது, செயலாளராக ஏ.ஜமால் முகமது,, பொருளாளராக ஜெ. அமீன் நவாஸ்கான் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் மெட்ரோ மாலிக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக, அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலையில் பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில், ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் சமூக இடைவெளியையுடன் கலந்துகொண்டனர். பசுமையை வலியுறுத்தி அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
 
 
  
 
 
 
 

Thursday, July 2, 2020

பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கல் (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஜூலை 02
பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் நிகழாண்டின் சிறப்புத் திட்டமான அன்னபூர்ணா திட்டத்தின் கீழ், உதயசூரியபுரம் கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் சமுதாய மக்கள் 200 பேருக்கு புதன்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, சங்க உறுப்பினர்களான பட்டுக்கோட்டையில் உள்ள மருத்துவர்களின் மருத்துவமனைகளுக்கு முகக்கவசங்கள், கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநர் ஏ.ஆர் அன்பு, பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். பைசல் அகமது, செயலாளர் ஏ. சக்திவேல், பொருளாளர் எஸ் சுல்தான் இப்ராகிம் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 

Friday, March 13, 2020

ரோட்டரி சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கல்!

அதிராம்பட்டினம், மார்ச் 13
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கூரை வீடுகள் தீயில் கருகின. இதில், வசந்தி, நாகம்மாள், சாரதம், தெய்வானை, நாகம்மாள் ஆகியோரின் கூரை வீடுகள் தீயில் கருகி சாம்பலாகியது.

இந்நிலையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், அதன் தலைவர் டி.முகமது நவாஸ்கான் தலைமையில், சுமார் 15 ஆயிரம் மதிப்பிலான சமையல் பாத்திரங்கள், போர்வை, கொசு வலை, தார் பாய், கைலி, குடம் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கி ஆறுதல் கூறினர்.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கச்செயலாளர் எஸ். சாகுல் ஹமீது, பொருளாளர் ஆர்.பிரபு மற்றும் நிர்வாகிகள் சம்சுதீன், ஜமால்  முகமது, வெங்கடேஷ், இப்ராகிம் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Sunday, December 22, 2019

அதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.22
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், அதிரை தீன் மெடிகல்ஸ் - லேப் மற்றும்  புதுக்கோட்டை மா மலர் மருத்துவமனை ஆகியோர் இணைந்து மகளிருக்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடுத்தெரு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு தலைமை வகித்த சங்கத் தலைவர் டி. முகமது நவாஸ்கான் தொடங்கி வைத்துப் பேசினார். செயலாளர் எஸ்.சாகுல் ஹமீது, பொருளாளர் ஆர்.பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், புதுக்கோட்டை மா மலர் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் எம் தில்லை மலர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு, 149 149 பெண்களுக்கு குழந்தைப்பேறு, கர்ப்பப்பை கோளாறு, கருக்குழாய் அடைப்பு, ஹார்மோன் குறைபாடு ஆகியவை தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கினர். இதில், 30 பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

முகாமில், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் எம்.கே முகமது சம்சுதீன், முன்னாள் செயலர் இசட். அகமது மன்சூர், மாவட்ட நிர்வாகிகள் எம்.வெங்கடேசன், உறுப்பினர்கள், எம். மன்சூர், நூருல் அமீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.