.

Pages

Showing posts with label AAF. Show all posts
Showing posts with label AAF. Show all posts

Saturday, July 25, 2020

அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களுக்கு அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் (AAF) கனிவான வேண்டுகோள்!

அமெரிக்கவாழ் அதிரையர் கூட்டமைப்பு (AAF) அதிராம்பட்டினம் பொதுமக்களுக்கு விடுக்கும் கனிவான வேண்டுகோள்.

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மெயின்ரோடு அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சுகாதரத்துறையினரால் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. காய்ச்சல், சளி, இருமல், மூச்சு திணறல் உள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து மருத்துவச் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வெளிநாட்டில் வசிக்கும் அதிரையர்கள் தங்கள் குடும்பத்தாருக்கு மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

அதிக அளவில் காய்ச்சல் பரிசோதனை நடத்துவதன் மூலம் நோய்தொற்று ஏற்பட்டுள்ளோரை கண்டறிந்து தொடர் சிகிச்சை அளிப்பதன் மூலம் இழப்புகளை தவிர்த்து இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தல்.

காய்ச்சல் உள்ளவர்கள் அலட்சியம் செய்யாமல் தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் பாதுகாத்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்திற்காக மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்கும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் நம்முடைய முழு ஒத்துழைப்பை வழங்குவோம்.

இப்படிக்கு,
அமெரிக்கவாழ் அதிரையர் கூட்டமைப்பு (AAF)

Wednesday, September 18, 2019

AAF பிரதிநிதிகள் எம்.எல்.ஏ சி.வி சேகருடன் சந்திப்பு (படங்கள்)

பட்டுக்கோட்டை, செப்.18
அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) பிரதிநிதிகள் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை இன்று புதன்கிழமை காலை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை AAF அமைப்பின் சார்பில், அதன் நிர்வாகிகள் ஷிப்லி, அப்துல் கபூர், மீயண்ணா சலீம் உள்ளிட்டோர் கலிபோர்னியா மாகாணம் சான் ஹொசே, ஃபேர்மோன்ட் ஹோட்டலில் சந்தித்து அதிராம்பட்டினம் பொதுநலன் சார்ந்த 7 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை அவரது அலுவலகத்தில் அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) பிரதிநிதிகள் பேராசிரியர் எம்.ஏ  அப்துல் காதர், எம்.எஸ்.எம் முகமது யூசுப், சேக்கனா எம்.நிஜாமுதீன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது, அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம் ஆகியோர் உடனிருந்தனர்.

மனுவில்,  தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்களின் நலன் கருதி, அதிராம்பட்டினத்தில் 110/11 KVA துணை மின் நிலையம் அமைக்கவும், அதிராம்பட்டினம் குடிநீர் தேவையை போக்க பம்பிங் (இறைவை) நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும்,  அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவையை தொடங்கவும், அதிராம்பட்டினத்தில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை, அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம், அதிராம்பட்டினத்தை புதிய தாலுகாவாக தரம் உயர்த்தி அறிவிப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், பழுதடைந்த அதிராம்பட்டினம் ~ மகிழங்கோட்டை கிராம இணைப்புச் சாலை சீரமைப்பு, அதிராம்பட்டினத்திலிருந்து மதுக்கூர் வழியாக மன்னார்குடி மற்றும் சென்னை, மதுரை ஆகிய ஊர்களுக்கு நேரடி அரசுப் பேருந்து இயக்கவும், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து ரயில் நிலையம் வரையிலான சுமார் 650 மீட்டர் நீளம் கொண்ட சாலையை சீரமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டன.

மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ சி.வி சேகர் மனுவில் கூறியிருக்கும் கோரிக்கைகள் நிறைவேற தாம் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
 

Friday, September 6, 2019

அமெரிக்காவில் AAF நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு!

அதிரை நியூஸ்: செப்.06
அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்ட அமைப்பு அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF). இந்த அமைப்பின் மூலம் பல்வேறு சமூக நலப்பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை AAF அமைப்பின் சார்பில், அதன் நிர்வாகிகள் ஷிப்லி, அப்துல் கபூர், மீயண்ணா சலீம் உள்ளிட்டோர் கலிபோர்னியா மாகாணம் சான் ஹொசே, ஃபேர்மோன்ட் ஹோட்டலில் சந்தித்து 7 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

மனுவில்,  தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்களின் நலன் கருதி, அதிராம்பட்டினத்தில் 110/11 KVA துணை மின் நிலையம் அமைக்கவும், அதிராம்பட்டினம் குடிநீர் தேவையை போக்க பம்பிங் (இறைவை) நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும்,  அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவையை தொடங்கவும், அதிராம்பட்டினத்தில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை, அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம், அதிராம்பட்டினத்தை புதிய தாலுகாவாக தரம் உயர்த்தி அறிவிப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழக முதல்வரிடம் AAF அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது; 
 
 
 

Tuesday, August 28, 2018

அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் (AAF) மூன்றாம் காலாண்டு சந்திப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக.28
அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு  அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) தொடங்கப்பட்டது. இந்த அமைப்பினர் கால் ஆண்டிற்கு ஒரு முறை குடும்பத்துடன் ஒன்று கூடி தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதுடன், சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்வது வழக்கம். குறிப்பாக பெருநாள் பண்டிகைகள், விடுமுறை தின காலங்களில் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதன்படி, அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் (AAF) 3 ஆம் காலாண்டு சந்திப்புக் கூட்டம், கலிபோர்னியா மாஹானம் ஃபேர்ஃபீல்ட் (Fairfield) நகர் லாரல் க்ரீக் பார்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

நிகழ்ச்சியை, அவ்வமைப்பின் முன்னாள் செயலர் நசீர் அகமது கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் தலைவர் புஹாரி தலைமை வகித்தார்.

கூட்டத்தில், AAF நிதி நிலை அறிக்கையை செயலாளர் நஜ்முதீன் சமர்ப்பித்தார். பின்னர், AAF ஆற்றிய சேவை - செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றிய தகவலை எடுத்துரைத்தார். இதில், அமைப்பின் அடுத்த இரண்டு ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில், அமைப்பின் துணைத்தலைவர் சலீம் நன்றி கூறினார்.

இந்தக் கூட்டத்தில், அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். இதில், வடக்கு கலிபோர்னியா வாழ் அதிரை பிரமுகர்கள் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Wednesday, April 4, 2018

அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின்(AAF) ~ 2018ம் ஆண்டு முதல் காலாண்டு சந்திப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஏப்.04
அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு  அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) தொடங்கப்பட்டது. இதையடுத்து கால் ஆண்டிற்கு ஒரு முறை அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடி தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதுடன் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்வது வழக்கம். குறிப்பாக பெருநாள் பண்டிகைகள், விடுமுறை தின காலங்களில் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதன்படி, அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் (AAF) 2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக் கூட்டம் கலிபோர்னியா மாகானம் வல்லோஹோ நகரில் உள்ள இஸ்லாமிக் சென்டரில் கடந்த [ 01-04-2018 ] ஞாயிறு மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

நிகழ்ச்சியை, இக்பால் M. சாலிஹ் புதல்வர் இஸ்மாயில் இக்பால் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, AAF துணைத் தலைவர் சலீம் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், AAF நிதி நிலை அறிக்கையை பொருளாளர் முஹம்மத் சமர்ப்பித்தார். பின்னர், AAF சேவை - செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய தகவலை செயலாளர் நஜ்முதீன் எடுத்துரைத்தார்.

கூட்டத்தில், லாஸ் ஏஞ்சலஸ் பகுதி AAF பொறுப்பாளர் டாக்டர் ராசிக் கலந்துகொண்டு, அண்மையில் புதிதாக தொடங்கி இருக்கும் அதிரை மேம்பாட்டு சங்கமம் பற்றியும், அதன் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.

இந்த கூட்டத்தில், வடக்கு கலிபோர்னியா வாழ் அதிரை பிரமுகர்கள் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tuesday, February 27, 2018

அமெரிக்காவில் ஆளூர் ஷா நவாஸ்க்கு AAF சார்பில் சிறப்பான வரவேற்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: பிப்.27
அமெரிக்காவில் அதிகமான அதிரை பிரமுகர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு (AAF) தொடங்கப்பட்டது.  கால் ஆண்டிற்கு ஒரு முறை அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடி தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதுடன் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்வது வழக்கம். குறிப்பாக பெருநாள் பண்டிகைகள், விடுமுறை தின காலங்களில் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்துவரும் ஆளூர் ஷா நவாஸ் சந்திப்பு நிகழ்ச்சி, அதிராம்பட்டினம் அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) சார்பில், ப்ரீ மவுண்ட் கோகோநட் பார்டி ஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, 'தொழிலதிபர்' ஜபருல்லாஹ் தலைமை வகித்தார். ஏ.ஏ.எஃப் துணைத் தலைவர் சலீம் வரவேற்றுப் பேசினார். இதில், சிறப்பு அழைப்பாளராக ஆளூர் ஷாநவாஸ் கலந்துகொண்டு, 'இந்திய அரசியலில் இஸ்லாமியர்களின் பங்கு' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில்,  ஏராளமான அதிராம்பட்டினம் பிரமுகர்கள் கலந்துகொண்டு, ஆளூர் ஷா நவாஸ்க்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
 

Tuesday, December 26, 2017

அதிராம்பட்டினம் அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) சந்திப்புக் கூட்டம் (படங்கள்)

அதிரை நியூஸ்: டிச. 26
அமெரிக்காவில் அதிகமான அதிரை பிரமுகர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு (AAF) தொடங்கப்பட்டது. இதையடுத்து கால் ஆண்டிற்கு ஒரு முறை அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடி தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதுடன் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்வது வழக்கம். குறிப்பாக பெருநாள் பண்டிகைகள், விடுமுறை தின காலங்களில் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதன்படி, அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு சார்பில், சந்திப்புக் கூட்டம், கலிபோர்னியா மகாணம் வல்லோஹோ நகரில் உள்ள இஸ்லாமிக் சென்டர் வளாகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

ஜே. சேக் அப்துல் காதர் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் புகாரி தலைமை வகித்து, உரை நிகழ்த்தினார். கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் ஆகியவற்றை, அவ்வமைப்பின் செயலாளர் நஜ்முதீன் விளக்கிப் பேசினார். கூட்டமைப்பின் நிதிநிலை அறிக்கையை பொருளாளர் முகமது வாசித்தார். கூட்டத்தில், அதிராம்பட்டினத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக நலப் பணிகள் குறித்து பேசப்பட்டது.

முன்னதாக, அவ்வமைப்பின் துணைத் தலைவர் சலீம் வரவேற்றுப் பேசினார். கூட்ட முடிவில், துணைச் செயலாளர் அதிரை சித்தீக் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஏராளமான அதிராம்பட்டினம் பிரமுகர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
ka
 
 
 
 
 
 
 
 

Monday, September 25, 2017

அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) அரையாண்டு சந்திப்புக் கூட்டம் (படங்கள்)

அதிரை நியூஸ்: செப். 25
அமெரிக்காவில் அதிகமான அதிரையர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு (AAF) தொடங்கப்பட்டது. இதையடுத்து கால் ஆண்டிற்கு ஒரு முறை அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடி தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதுடன் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்துவருவது வழக்கம். குறிப்பாக பெருநாள் பண்டிகைகள், விடுமுறை காலங்களில் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு சார்பில் அரையாண்டுகால சந்திப்புக் கூட்டம், கலிபோர்னியா மகாணம் வல்லோஹோ நகரில் உள்ள ப்ளூ ராக்ஸ் ஸ்ப்ரிங் மாநகராட்சி பார்க்கில் நடைபெற்றது.

ஜே. சேக் அப்துல் காதர் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் புகாரி தலைமை வகித்து, உரை நிகழ்த்தினார். கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து, அவ்வமைப்பின் செயலாளர் நஜ்முதீன் விளக்கிப் பேசினார். கூட்டமைப்பின்
நிதிநிலை அறிக்கையை பொருளாளர் முகமது வாசித்தார்.

கூட்டத்தில், அதிராம்பட்டினத்தில் அண்மை காலமாக சுகாதரச் சீர்கேடு ஏற்பட்டு வேகமாக பரவி வரும் காய்ச்சல் நோய் குறித்து கவலையுடன் ஆலோசனை செய்யப்பட்டது. அதிரையில் சுகாதாரப் பணிகளை துரிதப்படுதும் நடவடிக்கை மேற்கொள்வது, அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தூய்மை பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல், மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் தேவைகளை பூர்த்தி செய்வது, குறிப்பாக பிலால் நகர் பள்ளிவாசலில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை மற்றும் சில குறைபாடுகளை போக்க நடவடிக்கை எடுப்பது, அதிராம்பட்டினத்தில் பள்ளிவாசல்கள் இமாம்களின் ஊதியம் குறித்து விவாதிக்கப்பட்டன. ஊதியத்தை உயர்த்தி வழங்குவது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.

குடும்பத்தினரோடு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு, அமெரிக்கா திரும்பியுள்ள ஹக்கீம் மற்றும் சேட்பேட் ஜபருல்லா ஆகியோர் ஹஜ் பயணம் குறித்து தங்களது அனுபவங்களை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர். கூட்டத்தில் இக்குடும்பத்தினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்ட முடிவில், அவ்வமைப்பின் துணைச் செயலாளர் அதிரை சித்தீக் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பினர் பலர் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.