.

Pages

Wednesday, April 27, 2016

செய்னாங் குளத்தை அலங்கரிக்கும் வெள்ளை கொக்கு !

அதிராம்பட்டினம், கீழத்தெரு பகுதியில் அமைந்துள்ள செய்னாங்குளம் அதிரை பேரூராட்சி சார்பில் நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு புனரமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் குளத்தில் நீர் நிரம்பியது. அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வழக்கத்தை வீட தற்போது கடும் வெப்பம் நிலவி வருவதால் குளத்தின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வற்றும் நிலையில் உள்ளது.

இந்தநிலையில் தினமும் அதிகாலை நேரங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட வெள்ளை கொக்குகள் குளத்திற்கு வந்து செல்கின்றன. குளத்தில் உள்ள சிறிய மீன் குஞ்சுகளை இரையாக உண்ணுகின்றன. குளத்தை அலங்கரிக்கும் வெள்ளை கொக்குகளின் அணிவகுப்பு காட்சியை இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் ரசித்து பார்க்கின்றனர்.
 

அல் அமீன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முன்னாள் அரபி ஆசிரியர் வஃபாத் !

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அல் அமீன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் அரபிக் ஆசிரியராக பணியாற்றிய சேக் அலாவுதீன் அவர்கள் கடந்த [ 23-04-2016 ] சனிக்கிழமை அன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

தகவல்: M.F முஹம்மது சலீம்
முன்னாள் மாணவர், அல் அமீன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, 

மரண அறிவிப்பு ! [ மஹ்ரூபா அவர்கள் ]

சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்த மர்ஹூம் அஹமது கபீர், மர்ஹும் மு.கீ.மு முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் ஆகியோரின் பேத்தியும், சேக் அப்துல் காதர் அவர்களின் மகளுமாகிய மஹ்ரூபா வர்கள் நேற்று இரவு இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மரண அறிவிப்பு ! [ ஒஜீஹா அம்மாள் அவர்கள் ]

தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது அலியார் அவர்களின் மகளும், மர்ஹூம் 'பாபி டைலர்' சுல்தான் முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அபூசாலிஹ் அவர்களின் சகோதரியும், முண்டாசு காதர் அவர்களின் கொழுந்தியாவும், யஹ்யா கான், நசீர் அஹமது, ரபீக்கான், தீன் முஹம்மது ஆகியோரின் பெரிய தாயாருமாகிய ஒஜீஹா அம்மாள் வர்கள் நேற்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 9 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Tuesday, April 26, 2016

அதிரை பேருந்து நிலையத்தில் நடிகர் குண்டுகல்யாணம் வாக்கு சேகரிப்பு !

அதிராம்பட்டினம் ஏப்-26
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி சேகரை ஆதரித்து அதிரை பேரூந்து நிலையத்தில் நடிகர் குண்டு கல்யாணம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலளார் மலை அய்யன், இளைஞர் அணி அமைப்பாளர் ஜே. பிரகாஷ் நாராயணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் அதிரை வி. சேதுராமன், அதிரை பேரூர் அதிமுக செயலாளர் பிச்சை, துணைச் செயலாளர் முஹம்மது தமீம் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 


    

பட்டுக்கோட்டை தொகுதி எஸ்டிபிஐ வேட்பாளர் முஹம்மது இலியாஸ் வேட்புமனு தாக்கல் !

அதிராம்பட்டினம் ஏப்-26
பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முஹம்மது இலியாஸ், தேர்தல் நடத்தும் துணை அலுவலரும், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் டி.எஸ் ராஜசேகரிடம் தனது வேட்புமனுவை இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.

முன்னதாக தனது கட்சியினருடன் பட்டுக்கோட்டை இரயில் நிலையம் இப்ராஹிம் பள்ளிவாசல் அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையம், மணிக்கூண்டு வழியாக சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தார்.

இதில் வேட்பாளர் முஹம்மது இலியாஸ் தனிச்செயலர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி, எஸ்.டி.பி.ஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி சேக், எஸ்டிபிஐ கட்சி திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.ஏ லத்திப், திருவாரூர் மாவட்ட செயலாளர் சேக்தாவூது, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அபுல்ஹசன், பொருளாளர் சேக் ஜலாலுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் உடன் சென்றனர்.

அதிரையில் திமுக கூட்டணி கட்சி தேர்தல் பணிக்குழு அமைப்பு !

அதிராம்பட்டினம் ஏப்-26
திமுக தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு அதிரை பேரூர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜலீலா முஹம்மது முகைதீன் தலைமை வகித்தார். திமுக - காங்கிரஸ் - மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரன் அவர்களின் வெற்றிக்கு தீவிரமாக பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்த தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டன. இதில் தலைவராக ஜலீலா முஹம்மது முகைதீன், துணைத்தலைவர்களாக பழஞ்சூர் K செல்வம், எஸ்.ஹெச் அஸ்லம், செயலாளராக இராம. குணசேகரன், பொருளாராக டி.சபீர், ஒருங்கிணைப்பாளராக அன்சர்கான், துணைச்செயலாளர்களாக கே.கே ஹாஜா நஜ்முதீன், ஏஆர் சாதிக்பாட்சா, எஸ்.கார்த்திக் ஆகியோரும், உறுப்பினர்களாக ஜே. சாகுல் ஹமீது, கோடி முதலி, இன்பநாதன், முத்துராமன், மரைக்கா இத்ரீஸ் அஹமது, முல்லை மதி, தில்லை நாதன், நாகராஜன், வீரப்பன், பகுருதீன், ஹாலித், செய்யது புஹாரி, சேக்காதி, நசுருதீன், அபூபக்கர், சேக் அப்துல்லா, ஜமால் முஹம்மது, சாகுல் ஹமீது, கட்டபொம்மன், நாராயணசாமி, அய்யா கோவிந்தன், அப்துல் ரெஜாக், சாகுல்ஹமீது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

மேலத்தெருவில் மனைகள் விற்பனை !

அதிராம்பட்டினம் மேலத்தெரு சானவயல் விரிவாக்கம் பகுதியில் குடியிருப்பு மனைகள் விற்பனைக்கு உள்ளது. மனைகளை நேரில் பார்வையிட மற்றும் மேலதிக தகவலுக்கு நில உரிமையாளரை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு: 0091 9790282585
 

குறிப்பு:  தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.