அதிராம்பட்டினம், மே 26
விவசாயிகள், குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகமெங்கும் அரசு அலுவலகங்கள் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தை நடத்த தமிழக காங்கிரஸ் கட்சி அறிவுறுத்திருந்தது.
அதன் படி, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே. தமீம் அன்சாரி தலைமையில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன், துணைத்தலைவர் நாராயண சாமி, பொருளாளர் ஜி.திலகராஜ் கட்டபொம்பன் உள்ளிட்ட 4 பேர் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் மின்சார வாரிய அலுவலகம் ஆகியவற்றின் முன்பாக, கையில் கருப்பு கொடி ஏந்தி, சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மின்சார சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். சுமார் 2 நிமிடத்திலேயே இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிறைவுக்கு வந்தன.
விவசாயிகள், குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகமெங்கும் அரசு அலுவலகங்கள் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தை நடத்த தமிழக காங்கிரஸ் கட்சி அறிவுறுத்திருந்தது.
அதன் படி, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே. தமீம் அன்சாரி தலைமையில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன், துணைத்தலைவர் நாராயண சாமி, பொருளாளர் ஜி.திலகராஜ் கட்டபொம்பன் உள்ளிட்ட 4 பேர் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் மின்சார வாரிய அலுவலகம் ஆகியவற்றின் முன்பாக, கையில் கருப்பு கொடி ஏந்தி, சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மின்சார சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். சுமார் 2 நிமிடத்திலேயே இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிறைவுக்கு வந்தன.












































































