உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்திற்கு, அதிராம்பட்டினம் பேரூர் காங்கிரஸ் கட்சி தலைவர் காசிம் தமீம் அன்சாரி தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், துணைத்தலைவர் நாராயண சாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
அதிரை பேரூர் நிர்வாகிகள் பி.திலகராஜ் கட்டபொம்மன், ராஜேந்திரன் உள்பட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.



































































