அதிராம்பட்டினம், ஜன.26
அதிராம்பட்டினம், நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்தியாவின் 71-வது குடியரசு தின கொடியேற்றும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளரும், முன்னாள் உதவித் தலைமை ஆசிரியருமாகிய ஹாஜி என்.எம் முகமது ஹனீபா இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் இசட். அப்துல் மாலிக் குடியரசு தின விழா உரை நிகழ்த்தினார்.
முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியை மாலதி வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ் செய்திருந்தார். விழா முடிவில் பள்ளி ஆசிரியர் கலா தேவி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்விக்குழு முன்னாள் தலைவர் முகமது சரீப், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் எச்.முகமது இப்ராஹீம், ஏ. சாகுல் ஹமீது, மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
அதிராம்பட்டினம், நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்தியாவின் 71-வது குடியரசு தின கொடியேற்றும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளரும், முன்னாள் உதவித் தலைமை ஆசிரியருமாகிய ஹாஜி என்.எம் முகமது ஹனீபா இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் இசட். அப்துல் மாலிக் குடியரசு தின விழா உரை நிகழ்த்தினார்.
முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியை மாலதி வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ் செய்திருந்தார். விழா முடிவில் பள்ளி ஆசிரியர் கலா தேவி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்விக்குழு முன்னாள் தலைவர் முகமது சரீப், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் எச்.முகமது இப்ராஹீம், ஏ. சாகுல் ஹமீது, மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.























































