.

Pages

Showing posts with label முஸ்லீம் லீக். Show all posts
Showing posts with label முஸ்லீம் லீக். Show all posts

Monday, October 12, 2020

உ.பி அரசைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

தஞ்சாவூர், அக்.12
உ.பி, ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது தாக்குதல் நடத்திய உத்தரபிரதேச அரசை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தஞ்சை ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. 

ஆர்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம் ஜெய்னுல் ஆபிதீன் தலைமை வகித்தார். அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.எம் அப்துல் காதர், வல்லம் ஜெ.பசீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ (திமுக), டி.கே.ஜி நீலமேகம் எம்.எல்.ஏ (திமுக), து. கிருஷ்ணசாமி வாண்டையார் (காங்கிரஸ்), பி.ஜி இராஜேந்திரன் (காங்கிரஸ்), ஒய்.அலாவுதீன் (காங்கிரஸ்) மற்றும் மதிமுக, சிபிஎம், சிபிஐ, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டித்துப் பேசினர்.

முன்னதாக, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் வழக்குரைஞர் ஏ.முனாப் வரவேற்றுப் பேசினார். நிறைவில், தஞ்சை மாநகரப் பொருளாளர் ஏ.கே முகமது முஸ்தபா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் உத்தரபிரதேச அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

இந்த ஆர்பாட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது, எம்.கே.எம் முகமது அபூபக்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 






Friday, August 7, 2020

பேராசிரியர் கே.எம் காதர் மொய்தீன் பூரண நலம் பெற அதிரையில் சிறப்பு பிரார்த்தனை!

அதிராம்பட்டினம், ஆக.07
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக, அக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலர் கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் மருத்துவமனையில் உள்ள தேசியத் தலைவர் பூரண நலம் பெற அனைவரும் பிரார்த்திக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் கவிஞர் அ.ஷேக் அப்துல்லாஹ் தலைமையில், பொருளாளர் வழக்குரைஞர் ஏ.முனாப் முன்னிலையில், சிறப்பு பிரார்த்தனை நிகழ்வு அக்கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக மவ்லவி எம். முகைதீன் அப்துல் காதர் கலந்துகொண்டு, மருத்துவமனையில் உள்ள தேசியத் தலைவர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப துஆ செய்தார்.

இந்நிகழ்வில், அக்கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

Sunday, January 26, 2020

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் குடியரசு தின விழா!

அதிராம்பட்டினம், ஜன-26
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் இந்திய 71-வது குடியரசு தின விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு தலைமை வகித்த, அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். செயலர் வழக்கறிஞர் அப்துல் முனாப், பொருளாளர் கவிஞர் ஏ.ஷேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அபுதாபி தமிழ்ச்சங்க பொதுச்செயலாளரும், அக்கட்சியின் துணைத்தலைவருமாகிய மு. காதிர் முகைதீன் கலந்துகொண்டு குடியரசு தின விழா உரை நிகழ்த்தினார்.

முன்னதாக, கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது வரவேற்றுப் பேசினார். முடிவில் மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது நன்றி கூறினார். இவ்விழாவில், முஸ்லீம் லீக் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.

Monday, December 23, 2019

அதிரை அமீனுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு!

அதிராம்பட்டினம், டிச.23
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். செயலாளர் வழக்குரைஞர் ஏ.முனாப், துணைச்செயலாளர் எம்.கே.எம் அபூபக்கர், மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது, மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பட்டுக்கோட்டை ஒன்றியம், ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக 'கை உருளை' சின்னத்தில் போட்டியிடும், அதிரை அமீன் என்கிற முகமது அமீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரியதன் அடிப்படையில், அவரை ஆதரிப்பது, அவரது வெற்றிக்காக பாடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர், வேட்பாளர் அதிரை அமீனை அலுவலகத்திற்கு அழைத்து ஆதரவை  அவரிடம் நேரில் தெரிவித்துக்கொண்டனர். மேலும், ஏரிப்புறக்கரை ஊராட்சியின் பின் தங்கிய பகுதிகளில் முறையான சாலை வசதி, வடிகால் வசதி, மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை கோரிக்கையாக முன் வைத்தனர்.

Monday, December 16, 2019

மாவட்ட செய்தி - மக்கள் தொடர்பு அலுவலரை சந்தித்து வாழ்த்து!

அதிரை நியூஸ்: டிச.16
தஞ்சாவூர் மாவட்ட செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.பி சுருளி பிரபுவை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம் ஜெய்னுல் ஆபிதீன், மாவட்ட ஊடகப் பிரிவு செயலாரும், மணிச்சுடர் நாளிதழ் மாவட்ட செய்தியாளர் ஏ. சாகுல் ஹமீது ஆகியோர் மரியாதை நிமித்தமாக இன்று திங்கட்கிழமை காலை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tuesday, November 26, 2019

அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் போட்டியிட முஸ்லீம் லீக் முடிவு!

அதிராம்பட்டினம், நவ.26
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகளின் கலந்தாலோசனைக்கூட்டம் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். செயலர் வழக்குரைஞர் ஏ.முனாப், பொருளாளர் ஏ.சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூர் வார்டு கவுன்சிலர் பதவிக்கு கட்சியின் ஏணி சின்னத்தில் போட்டியிடுவது எனவும், இதில், வெற்றி வாய்ப்புள்ள 6, 7, 8, 10, 11 ஆகிய 5 வார்டுகள் குறித்து கட்சியின் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோழமைக் கட்சி திமுக அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகளிடம் கடிதம் மூலம் விருப்பத்தை தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, அக்கட்சியின் மாவட்ட ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது வரவேற்றார். நிறைவில், அக்கட்சியின் மூத்த உறுப்பினர் எம்.ஏ. அபுல்ஹசன் ஹாஜியார் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், எம்.கே.எம் அபு பக்கர், எம்.ஆர் ஜமால் முகமது, மு.காதர் முகைதீன், இக்பால், ஏ. முகமது முகைதீன், செய்யது முகமது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Saturday, October 19, 2019

நவாஸ் கனி எம்.பி அதிரை வருகை: சென்னைக்கு விரைவு ரயில் இயக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம், அக்.19
சென்னைக்கு உடனடியாக விரைவு ரயில் இயக்கவும், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த டிக்கெட் முன்பதிவு கூடம் அமைக்கக்  கோரி இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனியிடம், அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் மனு அளித்தனர்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் (வயது 65) அவர்கள், கடந்த (செப்.25) அன்று, அதிராம்பட்டினத்தில் காலமானார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதத்தில், இன்று (அக்.19) சனிக்கிழமை மாலை அதிராம்பட்டினம் வருகை தந்த இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனியிடம், காரைக்குடி ~ திருவாரூர்  வழியாக சென்னைக்கு உடனடியாக விரைவு ரயில் இயக்கவும், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த டிக்கெட் முன்பதிவு கூடம் அமைக்கக் கோரியும் அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கே.நவாஸ் கனி எம்.பி,  காரைக்குடி ~ திருவாரூர் வழித்தடத்தில் விரைவு ரயில் இயக்குதல் பற்றி ரயில்வே துறை அமைச்சகத்தில் பலமுறை தான் வலியுறுத்தி வந்ததாகவும், மீண்டும் இதுகுறித்து, இரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைப்பதாவும் தெரிவித்தார். மேலும், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், ஒருங்கிணைந்த டிக்கெட் முன்பதிவு கூடம் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறினார்.

முன்னதாக, மறைந்த எஸ்.எஸ்.பி நசுருதீன் மறுமை வாழ்வு சிறக்க தாம் பிரார்த்தனை செய்வதாக அக்குடும்பத்தரிடம் தெரிவித்தார். பின்னர், மருத்துவ ஓய்வில் இருந்து வரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிராம்பட்டினம் முன்னாள் செயலாளர் ஹாஜி எம்.ஏ முகமது சாலிகு இல்லம் சென்று நலம் விசாரித்தார்.

அப்போது, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம் ஜெய்னுல் ஆபீதீன், தஞ்சாவூர் மாநகரத் தலைவர் ஹாஜி ஜி.எஸ் ஜாஃபர், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், செயலாளர் வழக்குரைஞர் ஏ.முனாப், பொருளாளர் ஏ.சேக் அப்துல்லாஹ், துணைச் செயலாளர்கள் முகமது அபூபக்கர், மு.காதர் முகைதீன், மாவட்ட ஊடகப் பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது, இக்பால், சம்சுதீன், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Monday, October 7, 2019

அதிரை எஸ்.எஸ்.பி நசுருதீன் மறைவுக்கு இரங்கல் கூட்டம்!

அதிராம்பட்டினம், அக்.07
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் (வயது 65) அவர்கள், கடந்த (செப்.25) அன்று அதிராம்பட்டினத்தில் காலமானார்.

இவரது மறைவையொட்டி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் ஏ.சேக் அப்துல்லாஹ், இணைச் செயலாளர் மு.காதர் முகைதீன் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர்.

முன்னதாக, அக்கட்சியின் மாவட்ட ஊடகப் பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது வரவேற்றார். முடிவில், அக்கட்சியின் அதிரை பேரூர் துணைச் செயலாளர் அபூபக்கர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, கட்சி அலுவலகத்தில் உள்ள முஸ்லீம் லீக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. மேலும், மறைந்த எஸ்.எஸ்.பி நசுருதீன் மறுமை வாழ்வு சிறக்க அக்கட்சியினர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

Wednesday, September 25, 2019

முஸ்லீம் லீக் கட்சி மாநில துணைத் தலைவர் அதிரை எஸ்.எஸ்.பி நசுருதீன் வஃபாத்!

அதிராம்பட்டினம், செப்.25
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் (வயது 65) அவர்கள் அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் இன்று அதிகாலை வஃப்பாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (25-09-2019) லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Saturday, July 13, 2019

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவராக எம்.ஜெ அப்துல் ரவூப் நியமனம்!

அதிராம்பட்டினம், ஜூலை 13
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவராக பொறுப்பில் இருந்த ஹாஜி பி.எஸ் அப்துல் ஹமீது வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, அவர் வகித்து வந்த தலைவர் பொறுப்பு அக்கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட துணைச்செயலாளராக பொறுப்பில் இருந்து ஹாஜி எம்.ஜெ அப்துல் ரவூப் நியமனம் செய்திருப்பதாக அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்னுல்ஆபிதீன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

Friday, April 12, 2019

மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் ~ பேராசிரியர் காதர் முகைதீன் தேர்தல் பரப்புரை!

மல்லிபட்டினம், ஏப்.12
மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன்.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிபட்டினத்தில் திமுக தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கத்திற்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் முகைதீன் மக்களிடம் வாக்குகள் சேகரித்து பேசியது;
மாநிலங்களின் உரிமைகளை நசுக்குகின்ற கொள்கைகளை பின்பற்றி வரும் நீங்கள் தமிழக மக்களிடம் ஓட்டு போடுங்கள் என வெட்கமில்லாமல் கேட்பது தமிழக மக்களை ஏமாளிகள் என நினைத்துள்ளார். தமிழ் நாட்டு மக்கள் ஒரு போதும் ஏமாறப் போவதில்லை. மத்தியில் நாளை ஆட்சி செய்யப்போகிற ராகுல் காந்தி அளித்திருக்கும் தேர்தல் அறிக்கையில், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மீனவ சமுதாயத்தில் உருவாகும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மத்தியில் தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என கூறியிருக்கிறார். இதன் மூலம் மீனவ சமுதாயத்தில் நல்ல காலம் பிறக்கும் என்பதில் ஐயமில்லை. ஏழை, எளிய குடும்பங்களுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் வீதம், ஆண்டு ஒன்றுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என கூறியிருக்கிறார். ஏழ்மையைப் போக்க வேலை வாய்ப்புகளை கொடுத்திருக்க வேண்டும். வருமானத்தை பெருக்குவதற்கு வழிவகை செய்திருக்க வேண்டும். ஆனால், இன்றைய மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை போட்டு, குறைவாக வருவாய் ஈட்டி வந்த விவசாயிகள், சிறு, குறு தொழில் செய்யும் வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரியை மாற்றி அமைப்போம் என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். மத்திய மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் சுமார் 4-1/2 கோடி மக்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். சென்னை, திருப்பூர், வேலூர், கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன.

வேலை வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கும் விதத்தில், நாட்டிலே தொழிற்கூடங்களை அதிகளவில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், படித்த இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு இலகுவாக விண்ணப்பித்து உரிமம் பெற முடியும் என்று ராகுல் காந்தி தேர்தல் அறிவிப்பில் கூறியிருக்கிறார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ் பழனி மாணிக்கத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலான ஆட்சியும், 22 தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் ஆட்சி அமையும்' என்றார்.