இந்த தேர்வை தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை நடத்துகிறது. இங்கிருந்து ஆசிரியர்கள் சென்று தேர்வை நடத்தி முடித்த பின்னர் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை போன்று துபாயில் தேர்வு எழுதிய 20 மாணவர்களில் 19 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95 சதவீதமாகும்.
இதில் மாணவர் முகம்மது குப்தீன் ஜாபர்அலி 1116 மதிப்பெண் பெற்று முதலிடம் வகித்தார். ரஷிதா 1059 மார்க் எடுத்து 2–வது இடமும், ஆயிஷா 1045 மார்க் பெற்று மூன்றாவது இடமும் பெற்றனர்.
இந்த பள்ளியில் அரபிக் உள்ளிட்ட பிற மொழிப் பாடங்கள் இருந்தபோதிலும் தமிழ் மாணவர்கள் தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:மாலைமலர்

வாழ்த்துக்கள்.! பாராட்டுக்கள்! மகிழ்ச்சி!
ReplyDeleteகடல்கடந்து சென்று கல்விகற்றாலும் கடுகளவும் சோடைபோகாமல் ஜொலித்து வென்று வெற்றிக் கொடி நட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனி அதிரையின் கல்விக்காலம்.
ReplyDelete