.

Pages

Tuesday, May 5, 2015

அதிரை தபால் நிலையத்தில் ரயில் முன்பதிவு மையம்: தீவிர முயற்சியில் அதிரை ஆர்வலர்கள் !

ரயில் டிக்கெட் முன்பதிவிற்காக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பயணிகள் பட்டுக்கோட்டை, தஞ்சை, மன்னார்குடி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியுள்ளதால், தேவையற்ற அலைச்சலை சந்தித்து வருகின்றனர். எனவே அதிரையில் தலைமை தபால் நிலையம் அல்லது அதிரையின் பிரதான மத்திய பகுதியில் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பெரும்பாலான பொதுமக்கள் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் நமதூர் சமூக ஆர்வலரும், யூனைட்டட் பவுண்டேசன் அமைப்பின் செயலாளருமாகிய அப்துல் ரெஜாக் அவர்கள் இதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறார். இவருக்கு உறுதுணையாக நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், அதிரை பைத்துல்மால் செயலாளர் அப்துல் ஹமீது, மனோரா பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகி ஜலீலா ஜுவல்லரி முஹம்மது மொய்தீன் ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கை நிறைவேற தஞ்சை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. பிரசுராமன் அவர்கள் பெரிதும் உதவிருக்கிறார்.

இதுதொடர்பாக சம்பந்தபட்ட திருச்சி ரயில்வே மண்டல வணிக மேலாளர் மற்றும் மண்டல தபால் துறை அலுவலர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பணிக்காக தனி ஊழியர்கள் மற்றும் அதிரை தபால் நிலையத்தில் இடம் ஆகியன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் தொலை தொடர்பு கேபிள் இணைப்பு வழங்கப்பட்டவுடன் ரயில் முன்பதிவு மைய பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. நல்ல முயற்சி வெற்றியடைய துஆ செய்வோம்.

    முயற்சித்த சமூக அர்வலர்களுக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்க பிரார்த்திப்போம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.